திரு. அந்தோனி நிஹால் பொன்சேகா 2022 மே 26 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னர் 2016 யூலை தொடக்கம் 2020 மே வரை நாணயச் சபையில் பணியாற்றியிருந்தார்.
இவர் கொழும்பு, இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து தனது விஞ்ஞானமானிப் பட்டத்தை பெற்றுக்கொண்டதுடன் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய வங்கியாளர்கள் நிறுவனத்தின் சக உறுப்பினரும் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய பிணையங்கள் மற்றும் முதலீடுகள் நிறுவனத்தின் கௌரவ சக உறுப்பினருமாவார். இவர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் மூத்த சுயாதீனப் பணிப்பாளர் மற்றும் குழுமக் கணக்காய்வுக் குழுவின் தலைவர், பீனிக்ஸ் இன்டஸ்றீஸ் லிமிடெட்டின் தலைவர், பிரான்டிக்ஸ் லங்கா லிமிடெட்டின் நிறைவேற்றுத்தரமற்ற பணிப்பாளர் மற்றும் கணக்காய்வுக் குழுத் தலைவர் அத்துடன் பீனிக்ஸ் வென்ஜெர்ஸ் லிமிடெட்டின் நிறைவேற்றுத்தரமற்ற பணிப்பாளர் முதலீட்டுக் குழுத் தலைவர் ஆகிய பதவிகளை வகிக்கின்றார்.