இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவினைக் குறிக்கும் முகமாக இலங்கை மத்திய வங்கி பன்னாட்டு ஆராய்ச்சி ஆய்வரங்கு – 2025 நிகழ்வினை “சுபீட்சத்திற்கான உறுதிப்பாடு” எனும் கருப்பொருளின் கீழ் 2025 திசெம்பர் 08 தொடக்கம் 10 வரை இலங்கை மத்திய வங்கியின் ஜோன் எக்ஸ்டர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் நடாத்தியது. இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இவ்வாய்வரங்கானது பொருளாதார ஆராய்ச்சி மற்றும் சான்றுகளின் அடிப்படையிலமைந்த கொள்கை உருவாக்கத்தினை மேம்படுத்துவதற்கான இலங்கை மத்திய வங்கியின் அர்ப்பணிப்பினைப் பிரதிபலிக்கின்ற விதத்தில் பின்வரும் மூன்று ஆராய்ச்சி நிகழ்வுகளைக் கொண்டிருந்தது:
















