Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை மாற்றமின்றிப் பேணுகின்றது

நாணயக் கொள்கைச் சபையானது நேற்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், ஓரிரவு கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. தற்போது இடம்பெற்றுவரும் மத்திய கிழக்கு மோதல்களிலிருந்து தோற்றம்பெறுகின்ற நிச்சயமற்றதன்மைகளுக்கு குறிப்பான கவனம்செலுத்தி, உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்கள் மீது பரிணமிக்கின்ற அபிவிருத்திகளையும் தோற்றப்பாட்டையும் கவனமாகப் பரிசீலனையிற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது.

2025ஆம் ஆண்டின் நிதியியல் துறைச் செயலாற்றம்

வெளிநாட்டு பாதிக்கப்படக்கூடியத்தன்மைகள் தொடர்பில் கரிசனையொன்று காணப்பட்டபோதிலும், 2025இல் உள்நாட்டு பேரண்ட நிதியியல் நிலைமைகள் மேலும் வலுவடைந்து, தொடர்ச்சியான கொடுகடன் விரிவாக்கத்திற்கு ஆதரவளித்தது. 2025இன் இறுதியளவில் வங்கிகள் மற்றும் நிதிக் கம்பனிகள் வழங்கிய மொத்த கொடுகடன் அதிகரித்ததனூடாக கொடுகடன் வளர்ச்சி குறிப்பிடத்தக்களவில் உயர்வடைந்தது. நிதியியல் துறையின் வெளிப்படுத்துகையானது, வலுவான தனியார் துறைக் கொடுகடன் வளர்ச்சியுடன், தனியார் துறையை நோக்கி மேலும் மாற்றமடைந்தமைக்கு மத்தியில் தற்போதைய இறை ஒருங்கமைப்பினைப் பிரதிபலிக்கின்ற வகையில் பொதுத் துறைக்கான வெளிப்படுத்துகை சிறிதளவில் சுருக்கமடைந்தது. அரசாங்கத்துடன் தொடர்புடைய வெளிப்படுத்துகை  வீழ்ச்சியடைந்திருந்த போதிலும், அது கணிசமானளவிலேயே காணப்படுகின்றது. வங்கித்தொழில்; துறையினது வைப்புகளுக்கான கொடுகடன் விகிதத்தினால் பிரதிபலிக்கப்பட்டவாறு, நிதியியல் இடையீடு உயர்வடைந்தது. 

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (தயாரித்தல் மற்றும் பணிகள்) - 2026 பெப்புருவரி

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2026 பெப்புருவரியில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன.

தயாரிப்பிற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2026 பெப்புருவரியில் 56.8  சுட்டெண் பெறுமதியொன்றைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவடைதலினை எடுத்துக்காட்டியது. அனைத்து துணைச் சுட்டெண்களும் இவ்விரிவடைதலுக்குச் சாதகமாகப் பங்களித்தன.

பணம் தூயதாக்கல், பயங்கரவாதி நிதியளித்தல் மற்றும் ஆயுதப் பெருக்கத்திற்கு நிதியளித்தல் மீதான தேசிய இடர்நேர்வு மதிப்பீடு – 2024/2025 இன் நிறைவேற்றுச் சுருக்கத்தினை இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு வெளியிடுகின்றது

அரசாங்க நிறுவனங்கள், ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனங்கள் மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் என்பவற்றை உள்ளடக்கி மொத்தமாக 86 நிறுவனங்களின் கூட்டிணைப்புடன் பணம் தூயதாக்கல், பயங்கரவாத நிதியளித்தல் மற்றும் ஆயுதப் பெருக்கத்திற்கு நிதியளித்தல் மீதான தேசிய இடர்நேர்வு மதிப்பீடு – 2024/2025 அறிக்கையை இலங்கை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது. இந்நிறுவனங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 200 நிபுணர்கள் இத்தேசிய பணிக்கு பங்களித்துள்ளனர். இது நாட்டின் மூன்றாவது தேசிய இடர்நேர்வு மதிப்பீடாவதுடன் இம்மதிப்பீட்டின் கீழ், நாட்டில் பணம் தூயதாக்கல், பயங்கரவாத நிதியளித்தல் மற்றும் ஆயுதப் பெருக்கத்திற்கு நிதியளித்தல் மீதான தேசிய இடர்நேர்வு மதிப்பீடு – 2024/2025, இடர்நேர்வுகளை அடையாளப்படுத்துவதை நோக்காகக் கொண்டிருந்தது. இலங்கை எதிர்கொள்கின்ற மிக முக்கிய பணம் தூயதாக்கல், பயங்கரவாத நிதியளித்தல் மற்றும் ஆயுதப் பெறுக்கத்திற்கு நிதியளித்தல் மீதான தேசிய இடர்நேர்வு மதிப்பீடு – 2024/2025 அறிக்கையானது  அச்சுறுத்தல்கள், பாதிக்கப்படும்தன்மைகள் மற்றும் ஒட்டுமொத்த இடர்நேர்வு என்பவற்றை இம்மதிப்பீடு எடுத்துக்காட்டுகின்றது.

இலங்கை மத்திய வங்கி அதன் முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டின் முக்கிய கண்டறியப்பட்டவைகளை வெளியிடுகின்றது – 2026 இன் முதலரைப்பகுதி

2026 ஆம் ஆண்டின் முதலரைப்பகுதியில் நடாத்தப்பட்ட முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டில் முக்கியமாக கண்டறியப்பட்டவைகளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இது நிதியியல் முறைமை பற்றிய சந்தைப்பங்கேற்பாளர்களின் எண்ணப்பாங்கினைப் பிரதிபலிக்கின்றது. இந்த அளவீடு 2025 திசெம்பர் 19 முதல் 2026 சனவரி 16 வரையான, டிட்வா சூறாவளிக்குப் பின்னைய உடனடிக்காலத்தில் நடாத்தப்பட்டது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2026 பெப்புருவரியில் குறைவடைந்துள்ளது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (கொநுவிசு, 2021=100)  அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு), 2026 பெப்புருவரியில் குறைவடைந்துள்ளது. அதற்கமைய, முதன்மைப் பணவீக்கம், 2025 சனவரியின் 2.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2026 பெப்புருவரியில் 1.6 சதவீதமாகப் பதிவாகியது.

Pages

சந்தை அறிவிப்புகள்