இலங்கை மத்திய வங்கி, 2023ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின்; ஏற்பாடுகளுக்கமைய, நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி மீது 04.07.2025 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் தீர்வு நடவடிக்கைகளைத் தொடங்கியது. இந்த நடவடிக்கையானது, இலங்கை மத்திய வங்கியினால் பெரும்பாலான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி 2011 ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளை தொடர்ச்சியாக மீறி வந்ததனால் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சியின் அனைத்து சொத்துகள், தொழிற்பாடுகள்; மற்றும் விவகாரங்கள் மீதான முழுமையான கட்டுப்பாட்டைப் பொறுப்பேற்று, நிறுவனத்தின் பெயரிலும் அதன் சார்பிலும் அதன் வியாபார நடவடிக்கைகள் மற்றும் விவகாரங்களை முன்னெடுப்பதற்கு திரு. பி டபிள்யூ டி என் ஆர் ரொட்ரிகோ அவர்கள் அதே நாளில் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.