Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு இலங்கை மதுவரித் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டது

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் நியதிகளின் பிரகாரம் இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது பணம் தூயதாக்குதல், பயங்கரவாதி நிதியிடல் மற்றும் வேறு தொடர்புபட்ட குற்றங்கள் பற்றிய விசாரணைகள் மற்றும் வழக்குத்தொடுத்தல்கள் தொடர்புடைய தகவல்களை பரிமாற்றிக்கொள்வதற்கு இலங்கை மதுவரித் திணைக்களத்துடன் 2024 சனவரி 09 அன்று இலங்கை மத்திய வங்கியில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைக் கைச்சாத்திட்டது. 

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர் பி. நந்தலால் வீரசிங்க அவர்களின் பிரசன்னத்துடன் மதுவரி ஆணையாளர் நாயகம் திரு. ஜே. எம். எஸ். என். ஜயசிங்க, நிதியியல் உளவறிதல் பிரிவின் அப்போதைய பணிப்பாளர் திருமதி. ஈ. எச். மொஹொட்டி ஆகியோர் தொடர்புடைய நிறுவனங்கள் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டனர். 

இலங்கை மத்திய வங்கி நாணயக் கொள்கை அறிக்கை - 2024 பெப்புருவரியினை வெளியிடுகின்றது

இலங்கை மத்திய வங்கி 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் தேவைப்பாடுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் இன்று (2024.02.15) நாணயக் கொள்கை அறிக்கை - 2024 பெப்புருவரியினை வெளியிட்டது. இவ்வறிக்கையின் உள்ளடக்கமானது முக்கியமாக 2024 சனவரி மாத மீளாய்வின் போது நாணயக் கொள்கைத் தீர்மானத்தினை உருவாக்குவதில் இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையினால் பரிசீலனையிற்கொள்ளப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (தயாாிப்பு மற்றும் பணிகள்) - 2024 சனவரி

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 சனவரியில் தயாாிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டின.

தயாரித்தலுக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாாிப்பு), 2024 சனவாியில் 55.6 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரித்தல் நடவடிக்கைகளில் விரிவடைதலினை எடுத்துக்காட்டியது. இம்மேம்படுதலுக்கு அனைத்து துணைச் சுட்டெண்களிலும் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன.

பணிகளுக்கான இலங்கை கொ.மு.சுட்டெண் (கொ.மு.சு – பணிகள்), 60.1 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்த வியாபார நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2024 சனவரியில் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டியது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுகைச் சபைக்கு இரண்டு புதிய உறுப்பினர்களின் நியமனம்

 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுகைச் சபை, இலங்கை மத்திய வங்கியின் நிருவாகம் மற்றும் அலுவல்களின் முகாமைத்துவம் என்பனவற்றை மேற்பார்வை செய்வதற்கான பொறுப்புக்களைக் கொண்ட சபையாகவும் இலங்கை மத்திய வங்கியின் பொதுவான கொள்கைகளைத் தீர்மானிக்கும் சபையாகவும் நிறுவப்பட்டிருக்கிறது.

ஆளுகைச் சபை

 ஆளுகைச் சபையானது ஆளுகைச் சபையின் தலைவராகச் செயலாற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரான முனைவர். பி. நந்தலால் வீரசிங்க, திரு. ஏ. என் பொன்சேகா (2022.07.27 இலிருந்து இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் நியமன உறுப்பினராக இருந்த இவர் ஆளுகைச் சபையின் உறுப்பினராகத் தொடர்ந்தும் பணியாற்றுகின்றார்) முனைவர். ரவி ரத்னாயக்க (2023.09.21 அன்று நியமிக்கப்பட்டார்), திரு. அனுஷ்க எஸ் விஜயசிங்க (2023.09.21 அன்று நியமிக்கப்பட்டார்) மற்றும் திரு. விஷ்  கோவிந்தசாமி (2023.10.26 அன்று நியமிக்கப்பட்டார்) ஆகியோரை உள்ளடக்கியிருக்கிறது.

மேலும், நாம் இத்தால் திரு. ரஜீவ் அமரசூரிய மற்றும் திரு. மணில் ஜயசிங்க ஆகியோர் ஆளுகைச் சபைக்கு நியமிக்கப்பட்டிருப்பது பற்றி அறியத் தருகிறோம். புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் விபரக் குறிப்புக்கள் பின்வருமாறு தரப்படுகின்றன.

துணைநில் வசதிகள் மீது விதிக்கப்பட்ட மட்டுப்பாடுகளைத் தளர்த்தல்

திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ் துணைநில் வசதிகளை உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் பயன்படுத்துவதன் மீது இலங்கை மத்திய வங்கி 2023 சனவரி 16ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் மட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது. அதற்கமைய, துணைநில் வைப்பு வசதியைப் பெற்றுக்கொள்வது பஞ்சாங்க மாதமொன்றிற்கு உயர்ந்தபட்சம் ஐந்து (05) தடவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த அதேவேளை, துணைநில் கடன்வழங்கல் வசதியைப் பெறுவது ஏதேனும் வழங்கப்பட்ட நாளொன்றில் ஒவ்வொரு உரிமம்பெற்ற வர்த்தக வங்கியினதும் நியதி ஒதுக்குத் தேவைப்பாட்டின் 90 சதவீதத்திற்கு வரையறுக்கப்பட்டிருந்தது. மத்திய வங்கி மூலம் வழங்கப்படும் ஓரிரவு வசதிகள் மீது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் அளவுக்கதிகமாக தங்கியிருப்பதனைக் குறைக்கும் நோக்குடன் உள்நாட்டுப் பணச் சந்தையை குறிப்பாக, அழைப்புப் பணச் சந்தையை மீளச்செயற்படுத்தி உள்ளக சீராக்க வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்காக உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளை ஊக்குவிப்பதற்கு ஆதரவளித்து இவ்வழிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தன.

இலங்கையின் நிதியியல் துறையின் தாக்குப்பிடிக்கும்தன்மையை வலுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கமும் உலக வங்கியும் ஐ.அ.டொலர் 150 மில்லியன் தொகையினை நிதியிடுவதற்கு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளன

நிதியியல் துறை பாதுகாப்புவலை வலுப்படுத்தல் செயற்றிட்டத்தினூடாக (Financial Sector Safety Net Strengthening Project) நிதியியல் துறையின் தாக்குப்பிடிக்கும் தன்மையினை வலுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கமும் உலக வங்கியும் இலங்கைக்கு ஐ.அ.டொலர் 150 மில்லியனை நிதியிடுவதற்கு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. அதேவேளை, உலக வங்கிக்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் இடையிலான செயற்றிட்ட உடன்படிக்கையானது செயற்றிட்ட நடைமுறைப்படுத்தல் ஏற்பாடுகளின் தொடர்பிலும் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியினால் முகாமைத்துவம்செய்யப்படுகின்ற இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தில் கவனஞ்செலுத்தி இலங்கையின் நிதியியல் துறையின் பாதுகாப்புவலையினை வலுப்படுத்துவதே இச்செயற்றிட்டத்தின் அபிவிருத்திக் குறிக்கோளாகும். செயற்றிறன்வாய்ந்த வைப்புக் காப்புறுதித் திட்டங்களுக்கான பன்னாட்டு சிறந்த நடவடிக்கைகளுக்கமைவாக இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் நிதியியல் மற்றும் நிறுவனசார் இயலாற்றலை வலுப்படுத்துவதும் இச்செயற்றிட்டத்தின் இலக்காகக் காணப்படுகின்றது.

Pages

சந்தை அறிவிப்புகள்