Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கை - 2025 திசெம்பர் வெளியீட்டை இலங்கை மத்திய வங்கி வெளியிடுகின்றது

இலங்கை மத்திய வங்கி அதன் பிந்திய சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கையினை 2026 சனவரி 30 அன்று வெளியிட்டது. நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த செலாவணி வீத வீழ்ச்சியினால் ஆதரவளிக்கப்படும் நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் கீழ் நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலினை அனுசரித்து மத்திய வங்கியினால் மேற்கொண்ட நாணய மற்றும் வெளிநாட்டுச் செலாவணித் தொழிற்பாடுகள் பற்றிய ஆர்வலர் புரிந்துகொள்ளலை மேம்படுத்துவதனை சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கை நோக்காகக் கொள்கின்றது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2026 சனவரியில் அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (கொநுவிசு, 2021=100)  அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு), தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக அதே மட்டத்தில் காணப்பட்டதன் பின்னர், 2026 சனவரியில் அதிகரித்தது. இதற்கமைய, முதன்மைப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) இலங்கை மத்திய வங்கியின் அண்மைய கால எறிவுகளுடன் பரந்தளவில் இசைந்துசெல்லும் வகையில், 2025 திசெம்பரின் 2.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2026 சனவரியில் 2.3 சதவீதத்திற்கு பதிவாகியிருந்தது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2025 ​திசெம்பர்

நடைமுறைக் கணக்கானது 2025 திசெம்பரில் சிறியளவிலான மிகையொன்றினைப் பதிவுசெய்தது. 2025இல் அநேகமான மாதங்களில் மாதாந்த நடைமுறைக் கணக்கு மிகைகள் பதிவுசெய்யப்பட்டன. இதன் விளைவொன்றாக, நடைமுறைக் கணக்கானது 2025இல் ஐ.அ.டொலர் 1.7 பில்லியன் தொகையிலான (தற்காலிகமானது) மிகையொன்றினைப் பதிவுசெய்திருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. 

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2025 திசெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் விரிவடைந்தது. மேலும், ஏற்றுமதி வருவாய்கள் 2025இல் வரலாற்று ரீதியில் உயர்ந்தளவிலான மட்டமொன்றினைப் பதிவுசெய்ததற்கு மத்தியில், ஒன்றுசேர்ந்த வர்த்தகப் பற்றாக்குறையானது 2024 உடன் ஒப்பிடுகையில் 2025இல் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 7.9 பில்லியனிற்கு விரிவடைந்து காணப்பட்டது. 

இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – கட்டடவாக்கம் 2025 திசெம்பரில் அதிகரித்துள்ளது

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 திசெம்பரில் 67.1 ஆக அதிகரித்தது. பாதகமான காலநிலை நிலைமைகளினால் ஏற்பட்ட ஆரம்ப தொழிற்பாடு சார்ந்த இடையூறுகளுக்கு மத்தியில் தொடர்புடைய காலப்பகுதியில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க விரிவடைதலை பெரும்பாண்மையான நிறுவனங்கள் அறிக்கையிட்டன.

பன்னாட்டு நாணய நிதியத்தின் அலுவலர்கள் இலங்கைக்கான விஜயத்தை நிறைவுசெய்துள்ளனர்

தித்வா புயலின் தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்கு திரு. இவான் பப்பாஜீயோர்ஜியு தலைமையிலான பன்னாட்டு நாணய நிதியத்தின் அலுவலர் குழுவின் இலங்கைக்கான அண்மைய விஜயத்தின் இறுதியில், பன்னாட்டு நாணய நிதியமானது பின்வரும் ஊடக வெளியீட்டினை 2026 சனவரி 28 அன்று வெளியிட்டதுடன், இதனைக் கீழேயுள்ள இணைப்பிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை மாற்றமின்றிப் பேணுகின்றது

நாணயக் கொள்கைச் சபையானது நேற்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், ஓரிரவு கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டுத்துறை மற்றும் உலகளாவிய நிச்சயமற்றதன்மைகள் ஆகியவற்றில் பரிணமிக்கின்ற அபிவிருத்திகள் மற்றும் தோற்றப்பாட்டை பரிசீலனையிற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடானாது பணவீக்கத்தினை 5 சதவீதம் கொண்ட இலக்கினை நோக்கி வழிநடாத்துவதற்குத் துணையளிக்குமென சபை கருதுகின்றது. 

Pages

சந்தை அறிவிப்புகள்