இலங்கை மத்திய வங்கியானது அதன் முதலாவது ஒதுக்கு முகாமைத்துவ மாநாட்டினை 2026 செப்டம்பர் 10–11 ஆம் திகதிகளில் கொழும்பு, கிங்ஸ்பரி ஹோட்டலில் வெற்றிகரமாக நடாத்தியது. இச்சிறப்புவாய்ந்த ஒன்றுகூடலானது அலுவல்சார் ஒதுக்கு முகாமைத்துவத்தில் ஏற்பட்டு வரும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்கு முன்னணி மத்திய வங்கிகளின் அதிகாரிகள், அரச சொத்து முகாமையாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், பொருளியலாளர்கள் மற்றும் முதலீட்டுத் துறை சார்ந்த வல்லுநர்கள் போன்றோரை ஒன்றிணைத்து. இம்மாநாட்டில் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB), ஆசிய அபிவிருத்தி வங்கி, பிரான்ஸ் வங்கி, சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி, இந்தோனேசியா வங்கி, மலேசியா நெகாரா வங்கி, கொரிய வங்கி, , தாய்லாந்து வங்கி, அமெரிக்க நாடுகளுக்கிடையேயான அபிவிருத்தி வங்கி, இந்திய ரிசர்வ் வங்கி, சுவிஸ் தேசிய வங்கி, உலக வங்கி மற்றும் உலக தங்கச் சபை உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி எறத்தாழ 50 பேச்சாளர்களும் பங்கேற்பாளர்களும் பங்கேற்றனர்.
















