இலங்கை மத்திய வங்கியானது அரசாங்க அதிகாரிகள், வர்த்தகச் சமூகம் மற்றும் பொதுமக்களிடையே டிஜிட்டல் கொடுப்பனவு முறைகள் குறித்த விழிப்புணர்வினை அதிகரிக்கின்ற குறிக்கோளுடன் யாழ்ப்பாணத்தில் கார்கில்ஸ் சதுக்கத்தில் 2026 ஓகத்து 07 மற்றும் 08 ஆகிய திகதிகளில் மு.ப 8.30 மணி தொடக்கம் பி.ப 7.00 மணி வரை டிஜிட்டல் கொடுப்பனவு ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளது. வட மாகாண ஆளுநர் கௌரவ திரு. நாகலிங்கம் வேதநாயகம் அவர்கள் அங்குரார்ப்பண அமர்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் சிரே~;ட அதிகாரிகள், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் திரு. எம். பிரதீபன், வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தேசிய சில்லறைக் கொடுப்பனவு முறைமையின் தொழிற்படுத்துநரான லங்காபே (பிறைவட்) விமிடெட் ஆகியவற்றின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொள்வர்.