Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

நாணயக் கொள்கை மீளாய்வு - 2016 யூன்

தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் தற்காலிக மதிப்பீடுகளின்படி, 2016இன் முதற்காலாண்டில், உண்மை நியதிகளில் இலங்கையின் பொருளாதாரம் 2015இன் முதற்காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட 2.5 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 5.5 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்திருக்கிறது. இப்பொருளாதார வளர்ச்சிக்கு, கூட்டப்பட்ட பெறுமதி நியதிகளில், 2016இன் முதற்காலாண்டில் முறையே 8.3 சதவீதத்தினாலும் 4.9 சதவீதத்தினாலும் வளர்ச்சியடைந்த கைத்தொழில் மற்றும் பணிகள் துறைகளே பெரும் உதவியாக அமைந்தன. அதேவேளையில், இக்காலப்பகுதியில் வேளாண்மையுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகள் 1.9 சதவீதம் கொண்ட மிதமான வளர்ச்சியைப் பதிவுசெய்தன. முதற்காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட வளர்ச்சி வீதம் இவ்வாண்டிற்காக எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியுடன் பெருமளவிற்கு ஒத்துச்செல்வதாகக் காணப்பட்டது.  

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு

2015 மே தொடக்கம் நாட்டின் தயாரிப்பு மற்றும் பணிகள் துறைகள் தொடர்பாக கொள்வனவு முகாமையாளர் சுட்டெண ;அளவீடொன்றினை நடத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களம் நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்துள்ளது. இவ்வளவீட்டின் நோகக் ம் யாதெனில் கொள்வனவு தொழில்சார் நிபுணர்கள், வியாபாரத் தீர்மானங்களை மேற்கொள்வோா் மற்றும் பொருளாதாரப் பகுப்பாய்வாளர் ஆகியோர் தொழில்துறை நிலைமைகளைச் சிறந்த முறையில் விளங்கிக் கொள்ளும் விதத்தில் அவர்களுக்கு உரிய நேரத்தில் தரவுத் தொகுதியை வழங்குவதேயாகும். இவ்வளவீடானது, மாதாந்தம் திணைக்களத்தினால் நடத்தப்படுவதுடன் 2016 ஏப்பிறலில் ஒரு வருடச்சுற்று பூர்த்தியடைந்திருக்கிறது. எனவே, இலங்கை மத்திய வங்கி பொதுமக்களின் தகவலுக்காக அளவீட்டின் பெறுபேறுகளை வெளியிடத் தீர்மானித்திருக்கிறது. 2016 மே மாதத்திற்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண ; அளவீட்டின் பெறுபேறுகள் மீதான அறிக்கையானது கொள்வனவு முகாமையாளர் சுட்டெணண்pன் கடந்த காலத்திற்குரிய தொடர்களுடன் சேர்த்து கீழே தரப்படுகிறது. அளவீட்டின் பெறுபேறுகளை புள்ளிவிபரப் பிரிவின ;கீழ் இலங்கை மத்திய வங்கியின் வெப்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.   

மத்திய வங்கியின் ஆளுநர் வௌியிட்டுள்ள அறிக்கை

மத்திய வங்கியின் ஆளுநர் திரு. அர்ஜூன மகேந்திரன் 2016 யூன் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாணயச் சபையின் கூட்டத்தில், 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் திறைசேரி முறிகளின் வழங்கல் தொடர்பான பிரச்சனைகள் பற்;றி அரச தொழில்முயற்சிகள் மீதான பாராளுமன்றக் குழு விடயங்களைக் கண்டறியும் வரை 2016 யூன் 30ஆம் நாள் வியாழக்கிழமை அவரது பதவிக் காலம் முடிவடையும் பொழுது இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நியமிக்கப்படுவதற்கான கோரிக்கை எதனையும் விடுக்கமாட்டார் என்பதனை அறிவித்திருக்கின்றார்.

2016 மேயில் பணவீக்கம்

தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான, பணவீக்கம், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 ஏப்பிறலில் 4.3 சதவீதத்திலிருந்து 2016 மேயில் 5.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு மற்றும் ஏனைய எரிபொருள் துணைத்துறை தவிர்ந்த உணவல்லா அனைத்து வகைகளும் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்தின் அதிகரிப்பிற்கு பங்களித்துள்ளன.  

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம் 2016 ஏப்பிறலில் 2.6 சதவீதத்திலிருந்து 2016 மேயில் 2.7 சதவீதத்திற்கு அதிகரித்தது.  

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2016 பெப்புருவரி

வர்த்தகப் பற்றாக்குறை சுருக்கமடைந்தமை, சுற்றுலாப் பயணிகளின் வருவாய்கள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் வடிவில் ஏற்பட்ட வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல் என்பன தொடர்ந்தும் உறுதியான வேகத்தில் வளர்ச்சியடைந்தமையின் காரணமாக 2016 பெப்புருவரி மாத காலப்பகுதியில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை மிதமான செயலாற்றமொன்றினைக் காட்டியது. இம்மாத காலப்பகுதியில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் வீழ்ச்சியடைந்தபோதும், எரிபொருள் இறக்குமதிகள், உணவு மற்றும் குடிபானங்கள் மற்றும் போக்குவரதது; சாதனங்கள் மீதான செலவினத்தில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி வர்த்தகப் பற்றாக்குறையில் சுருக்கத்தினை ஏற்படுத்தின. எனினும், அரச பிணையஙக்ள் சந்தையும 'கொழும்பு பங்குப் பரிவர்த்தனையும்' இக்காலப்பகுதியில் தேறிய வெளிப்பாய்ச்சல்களைப் பதிவு செய்தன.   

முழுவடிவம்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரினால் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் தொடர்பாக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்ட பிழையான தகவல்கள் தொடர்பிலான விளக்கம்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அரச நிதியினைப் தவறாகப் பயன்படுத்தியிருப்பதாக பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினரொருவரினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளமை ஊடகங்களில் அறிக்கையிடப்பட்டுள்ளது.  

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரோ அல்லது வேறு எந்தவொரு அலுவலருமோ தமது சொந்தச் செலவுகளுக்காக அரச நிதியினை பயன்படுத்தவில்லை என்பதனையும் எந்தவிதத்திலேனும் அரச நிதியினைத் தவறாகப் பயன்படுத்தவில்லையெனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுக் கொள்ளவிரும்புகின்றது. அனைத்து அலுவல்சார் கடமைகள் தொடர்பிலும் ஆளுநரும் இலங்கை மத்திய வங்கியின் அலுவலர்களும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கலந்துகொள்ளும் நிகழ்வுடன் தொடர்பிலுமான செலவினங்கள் மற்றைய அமைச்சு அல்லது திணைக்களங்களின் பொதுவான நடைமுறைகளை ஒத்தவிதத்திலேயே மத்திய வங்கியினாலும் வழங்கப்படுகின்றன.  

Pages