நாணயச் சபை, மாண்புமிகு நிதியமைச்சரின் இணக்கத்துடன் உதவி ஆளுநர் திரு சி ஜே பி சிறிவர்த்தன அவர்களை 2017 ஓகத்து 19ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநராக பதவி உயர்த்தியிருக்கிறது.
திரு. சி ஜே பி சிறிவர்த்தன
திரு. சி ஜே பி சிறிவர்த்தன இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு, நிதியியல் முறைமை உறுதிப்பாடு மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படுகின்ற முகவர் தொழிற்பாடுகள் ஆகிய துறைகளில் 31 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்தினைக் கொண்டிருக்கிறார். துணை ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், உதவி ஆளுநராக பதவியிலிருந்த திரு சிறிவர்த்தன அவர்கள் பொதுப்படுகடன், தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் இணங்குவிப்பு, பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்பு, மனித வளங்கள், கொள்கை மீளாய்வு மற்றும் கண்காணிப்பு, கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு மற்றும் இடர்நேர்வு முகாமைத்துவம் போன்ற திணைக்களங்களுக்குப் பொறுப்பாக இருந்தார்.
















