இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவு (FIU - Sri Lanka) சிங்கப்பூரின் ஐயத்திற்குரிய கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் அலுவலகத்துடன் (STRO) இருவயினொத்த தன்மை, ஒத்துழைப்பு தாற்பரியம் மற்றும் பரஸ்பர ஈடுபாடு என்பனவற்றின் அடிப்படையில் பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியிடல் தொடர்பான புலன்விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடுத்தல் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு வசதியளிக்கும் விதத்தில், ஒவ்வொரு நாட்டினதும் தேசிய சட்டவாக்கங்களின் கட்டமைப்பிற்குட்பட்டு 2016 செத்தெம்பர் 01ஆம் நாளன்று புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை (MOU) மேற்கொண்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது நிதியியல் உளவறிதல் பிரிவு - இலங்கையினால் 2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாட்டு நியதிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.















'இலங்கையில் வியாபாரத்தினை மேற்கொள்வதற்கான படிப்படியானதொரு வழிகாட்டல்" நூலின் ஆறாவது பதிப்பு இலங்கை மத்திய வங்கியினால் தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கிறது. இவ்வெளியீடானது, இலங்கையில் வியாபாரத் தொழில்முயற்சிகளைத் தொடங்குதல், தொழிற்படுத்தல் மற்றும் மூடிவிடுதல் தொடர்பில் பயன்மிக்க ஒழுங்குமுறைப்படுத்தல் தகவல்களைக் கொண்டிருக்கின்றது. தொடர்பான நிறுவனங்களினால் முன்மொழியப்பட்டவாறு, 2016இன் முதற்காலாண்டு வரை மேற்கொள்ளப்பட்ட அவசியமான திருத்தங்கள் இவ்வெளியீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 
