நாணயச் சபை, 2016 ஏப்பிறல் 05ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் செல்வி கே சரவணமுத்து மற்றும் திரு ஈ ஏ எட்டியாராச்சி, திரு ஆர் ஏ ஏ ஜெயலத்; திரு கே எம் எம் சிறிவர்த்தன மற்றும் திரு எஸ் ஜே ஏ கந்தகம ஆகிய ஐந்து உயர் அலுவலர் வகுப்பு தரம் ஐஏ அலுவலர்களை முறையே 2016 ஏப்பிறல் 05, 2016 ஏப்பிறல் 16, 2016 யூன் 12 மற்றும் 2016 யூன் 18ஆம் திகதிகளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் உதவி ஆளுநர்களாகப் பதவி உயர்த்தியிருக்கிறது. இப் பதவி உயர்வுகள் வங்கியின் தொடர்ச்சியான திட்டத்திற்கு அமைவாகவும் மத்திய வங்கியின் புதிய சவால்களுக்கு முகம்கொடுத்து அவற்றைக் கட்டுப்படுத்தும் விதத்திலும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
















