தூதுக்குழுவின் விஜயத்தின் முடிவிலான பத்திரிக்கை வெளியீடானது ஆரம்ப விடயங்களைத் தெரிவிக்கும் பன்னாட்டு நாணய நிதிய அலுவலர் குழுக்களின் அறிக்கைகளை உளள் டக்கியிருக்கிறது. இவ்வறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கருத்துக்கள் பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களின் கருத்துகக் ளேயன்றி பன்னாட்டு நாணய நிதிய நிறைவேற்றுச் சபையின் கருத்துகக் ளை பிரதிநிதித்துவப்படுத்துவதாகாதிருக்கலாம். இத்தூதுக்குழுவின் ஆரம்ப கண்டறிதல்களின் அடிப்படையில், முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு அலுவலர்களினால் தயாரிக்கப்படும் அறிக்கையானது. கலந்துரையாடலுக்கு தீர்மானமெடுத்தலுக்குமாக, பன்னாட்டு நாணய நிதிய நிறைவேற்றுச் சபைக்கு சமர்ப்பிக்கப்படும்.
வொசிங்டனில் 2016 இளவேனிற் குழுமங்களின்போது, பன்னாட்டு நாணய நிதிய அலுவலகர்கள் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கிடையே இடம்பெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, பன்னாட்டு நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியால் ஆதரவளிக்கப்பட்ட மூன்று ஆண்டு நிகழ்ச்சித்திட்டத்தின் மீது அலுவலகர் தர இணக்கம் எட்டப்பட்டது.