இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினது அறுபத்தாறாவது ஆண்டறிக்கை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திரு. அர்ஜுன மகேந்திரன் அவர்களால் மேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடமும் பிரதம மந்திரி மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடமும் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க இலங்கை நாணய விதிச் சட்டத்தின் 35ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம் கௌரவ நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களிடமும் சமர்ப்பிக்கப்பட்டது.