Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

2017 செத்தெம்பரில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2017 செத்தெம்பரில் 8.6 சதவீதத்திற்கு 2017 ஓகத்தின் 7.9 சதவீதத்திலிருந ;து அதிகரித்தது. 2017 செத்தெம்பரின் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கத்துக்கு உணவு மற்றும் உணவல்லா வகை இரண்டும் முக்கியமாக பங்களித்தன.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றம் 2017 ஓகத்தின் 6.5 சதவீதத்திலிருந்து 2017 செத்தெம்பரின் 6.8 சதவீதத்துக்கு அதிகரித்தது.  

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - ஓகத்து 2017

இலங்கையின் வெளிநாட்டுத் துறை 2017 ஓகத்தில் கலப்பான செயலாற்றமொன்றினைக் காட்டியது. 2017 ஓகத்தில் ஏற்றுமதி வருவாய்கள் அதிகரித்த போதும் இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட உயர்ந்த வளர்ச்சி வர்த்தகப் பற்றாக்குறையில் விரிவாக்கமொன்றைத் தோற்றுவித்தது. 2017 ஓகத்தில் சுற்றுலா வருவாய்கள் அதிகரித்தபோதும் விரிவடைந்த வர்த்தகப் பற்றாக்குறையுடன் சேர்ந்து தொழிலாளர் பணவனுப்பல்கள் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக வெளிநாட்டு நாணயக் கணக்கின் செயலாற்றம் தளர்வுற்றுக் காணப்பட்டது. எனினும், சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கிற்கு அரசாங்கத்திற்கான வெளிநாடடு; நாணய காலநிதியிடல் வசதியின் இரண்டாவது தொகுதி பெறப்பட்டமை, கொழும்பு பங்குப் பரிவர்த்தனை மற்றும் அரச பிணையங்கள் சந்தை என்பனவற்றிறகு; 2017இல் ஏற்பட்ட தொடர்ச்சியான வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் என்பனவற்றின் பெறுகைகள் மூலம் ஆதரவளிக்கப்பட்டது.

முழுவடிவம்

பன்னாட்டு நாணய நிதியம் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் மூன்றாவது மீளாய்வு தொடர்பில் அலுவலர் - மட்டத்திலான உடன்படிக்கையை அடைந்துள்ளது.

இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ப.நா.நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது ப.நா.நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்தினைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இத்தூதுக் குழு ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில், அலுவலர்கள் அறிக்கையினைத் தயாரிக்கும். இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு, கலந்துரையாடல்களுக்கும் தீர்மானங்களுக்குமாக ப.நா.நிதிய நிறைவேற்றுச் சபைக்குச் சமர்ப்பிக்கப்படும்.

முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி குளோபல் கெப்பிட்டல் மார்க்கட் பப்பிளிக்கேஷனால் இவ்வாண்டிற்கான சிறந்த தென்னாசியாவிற்கான ஆளுநராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்

இலங்கை மத்திய வங்கி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி இவ்வாண்டிற்கான சிறந்த தென்னாசியாவிற்கான ஆளுநராக 2017 ஒத்தோபர் 14 அன்று வாசிங்கடன் டிசி இல் இடம்பெற்ற பிரபல்யம் மிக்க பிரசுரலாயமான குளோபல் கெப்பிட்டல் மார்க்கட்டின் விருது வழங்கும் வைபவத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார் என்பதனை மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கிறது. இவ்விருது வழங்கும் வைபவம் உலக வங்கி – ப.நா. நிதியத்தின் ஆண்டுக் கூட்டத்துடன் ஒரே நேரத்தில் எதேச்சையாக இடம்பெற்றிருக்கிறது. உலகளாவிய மூலதனம் என்பது பன்னாட்டு மூலதனச் சந்தைகளில் பணியாற்றுகின்ற மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் முன்னிலைச் செய்திகளையும் கருத்துக்களையும் தரவுப் பணிகளையும் வழங்குமொன்றாகும்.

( http;//www.globalcapital.com/about-global-capital )

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு – 2017 செத்தெம்பா்

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் செத்தெம்பர் மாதத்தில் 59.0 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 ஒகத்து மாதத்துடன் ஒப்பிடும்போது 4.6 சுட்டெண் புள்ளிகளாலான  ஒரு அதிகரிப்பாகும். இது தயாரிப்பு நடவடிக்கைகளானது ஒகத்து 2017 உடன் ஓப்பிடும் போது செத்தெம்பர் 2017 இல் உயர்வான வீதத்தில் தொடர்ச்சியான அதிகரிப்பை குறித்துக்காட்டுகின்றது. இவ் அதிகரிப்பானது, முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட குறைவிலிருந்து மீட்சியடைந்து புதிய தொழிலாளர்களின் ஆட்சேர்ப்பினால் தொழில்நிலை துணைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட அதிகரிப்பினால்  பிரதானமாக உந்தப்பட்டது. உற்பத்தி மற்றும் புதிய கடட்ளைகள் துணைச்சுட்டெண்களும் செத்தெம்பரில் உயர்வான வீதத்தில் விரிவடைந்து காணப்பட்டன. கொள்வனவு இருப்புகளின் துணைச் சுட்டெண் முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட மேலதிக இருப்புகளின் நிலைமை காரணமாக மெதுவான வேகத்தில் அதிகரித்து காணப்பட்டது. நிரமப்லர் வழங்கல் நேரம்முன்னைய மாதத்துடன் ஒப்பிடும்  போது மெதுவான வீதத்தில் நீட்சியடைந்து காணப்பட்டது.

பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றத்தினை ஆராய்வதற்கான ப.நா.நிதிய அலுவலர்களின் இலங்கை விஜயம் நிறைவு பெற்றிருக்கிறது

தூதுக்குழுவினது விஜயத்தின் இறுதியில் விடுக்கப்பட்ட பத்திரிகை வெளியீடு, ப.நா. நிதிய அலுவலர் குழு நாட்டிற்கு விஜயம் செய்த பின்னர் அது ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களைக் கொண்ட ப.நா.நிதியத்தின் அறிக்கைகளை உள்ளடக்கியுள்ளது. இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ப.நா.நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது ப.நா.நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்தினைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இத்தூதுக் குழு ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில், அலுவலர்கள் அறிக்கையினைத் தயாரிப்பர். இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு, கலந்துரையாடல்களுக்கும் தீர்மானங்களுக்குமாக ப.நா.நிதிய நிறைவேற்றுச் சபைக்குச் சமர்ப்பிக்கப்படும்.

Pages

செய்தி வெளியீடுகள்

சந்தை அறிவிப்புகள்