இரஜரட்டை மற்றும் வயம்ப பிராந்திய மக்களுக்கு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு மத்திய வங்கி சேவைகளின் இலகுவான கிடைப்பனவை மற்றும் மத்திய வங்கியின் நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்ட பொதுமக்களுக்கான சேவைநாள் நிகழ்ச்சித்திட்டமானது இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலக வளாகத்திலும் மற்றும் அனுராதபுர பொது மைதானத்திலும் (சல்காடோ) 2018 செத்தெம்பர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்ச்சித்திட்டமானது காலை 9.00 மணி முதல் 7.00 மணி வரை இடம்பெறுவதுடன் ஊழியர் சேம நிதியம் தொடர்பான பிரச்சனைகளை தீர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புக்களை பெறுவதற்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிக் கொடுகடன் திட்டங்கள் மற்றும் தொடர்புடைய சேவைகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பினைப் பொதுமக்கள் பெற்றுக்கொள்வர். சேதமடைந்த நாணயத் தாள்களை மாற்றுவதற்கும் நாணயக் குத்திகளைப் பெற்றுக்கொள்வதற்குமான நாணயப் பரிமாற்று வசதியும் இடம்பெறும்.















இலங்கை மத்திய வங்கி, இலங்கையின் பொருளாதார சமுகப் புள்ளிவிபரங்கள் - 2018 என்ற இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடு தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது.
