Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

சிங்கபுத்ர பினான்ஸ் பிஎல்சி

சிங்கபுத்ர பினான்ஸ் பிஎல்சி மீது விதிக்கப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பாக 2019.09.08 மற்றும் 2019.09.09 திகதிகளில் வெளியிடப்பட்ட பத்திரிகை அறிவித்தல்களுக்கு மேலதிகமாக, சிங்கபுத்ர பினான்ஸ் பிஎல்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச மூலதனத்தைப் பெருக்குகின்ற திட்டத்தினையும் வைப்பாளர்களின் நலவுரித்துக்களையும் கருத்திற்கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, சிங்கபுத்ர பினான்ஸ் பிஎல்சி சமர்ப்பித்த முன்மொழியப்பட்ட மூலதனத்தைப் பெருக்கும் திட்டத்தினைக் குறித்துரைக்கப்பட்ட காலவரையறைக்குள் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பினை சிங்கபுத்ர பினான்ஸ் பிஎல்சி இற்கு வழங்கியுள்ளது என்பதனை பொதுமக்களுக்கு அறியத்தருகின்றது.

ரிகேஎஸ் பினான்ஸ் லிமிடெட் 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உரிமத்தினை இரத்துச் செய்தல்

011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட்ட நிதிக் கம்பனியான ரிகேஎஸ் பினான்ஸ் லிமிடெட் நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளையும் அதன் கீழ் விடுக்கப்பட்ட பல்வேறு பணிப்புரைகளையும் விதிகளையும் தொடர்ச்சியாக மீறிஃ மறுத்து வந்திருக்கின்றது. மேலும், ரிகேஎஸ் பினான்ஸ் லிமிடெட்டின் நிதியியல் நிலைமையும் போதுமானதற்ற மூலதன மட்டம், சொத்துக்களின் மோசமான தரம், தொடர்ச்சியான இழப்புக்கள் மற்றும் கோருகின்றமை அல்லது முதிர்ச்சியடைகின்றமை போன்ற சந்தர்ப்பங்களில் வைப்பாளர்களின் பணத்தினை மீளச் செலுத்தத் தவறுதல் போன்ற காரணங்களினால் திருப்திகரமானதாக காணப்படவில்லை.

த பினான்ஸ் கம்பனி பிஎல்சி மீது இலங்கை மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகள்

2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமமளிக்கப்பட்ட நிதிக் கம்பனியொன்றான த பினான்ஸ் கம்பனி பிஎல்சி 2008 ஆண்டில் செலிங்கோ குழுமத்தினுள்ளான பல எண்ணிக்கையான நிதியியல் நிறுவனங்களின் தோல்வியினால் மோசமாகப் பாதிக்கப்பட்டது. அப்போதிருந்து கம்பனியின் நிதியியல் நிலைமை படிப்படியாக சீர்குலைந்து, உடனடியாகத் தீர்க்கப்படவேண்டிய தேவையாகவுள்ள மோசமான திரவத்தன்மைப் பிரச்சனைகளுடன் தற்போது காணப்படுகின்றது. வாய்ப்புமிக்க முதலீட்டாளர்களை இனங்காண்பதற்கும் கம்பனியினை மீள்கட்டமைப்பதற்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அத்தகைய முயற்சிகள் இன்னும் பயனளிக்கவில்லை.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2019 ஓகத்து

2019 ஓகத்தில் தயாரிப்பு நடவடிக்கைகள் மேலும் உயர்ந்த வீதத்தில் விரிவடைந்து 56.6 கொண்ட பெறுமதிச் சுட்டெண் ஒன்றினைப் பதிவுசெய்தன. இது, 2019 யூலையுடன் ஒப்பிடுகையில் 0.9 சுட்டெண் புள்ளிகளைக் கொண்டதொரு அதிகரிப்பாகும். தயாரிப்பு கொள்வனவு முகாமைத்துவச் சுட்டெண்ணில் ஏற்பட்ட இவ்விரிவிற்கு புதிய கட்டளைகளில் விசேடமாக எதிர்வருகின்ற பண்டிகைக் கால கேள்வியினை நிறைவுசெய்வதற்காக உணவு மற்றும் குடிபானங்கள் அத்துடன் ஆடைகள் மற்றும் அணியும் ஆடைகள் துறையின் தயாரிப்பில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். அதேவேளை, ஓகத்து மாதகாலப்பகுதியின் போது தொழில்நிலையானது விசேடமாக உணவு மற்றும் குடிபானத் துறையில் மெதுவான வீதத்தில் மேலும் அதிகரித்தது. அதேவேளை, புடவை மற்றும் ஆடை தொழில்துறையிலுள்ள பல பதிலிறுப்பாளர்கள் சந்தையில் தொழிலாளர் கிடைக்கப்பெறும் தன்மை குறைவாகவிருந்தது என சுட்டிக்காட்டினர்.

இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவானது இலங்கை கூட்டுறுதி தொடர்மாடிமனை அதிகாரசபை மற்றும் தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபை என்பனவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டிருக்கிறது

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், கூட்டுறுதி தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் மற்றும் இலங்கையிலுள்ள உரிமம்பெற்ற இரத்தினக்கல் மற்றும் ஆபரண வணிகர்கள் தொடர்பில் பணம் தூயதாக்கலைத் தடுத்தல்/ பயங்கரவாததத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் பற்றிய சட்ட ரீதியான கடப்பாடுகள் காத்திரமான விதத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதனை உறுதிப்படுத்தும் விதத்தில் கூட்டுறுதி தொடர்மாடிமனை முகாமைத்துவ அதிகாரசபையிடமிருந்தும் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையிடமிருந்தும் நிதியியல் உளவறிதல் பிரிவு எதிர்பார்க்கின்றவாறு தகவல்களை வழங்குதல் மற்றும் ஆதரவுத் தன்மையினை வரைவிலக்கணப்படுத்துவது தொடர்பான செயன்முறைகளை மேலோட்டமாக அவற்றிற்குத் தெரிவிக்கும் விதத்தில் இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது இலங்கை தொடர்மாடிமனை முகாமைத்துவ அதிகாரசபையுடனும் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையுடனும் 2019 ஓகத்து 28ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துகொண்டது.

காணி விலைச் சுட்டெண் - 2019 முதலரையாண்டு

இலங்கை மத்திய வங்கியினால் தொகுக்கப்படுகின்ற கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைச் சுட்டெண் 2018இன் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 13.6 சதவீத அதிகரிப்பினைப் பதிவுசெய்து 2019 முதல் அரையாண்டின் போது 132.2 சுட்டெண்களை அடைந்தது. காணி விலைச் சுட்டெண்ணின் மூன்று துணை விலைச் சுட்டெண்களான அதாவது, வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் துணைச் சுட்டெண்கள் இவ்வதிகரிப்பிற்கு பங்களிப்புச் செய்தன. 

கைத்தொழில் காணி விலைச் சுட்டெண்ணானது 14.9 சதவீதம் கொண்ட ஆண்டிற்கு ஆண்டு அதிகூடிய அதிகரிப்பினை பதிவு செய்த அதேவேளைஇ வர்த்தக காணி விலைச் சுட்டெண் மற்றும் வதிவிடக் காணி விலைச் சுட்டெண் என்பன முறையே 13.2 சதவீதத்தினாலும் 12.8 சதவீதத்தினாலும் அதிகரித்தன. அதேவேளைஇ 2018இன் 2ஆம் அரைப் பகுதியிலிருந்து 2019 முதலாம் அரைப் பகுதி வரை காணி விலைச் சுட்டெண் 5.1 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

முழுவடிவம்

Pages

சந்தை அறிவிப்புகள்