Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

அரச படுகடனைப் பதிவுசெய்வது தொடர்பாக அண்மையில் வெளிவந்த ஊடக அறிக்கைகளுக்கான தெளிவுபடுத்தல்

அரச படுகடனைப் பதிவு செய்வது தொடர்பிலும் கணக்குகளைப் பேணுவது தொடர்பிலும் 2018 பெப்புருவரி 08ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை பற்றி இலங்கை மத்திய வங்கியின் கவனம் ஈர்க்கப்பட்டிருக்கிறது.

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தினைக் குறிக்கும் விதத்தில் ஞாபகார்த்த நாணயத் தாளினை சுற்றோட்டத்திற்கு விடுதல்

நாட்டில் இடம்பெறும் 70ஆது சுதந்திர தின கொண்டாட்டங்களைக் குறிக்கும் விதத்தில் இலங்கை மத்திய வங்கி ரூபா 1000 ஞாபகார்த்த நாணயத் தாளினை 04.02.2018 அன்று சுற்றோட்டத்திற்கு விடுகிறது. இது இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் 4ஆவது ஞாபகார்த்தத் தாளாகும்.

ஞாபகார்த்த நாணயத் தாளின் அளவு, முதன்மையான நிறம் மற்றும் பாதுகாப்புப் பண்புகள் என்பன 11ஆவது நாணயத் தாள் தொடரிலுள்ள தற்போது சுற்றோட்டத்திலுள்ள ரூ.1000 நாணயத் தாளின் அதே பண்புகளுடன் பின்வரும் மாற்றங்களை மாத்திரம் கொண்டிருக்கும்.

தாளின் முன்பக்கத்தில் (கீழே காட்டப்பட்டுள்ளது):

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2017 நவெம்பர்

2017 நவெம்பரின் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றத்திற்கு அரச பிணையங்கள் சந்தைக்கான உயர்ந்த வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் காரணமாக சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கிற்கு ஏற்பட்ட தொடர்ச்சியான உட்பாய்ச்சல் ஆதரவாக அமைந்ததுடன், சுற்றுலாவிலிருந்த வருவாய்கள் சிறிதளவில் மேம்பட்டன. 2016 நவெம்பரில் பதிவுசெய்யப்பட்ட தாழ்ந்த தளத்தின் ஓரளவு காரணமாக ஏற்றுமதிகளில் இரட்டை இலக்க வளர்ச்சி பதிவுசெய்யப்பட்டிருக்கின்ற போதும் உயர்ந்த இறக்குமதிகளின் காரணமாக இம்மாத காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறை குறிப்பிடத்தக்களவிற்கு விரிவடைந்தது. அதேவேளை, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மோசமான பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிலைமைகளின் காரணமாக தொழிலாளர் பணவனுப்பல்கள் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்தன. இதன்படி, சென்மதி நிலுவை 2017 நவெம்பர் இறுதியளவில் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 2.0 பில்லியன் கொண்ட திரண்ட மிகையைப் பதிவுசெய்தது. மொத்த அலுவல்சார் ஒதுக்குகளும் 2016 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 6.0 பில்லியனிலிருந்து 2017 நவெம்பர் இறுதியில் ஐ.அ.டொலர் 7.3 பில்லியனுக்கு (4.2 மாத இறக்குமதிகளுக்குச் சமனானது) அதிகரித்தது.

2017 திசெம்பரில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013ஸ்ரீ100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2017 நவெம்பரின் 8.4 சதவீதத்திலிருந்து 2017 திசெம்பர்pல் 7.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சிக்கு 2016 திசெம்பரில் நிலவிய உயர்ந்த தளத் தாக்கமே காரணமாகும்.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றம் 2017 நவெம்பரின் 7.5 சதவீதத்திலிருந்து 2017 திசெம்பரில் 7.7 சதவீதத்துக்கு அதிகரித்தது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்(கொ.மு.சு) அளவீடு – 2017 திசெம்பர்

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் திசெம்பர் மாதத்தில் 59.1 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும ;போது 0.3 சுட்டெண் புள்ளிகளாலான ஒரு சிறிதளவான அதிகரிப்பாகும். இது தயாரிப்பு நடவடிக்கைகளானது 2017 நவம்பர் உடன் ஒப்பிடும் போது 2017 திசெம்பரில்; ஒரு உயர்வான வேகத்திலான அதிகரிப்பினை குறித்துக்காட்டுகின்றது. இது பிரதானமாக அதிகரித்திருந்த உற்பத்தி துணைச்சுட்டெண்ணினால் உந்தப்பட்டது. மேலும் நவம்பர் 2017 உடன் ஒப்பிடுகையில் மாதகாலப்பகுதியில் புதிய கட்டளைகள் துணைச்சுட்டெண் குறைவான வீதத்தில் அதிகரித்திருந்த வேளையில் கொள்வனவுகளின் இருப்பு மற்றும் தொழில்நிலை துணைச்சுட்டெண்களும் ஒரு உயர்வான வேகத்தில் அதிகரித்திருந்தது. இவ்வேளையில், நிரம்பலர் வழங்கல் நேர துணைச்சுட்டெண் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒரு உயர்வான வீதத்தில் நீட்சியடைந்திருந்தது. ஒட்டுமொத்தமாக கொ.மு.சுட்டெண்ணின் அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலான பெறுமானங்களை திசெம்பர் மாதத்தில் பதிவு செய்து ஒரு ஒட்டுமொத்த விரிவாக்கத்தினை காட்டியது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கை

2008 தொடக்கம் 2014 வரையான காலப்பகுதியின் போது அரசாங்கப் பிணையங்கள் வழங்குவதில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என்பது பற்றி இலங்கை மத்திய வங்கியிடமிருந்து உடனடி அறிக்கையொன்று கோரப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் 2018 சனவரி 11ஆம் நாளன்று வெளியிடப்பட்ட அறிக்கையின் மீது கவனம் ஈர்க்கப்படுகின்றது. அதிலுள்ள இறுதிப்பந்தியானது தடயம்சார் கணக்காய்வொன்று நடாத்தப்படும் எனக் குறிப்பிடுகின்றது. இக்கணக்காய்வானது 2008  தொடக்கம் 2014 வரையான காலப்பகுதியின் போது அரசாங்கப் பிணையங்கள் மற்றும் ஊழியர் சேம நிதியத் தொழிற்பாடுகள் மீது கவனம் செலுத்தும். இது வெளித்தரப்பினர் மூலம் நடாத்தப்படும். தடயம்சார் கணக்காய்வு நிறைவுபெறுவதற்கு முன்னர் இது தொடர்பில் ஏதேனும் அறிக்கையொன்றினை வெளியிடுவது உசிதமானதல்ல.  

Pages

சந்தை அறிவிப்புகள்