சிங்கபுத்ர பினான்ஸ் பிஎல்சி மீது விதிக்கப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பாக 2019.09.08 மற்றும் 2019.09.09 திகதிகளில் வெளியிடப்பட்ட பத்திரிகை அறிவித்தல்களுக்கு மேலதிகமாக, சிங்கபுத்ர பினான்ஸ் பிஎல்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச மூலதனத்தைப் பெருக்குகின்ற திட்டத்தினையும் வைப்பாளர்களின் நலவுரித்துக்களையும் கருத்திற்கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, சிங்கபுத்ர பினான்ஸ் பிஎல்சி சமர்ப்பித்த முன்மொழியப்பட்ட மூலதனத்தைப் பெருக்கும் திட்டத்தினைக் குறித்துரைக்கப்பட்ட காலவரையறைக்குள் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பினை சிங்கபுத்ர பினான்ஸ் பிஎல்சி இற்கு வழங்கியுள்ளது என்பதனை பொதுமக்களுக்கு அறியத்தருகின்றது.
















