இலங்கை ரூபாவிற்கான சந்தைக் கொடுகடன் வீதங்கள் தொடர்பான அண்மைய கொள்கைத் தீர்மானங்களை ஊடுகடத்துவதன் வினைத்திறனை மேம்படுத்தும் வகையில் உரிமம் பெற்ற வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட பணிப்புரைகளின் தொடர்ச்சியாக, இலங்கை ரூபா வைப்புக்களின் மீது உயர்ந்தபட்ச வட்டி வீதங்களை விதித்து 26 ஏப்பிறல் 2019இல் வெளியிடப்பட்ட 2019ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாணய விதிச் சட்டக் கட்டளை 24 செத்தெம்பர் 2019இல் அமுலுக்குவரும் வகையில் நாணயச் சபையால் மீளப்பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
















