2015 பெப்புருவரி 01 இலிருந்து 2016 மாச்சு 31 வரையான காலப்பகுதியின் திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் சனாதிபதி புலனாய்வுக் குழுவின் விதந்துரைப்புக்கள் மற்றும் அறிக்கை தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் அறிக்கையும் பொதுப்படுகடன் மற்றும் ஊழியர் சேம நிதியத்தின் முகாமைத்துவத்தினையும் கட்டுப்பாட்டினையும் மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட வழிமுறைகளும்.
2015 பெப்புருவரி 01 திகதி தொடக்கம் 2016 மாச்சு 31 வரையான காலப்பகுதியின் போது திறைசேரி முறிகளை வழங்கியமை தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் சனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியொன்றினை சனாதிபதியின் செயலாளர் 2018 சனவரி 10ஆம் நாளன்று அறிக்கையில் உள்ளடங்களப்பட்டுள்ள விதந்துரைப்புக்களை நடைமுறைப்படுத்தும் விதத்தில் அதனைப் பரிசீலிக்கும் பணியினை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரிடம் ஒப்படைக்கும் விதத்தில் கையளித்துள்ளார்.