இன்று அதாவது, 2024 மே 21 அன்று இலங்கை மத்திய வங்கி, இலங்கையின் நிதியியல் அறிவு வழிகாட்டலை அங்குரார்ப்பணம்செய்து, இலங்கையின் நிதியியல் இயலளவுகளை மேம்படுத்துவதை நோக்கிய முக்கிய படிமுறையினை அடையாளப்படுத்தியது. இலங்கையின் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் அத்திவாரமான இவ்வழிகாட்டலானது இலங்கையர்களின் நிதியியல் நடத்தையினை மேம்படுத்தி, அவர்களின் நிதிசார் தாக்குப்பிடிக்கும் தன்மையினை வலிமைப்படுத்தும் பொதுவானதோர் குறிக்கோளை நோக்கி நிதியியல் அறிவு முன்முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களையும் அணிசேர்த்து அவர்களுக்குச் சான்று அடிப்படையிலான வழிகாட்டலை வழங்குகின்றது. பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் வருகின்ற தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தினூடாக மத்திய வங்கியின் தலைமையில் பல்வேறு பங்குதாரர்களுக்கிடையிலான கூட்டான முயற்சிக;டாக உருவாக்கப்பட்ட இவ்வழிகாட்டல் நிதியியல் வசதிக்குட்படுத்தலைப் பேணிவளர்த்து, வாடிக்கையாளர் பாதுகாப்பினை மேம்படுத்தி நிதியியல் உறுதிப்பாட்டினை வலிமைப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்டுள்ளது.
















