ஆசியாவிற்கான நிதியியல் உறுதிப்பாட்டுச் சபை பிராந்திய ஆலோசனைக் குழு 2023.04.29 அன்று கொழும்பில் கூடியது. உன்னிப்பான கண்காணிப்பைத் தேவைப்படுத்திய அண்மைக்கால நிதியியல் அபிவிருத்திகள் மற்றும் பாதிக்கப்படும்தன்மைகளை இக்கலந்துரையாடல்கள் மையப்படுத்தியிருந்தன. அதற்கமைய, பிராந்தியம் முழுவதும் கிறிப்டோ-சொத்துச் செயற்பாடுகளுக்கான நிதியியல் உறுதிப்பாட்டுச் சபை ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பின் நடைமுறைப்படுத்தலை ஊக்குவிப்பதற்கான வழிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவில் அண்மைக்கால முன்னேற்றங்கள், நிதியியல் துறையில் அதன் வளர்ச்சியடைகின்ற உபயோகம் அத்துடன் நிதியியல் உறுதிப்பாட்டிற்கான அதன் உள்ளார்த்தங்கள் என்பவற்றைக் குழு கலந்துரையாடியது. காலநிலை மாற்றத்திலிருந்து தோன்றுகின்ற நிதியியல் இடர்நேர்வுகளை கையாளுவதன் மீது பிராந்தியத்தினுள் இடம்பெற்றுவருகின்ற முன்னேற்றத்தையும் உறுப்பினர்கள் மீளாய்வுசெய்ததுடன், எல்லை கடந்த கொடுப்பனவுகளை மேம்படுத்துதல் மீதான முன்னேற்றம் மற்றும் விரைவானதாகவும் மலிவானதாகவும் மிகவும் வெளிப்படைத்தன்மை மிக்கதாகவும் மற்றும் அனைவரையும் வசதிக்குட்படுத்துவதாகவும் அவற்றை இடம்பெறச்செய்வதிலுள்ள முக்கிய சவால்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
















