பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையானது 2024 உறுப்புரை IV ஆலோசனையினையும் இலங்கையுடனான 48 மாத காலம் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழான இரண்டாவது மீளாய்வினையும் நிறைவுசெய்து, அதன் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு சிறப்பு எடுப்பனவு உரிமை (சிஎஉ) 254 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 336 மில்லியன்) தொகைக்கான உடனடி அணுகலினை நாட்டிற்கு வழங்குகின்றது.
















