Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

நிதியியல் உளவறிதல் பிரிவினால் 2024 சனவரி 01 தொடக்கம் 2024 ஏப்பிறல் 30 வரை நிதியியல் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட நிருவாக ரீதியான தண்டப்பணங்கள்

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் பயனைக்கொண்டு, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிதியியல் நிறுவனங்களின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் பாரதூரம் என்பனவற்றை  பரிசீலனையிற்கொண்டு தண்டப்பணங்கள் விதித்துரைக்கப்படலாம்.

அதற்கமைய, பணம் தூயதாக்குதலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துநர் என்ற ரீதியில், நிதியியல் உளவறிதல் பிரிவு, நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு 2024 சனவரி 01  தொடக்கம் 2024 ஏப்பிறல் 30 வரையான காலப்பகுதியில் கீழே காட்டப்பட்டவாறு, மொத்தமாக ரூ.3 மில்லியன் கொண்ட தொகையினைத் தண்டப்பணமாக சேகரித்தது. தண்டப்பணங்களாக சேகரிக்கப்பட்ட தொகைத் திரட்டு நிதியத்திற்கு வரவுவைக்கப்பட்டன.

இலங்கை மத்திய வங்கியின் புதிய துணை ஆளுநர்களின் நியமனம்

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்க ஆளும் சபையினால் பரிந்துரைக்கப்பட்டவாறு உதவி ஆளுநரும் ஆளும் சபைக்கான செயலாளருமான திரு. ஏ.ஏ.எம். தாசிம் மற்றும் உதவி ஆளுநரான திரு. ஜே.பி.ஆர். கருணாரத்ன ஆகியோரை முறையே 2024.06.20 மற்றும் 2024.06.24 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர்களாக கௌரவ நிதி அமைச்சர் நியமித்துள்ளார். 

இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு, பஹ்ரைன் இராச்சியத்தின் நிதியியல் உளவறிதல் தேசிய நிலையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை மேற்கொண்டிருக்கின்றது

இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது, பணம் தூயதாக்குதல் மற்றும் அதனுடன் இணைந்த ஊகக் குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடுவதுடன் தொடர்பான குற்றங்களுடன் தொடர்பான நிதியியல் உளவறிதல்களைப் பரிமாறிக்கொள்வதற்காக பிரான்சின் பாரிசில் நடைபெற்ற எக்மவுன்ட் குழுமத்தின் 30 ஆவது கூட்டத்தில், 2024 யூன் 04ஆம் நாளன்று பஹ்ரைன் இராச்சியத்தின் நிதியியல் உளவறிதல் தேசிய நிலையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை மேற்கொண்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது, 2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில் இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (தயாாிப்பு மற்றும் பணிகள்) - 2024 மே

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 மேயில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் ஆகிய இரண்டிலும் முன்னேற்றங்களை எடுத்துக்காட்டுகின்றன.

தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2024 மேயில் 58.2 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் விரிவாக்கமொன்றைப் எடுத்துக்காட்டியது. தொழில்நிலை தவிர அனைத்து துணைச் சுட்டெண்களும் மாத காலப்பகுதியில், நடுநிலையான எல்லைக்கு மேலே உயர்வடைந்து, சுட்டெண் பெறுமதியில் ஒட்டுமொத்த அதிகரிப்பொன்றை விளைவித்தன. 

பணிகளுக்கான இலங்கைக் கொ.மு.சுட்டெண் (கொ.மு.சு – பணிகள்), 55.0 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்த வியாபார நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2024 மேயில் பணிகள் நடவடிக்கைகளில் மெதுவான விரிவடைதலை எடுத்துக்காட்டியது.

இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு, இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை மேற்கொண்டிருக்கின்றது

இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு, இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுடன் பணம் தூயதாக்குதல், இலஞ்சம் அல்லது ஊழல் மற்றும் ஏனைய தொடர்பான குற்றங்கள் பற்றிய புலனாய்வுகள் மற்றும் வழக்குத் தொடுப்புக்கள் தொடர்பான தகவல்களைப் பரிமாற்றிக்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை மேற்கொண்டிருக்கின்றது.

45ஆவது சார்க்பினான்ஸ் ஆளுநர்களின் கூட்டம் மற்றும் கருத்தரங்கு

இலங்கை மத்திய வங்கி 2024 யூன் 13-14ஆம் திகதிகளில் 45ஆவது சார்க்பினான்ஸ்; ஆளுநர்களின் கூட்டம் மற்றும் கருத்தரங்கை நடாத்தியிருந்தது. இந் நிகழ்ச்சியில் ஆளுநர்கள், நிதிச் செயலாளர்கள், சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் சார்க் பிராந்தியத்தில் உள்ள மத்திய வங்கிகள் மற்றும் நிதி அமைச்சுக்களின் ஏனைய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

முதல் நாளில், “பன்முக - உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் மத்திய வங்கியியல்” என்ற கருப்பொருளில் சார்க்பினான்ஸ்;; ஆளுநர்களின் கருத்தரங்கு கொழும்பில் உள்ள ஹில்டன் கொழும்பு விடுதியில் நடைபெற்றது. இலங்கையின் சனாதிபதியும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சருமான மேன்மைமிகு ரணில் விக்கிரமசிங்கே தொடக்க விழாவில் கலந்துகொண்டு பிரதான உரையை நிகழ்த்தினார். சமகால பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சனாதிபதி தனது உரையில் வலியுறுத்தினார். நாணய மற்றும் இறை உறுதிப்பாட்டின் அவசியத்தை அவர் மீண்டும் வலியுறுத்தியதுடன் நாட்டில் நீடித்திருக்கும் உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்துவதற்கு சட்டக்கட்டமைப்பினை வலுப்படுத்துவதற்காக தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளைக் கோடிட்டுக்காட்டினார். சார்க் அமைப்பின் பொதுச்செயலாளர், தூதர் முகமது கேலாம் சர்வரும் தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.

Pages

சந்தை அறிவிப்புகள்