Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை அறிமுகப்படுத்துவதன் மூலமாக ஒற்றைக் கொள்கை வட்டி வீத பொறிமுறையொன்றினை நடைமுறைப்படுத்துகின்றது

ஒற்றைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறையின் திட்டமிடப்பட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பில் சனவரி 2024இல் இலங்கை மத்திய வங்கியின்; ஆண்டுக்கான கொள்கை அறிக்கையிலும் அதனை தொடர்ந்து 2024 செத்தெம்பரிலும் அறிவிக்கப்பட்டவாறு, இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2024 நவெம்பர் 27இலிருந்து இரட்டைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறையிலிருந்து ஒற்றைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்தது. இது மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பில் மேலுமொரு குறிப்பிடத்தக்க மேம்பாட்டை குறிக்கிறது. இதற்கமைய, மத்திய வங்கி தனது நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை சமிக்ஞை செய்வதற்கும் தொழிற்படுத்துவதற்கும் அதன் முதன்மை நாணயக் கொள்கைக் கருவியாக ஓரிரவு கொள்கை வீதத்தினை அறிமுகப்படுத்துகிறது. இலங்கை மத்திய வங்கியின் நாணயக்; கொள்கை நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தைக் குறித்துக்காட்டி தொடர்பூட்டுவதற்கு ஓரிரவு கொள்கை வீதமானது காலத்திற்குக் காலம் மீளாய்வு செய்யப்பட்டு தேவைக்கேற்ப சீராக்கப்படும். இந்த மாற்றம், நிதியியல் சந்தைகள் மற்றும் பரந்த பொருளாதாரத்திற்கு நாணயக் கொள்கை சமிக்ஞையிடலின் வினைத்திறன் மற்றும் செயற்றிறனையும் ஊடுகடத்தலையும் மேம்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

2024 மே தொடக்கம் ஒத்தோபர் வரை அறிக்கையிடும் நிறுவனங்கள் மீது நிதியியல் உளவறிதல் பிரிவு மூலம் விதிக்கப்பட்ட நிருவாக ரீதியான தண்டப்பணங்கள்

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் பயனைக்கொண்டு, நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்களின் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிதியியல் நிறுவனங்களின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் பாரதூரம் என்பனவற்றை பரிசீலனையிற் கொண்டு தண்டப்பணங்கள் விதித்துரைக்கப்படலாம்.

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் கீழான மூன்றாவது மீளாய்வு தொடர்பிலான அலுவலர் மட்ட உடன்படிக்கையினை பன்னாட்டு நாணய நிதியம் எட்டியுள்ளது

பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியினால் ஆதரவளிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டதின் மூன்றாவது மீளாய்வினை நிறைவுசெய்வதற்கான பொருளாதாரக் கொள்கைகள் குறித்த அலுவலர் மட்ட உடன்படிக்கையினை பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களும் இலங்கை அதிகாரிகளும் எட்டியுள்ளனர். மீளாய்வானது பன்னாட்டு நாணய நிதியத்தின் முகாமைத்துவத்தினால் ஒப்புதலளிக்கப்பட்டு, பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையினால் நிறைவுசெய்யப்பட்டவுடன் நிதியிடலில் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 333 மில்லியன் தொகைக்கான அணுகலினை இலங்கை கொண்டிருக்கும்.

இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2024 ஒத்தோபர்

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 ஒத்தோபரில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் ஆகிய இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன

தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2024 ஒத்தோபரில் 58.1 ஆக அதிகரித்து. தயாரிப்பு நடவடிக்கைகளில் மேலும் விரிவடைதலை எடுத்துக்காட்டியது. இம்மேம்பாடானது அனைத்துத் துணைச் சுட்டெண்களிலிருந்தும் கிடைத்த சாதகமான பங்களிப்புகளுடன் பருவ காலக் கேள்வியினால் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது.

இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு, அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை கைச்சாத்திட்டுள்ளது

இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது, பணம் தூயதாக்குதல், பயங்கரவாதி நிதியிடல் மற்றும் இணைந்த குற்றங்கள்  மற்றும் அதனுடன் இணைந்த எவரேனும் ஆட்கள் பற்றி விசாரணைகள் மற்றும் வழக்குத்தொடுத்தல்கள் மீது தகவல்களைப் பரிமாற்றுவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்துடன் 2024 நவெம்பர் 04 அன்று இலங்கை மத்திய வங்கியில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைக் கைச்சாத்திட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது, 2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளின் பிரகாரம் நிதியியல் உளவறிதல் பிரிவினால் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2024 ஒத்தோபரில் எதிர்மறையான புலத்தில் காணப்பட்டது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021ஸ்ரீ100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது இலங்கை மத்திய வங்கியின் அண்மைய கால எறிவுகளுக்கு இசைவாக, தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாகவும் எதிர்மiறாயான புலத்தில் காணப்பட்டு, 2024 செத்தெம்பரின் 0.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில்  2024 ஒத்தோபரில் 0.8 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்தினைப் பதிவுசெய்தது.

Pages