இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2024 நவெம்பர் 26ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை மேலும் தளர்த்துவதற்கும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஓரிரவுக் கொள்கை வீதத்தினை 8.00 சதவீதமாக நிர்ணயிப்பதற்கும் தீர்மானித்துள்ளது. இம்மாற்றத்துடன் கொள்கை வட்டி வீதத்தின் வினைத்திறனான குறைப்பானது நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் தொழிற்பாட்டு இலக்காகத் தொடர்ந்து தொழிற்படுகின்ற சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதத்தின் தற்போதைய மட்டத்திலிருந்து ஏறத்தாழ 50 அடிப்படைப் புள்ளிகளாக அமையும்.
















