Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

கட்டடவாக்கத் தொழிற்துறைக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் - 2024 செத்தெம்பர்

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), 48.6 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்திருந்த மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2024 செத்தெம்பரில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் வீழ்ச்சியொன்றினை எடுத்துக்காட்டுகின்றது. மாதகாலப்பகுதியில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் குறிப்பாக தேர்தல் தொடர்புபட்ட இடையூறுகள் காரணமாக சிறிதளவான மிதமடைதலை பல அளவீட்டு பதிலிறுப்பாளர்கள் அவதானித்தனர்.

இலங்கை மத்திய வங்கியின் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் மற்றும் நாணய அச்சிடல் பற்றிய விளக்கம்

இலங்கை மத்திய வங்கி அதன் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளூடாக 2024 ஒத்தோபர் 25 அன்று ரூ.100 பில்லியன்களை “அச்சிட்டது” எனக் குறிப்பிட்டு அண்மையில் அறிக்கைகள் வெளிவந்தன. இவ்வறிக்கைகள் செம்மையற்றவை மற்றும் அடிப்படையற்றவை என்பதை தெளிவுபடுத்துவது முக்கியமானதாகும். திறந்த சந்தைத் தொழிற்பாடுகளூடாக திரவத்தன்மையை (பணம்) உட்செலுத்துவது பொருளாதாரத்தில் குறுகிய கால வட்டி வீதங்களை நிலைநிறுத்தி விலை நிலையுறுதியை உறுதிசெய்யும் நோக்கத்திற்காக வங்கித்தொழில் முறைமையில் போதுமான திரவத்தன்மையை முகாமைசெய்வதை  நோக்காகக்கொண்ட வழமையான மத்திய வங்கித் தொழிற்பாடொன்றாகும். ஆகையினால் அது “நாணயம் அச்சிடல்” என ஒட்டுமொத்தமாக தவறாகப் பொருள்கொள்ளப்பட முடியாது.

46ஆவது சார்க்பினான்ஸ் ஆளுநர்களின் குழுக் கூட்டம்

46ஆவது சார்க்பினான்ஸ் ஆளுநர்களின் குழுக் கூட்டத்தினை 2024 ஒத்தோபர் 24 அன்று வொஷிங்டன், டிசியில் இலங்கை மத்திய வங்கி தலைமை தாங்கி நடாத்தியது. பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் உலக வங்கிக் குழுவின் வருடாந்த கூட்டங்களின் துணை நிகழ்வொன்றாக இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆளுநர்கள், நிதிச் செயலாளர்கள் மற்றும் சார்க் உறுப்பு நாடுகளின் மத்திய வங்கிகள் மற்றும் நிதி அமைச்சுக்கள் என்பவற்றிலிருந்தான ஏனைய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2024 செத்தெம்பர்

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 செத்தெம்பரில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன.

இலங்கை மத்திய வங்கி, 2024ஆம் ஆண்டிற்கான நிதியியல் உறுதித்தன்மை மீளாய்வினை வெளியிட்டிருக்கிறது

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 70(1)இன் நியதிகளில் இலங்கை மத்திய வங்கி 2024 ஆம் ஆண்டிற்கான நிதியியல் உறுதித்தன்மை மீளாய்வினை வெளியிட்டிருக்கின்றது. இச்சட்டரீதியான அறிக்கை, நிதியியல் முறைமையின் உறுதித்தன்மை மீதான கணிப்பீட்டுடன் தொடர்பான இடர்நேர்வுகள் மற்றும் பாதிக்கப்படும் தன்மைகள் என்பனவற்றை அடையாளம் கண்டு, மதிப்பீடு செய்வதோடு மத்திய வங்கி மற்றும் ஏனைய ஒழுங்குமுறைப்படுத்தல்  அதிகாரசபைகளினால் செயற்படுத்தப்பட்ட கொள்கை வழிமுறைகளையும் மேற்கோடிடுகிறது.

உரிமம்பெற்ற வங்கிகளில் கம்பனி ஆளுகை நடைமுறைகளை வலுப்படுத்துதல்

இலங்கை மத்திய வங்கி, உரிமம்பெற்ற வங்கிகளுக்காக கம்பனி ஆளுகை தொடர்பில் 2024ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டப் பணிப்புரைகளை 2024.09.30 அன்று வழங்கியமை பற்றிய அறிவித்தலை விடுப்பதற்கு விரும்புகின்றது. இப்பணிப்புரைகள், உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினதும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளினதும் (இதனகத்துப் பின்னர் உரிமம்பெற்ற வங்கிகள் எனக் குறிப்பிடப்படும்) கம்பனி ஆளுகை செயன்முறைகளையும் நடைமுறைகளையும் வலுப்படுத்துகின்ற நோக்குடன் விடுக்கப்பட்டதுடன் இதன்மூலம் வங்கித்தொழில் துறையின் பாதுகாப்பினையும் ஆற்றல்வாய்ந்த தன்மையினையும் அத்துடன் ஒட்டுமொத்தமாக நிதியியல் முறைமையினையும் மேம்படுத்தும் பொருட்டு, பொறுப்புமிக்கதாகவும் பொறுப்புக்கூறும் விதத்திலும் வங்கித்தொழில் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதற்கு வசதியளிக்கப்படுகின்றது.

Pages

சந்தை அறிவிப்புகள்