இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது, பணம் தூயதாக்குதல், பயங்கரவாதி நிதியிடல் மற்றும் இணைந்த குற்றங்கள் தொடர்பில் நம்பிக்கைப் பொறுப்புக்கள் மற்றும் ஆதனப் பதிவுகளுடன் தொடர்புடைய நம்பிக்கைப் பொறுப்புக்கள், ஆதனப் பதிவுகள் அத்துடன் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்தின் பதிவாளர் நாயகத்துடன் 2024 ஓகத்து 06 அன்று இலங்கை மத்திய வங்கியில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைக் கைச்சாத்திட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது, 2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளின் பிரகாரம் நிதியியல் உளவறிதல் பிரிவினால் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
















