உரிமம்பெற்ற வங்கிகளில் கம்பனி ஆளுகை நடைமுறைகளை வலுப்படுத்துதல்

இலங்கை மத்திய வங்கி, உரிமம்பெற்ற வங்கிகளுக்காக கம்பனி ஆளுகை தொடர்பில் 2024ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டப் பணிப்புரைகளை 2024.09.30 அன்று வழங்கியமை பற்றிய அறிவித்தலை விடுப்பதற்கு விரும்புகின்றது. இப்பணிப்புரைகள், உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினதும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளினதும் (இதனகத்துப் பின்னர் உரிமம்பெற்ற வங்கிகள் எனக் குறிப்பிடப்படும்) கம்பனி ஆளுகை செயன்முறைகளையும் நடைமுறைகளையும் வலுப்படுத்துகின்ற நோக்குடன் விடுக்கப்பட்டதுடன் இதன்மூலம் வங்கித்தொழில் துறையின் பாதுகாப்பினையும் ஆற்றல்வாய்ந்த தன்மையினையும் அத்துடன் ஒட்டுமொத்தமாக நிதியியல் முறைமையினையும் மேம்படுத்தும் பொருட்டு, பொறுப்புமிக்கதாகவும் பொறுப்புக்கூறும் விதத்திலும் வங்கித்தொழில் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதற்கு வசதியளிக்கப்படுகின்றது.

முழுவடிவம்

Published Date: 

Thursday, October 3, 2024