Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

2023.03.30 அன்று முதலீட்டாளர்களுக்கான மெய்நிகர் எடுத்துரைப்பின் பின்னர் ஆளுநரும் திறைசேரிக்கான செயலாளரும் விடுக்கும் அறிக்கை

2023 மாச்சு 20 அன்று, பன்னாட்டு நாணய நிதியத்திலிருந்தும் வேறு பன்னாட்டு நிதி நிறுவனங்களிலிருந்தும் ஐ.அ.டொலர் 7 பில்லியன் நிதியிடலுக்கு வழியமைத்து பன்னாட்டு நாணய நிதியச் சபை இலங்கைக்கான பன்னாட்டு நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒப்புதலளித்தது. பன்னாட்டு நாணய நிதியத்தின் நிகழ்ச்சித்திட்டமானது கொள்கை நடைமுறைப்படுத்தல் நியதிகளில் தெளிவான வழிகாட்டலொன்றை வழங்குவதுடன் இலங்கையின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தி, சாத்தியமான அதன் வளர்ச்சியினை மீட்டெடுப்பதற்கும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் தன்மைகளை நிவர்த்திசெய்வதையும் இயலச்செய்கின்றது.

இலங்கையில் தற்போதைய பேரண்டப் பொருளாதார நிலைமை பற்றி விளக்கமளிப்பதற்கும், பன்னாட்டு நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய தூண்கள் அத்துடன் குறிக்கோள்கள் பற்றியும் அதேபோன்று கடன்கொடுநர்களுடன் ஈடுபடுவது தொடர்பில் எடுக்கப்படவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்துரைப்பதற்கும் நாம் இன்று முதலீட்டாளர் எடுத்துரைப்பொன்றினை நடாத்தினோம். 

மறைக்குறி நாணயத்தைப் (Cryptocurrency) பயன்படுத்துவதிலும் முதலீடுசெய்வதிலுமுள்ள இடர்நேர்வுகள்

“கிறிப்டோ” என பொதுவாக குறிப்பிடப்படும் மறைக்குறி நாணயங்கள் தொடர்பில் பொதுமக்கள் விசாரணைகளையும் அவதானிக்கப்படும் அபிவிருத்திக்களையும் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது கிறிப்டோ நாணயங்களைப் பயன்படுத்துவதுடனும் முதலீடுசெய்வதுடனும் தொடர்புடைய குறிப்பிடத்தக்க இடர்நேர்வுகள் பற்றி பொதுமக்களுக்கு மீளவும் வலியுறுத்துகின்றது. கிறிப்டோ நாணயம் என்பது ஒரு நாட்டின் நாணய அதிகாரசபையினாலன்றி தனியார் நிறுவனங்களினால் உருவாக்கப்படுகின்ற மெய்நிகர் நாணய வகையொன்றாகும். ‘கிறிப்டோ நாணயம்’ என்ற சொற்பதமானது மறைகுறியாக்கம் மற்றும் பகிரப்பட்ட பேரட்டு தொழில்நுட்பம் அல்லது அதையொத்த தொழில்நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்ற டிஜிட்டல் பெறுமதியின் பிரதிநிதித்துவத்தைக் குறிப்பிடுகின்றது. கிறிப்டோ – வர்த்தகம், இலாபகரமான முதலீடொன்றாக சில நிறுவனங்களினால் பரந்தளவில் ஊக்குவிக்கப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் கீழ் ஐ.அ.டொலர் 3 பில்லியனிற்குப் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை ஒப்புதலளிக்கின்றது

இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் மறுசீரமைப்புக்களுக்கும் ஆதரவளிக்கும் பொருட்டு  சி.எ.உ 2.286 பில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 3 பில்லியன்) கொண்ட விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் 48 மாதங்கள் நீடிக்கப்பட்ட ஏற்பாடொன்றிற்கு பன்னாட்டு நாணய நிதிய சபை ஒப்புதலளித்தது.

பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினையும் படுகடன் நீடித்துநிலைத்திருக்கும் தன்மையினையும் மீட்டெடுத்தல், நிதியியல் உறுதிப்பாட்டினைப் பாதுகாத்தல் மற்றும் இலங்கையின் வளர்ச்சி வாய்ப்புக்களை வெளிக்கொண்டு வருவதற்கான கட்டமைப்புசார் சீர்திருத்தங்களை விரைவுபடுத்தல் என்பன விரிவாக்கப்பட்ட நிதிய வசதியினால் ஆதரவளிக்கப்பட்ட செயற்றிட்டத்தின் நோக்கங்களாகும். அனைத்து செயற்றிட்ட வழிமுறைகளும் மிகவும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்தல் மற்றும் ஆளகையினை மேம்படுத்துகின்றதன் அவசியத்தினைக் கவனத்திற்கொண்டுள்ளன.

செயற்றிட்ட சுட்டளவுகளுக்கு இணங்க படுகடன் நீடித்துநிலைத்திருக்கும் தன்மையினை மீட்டெடுக்கும் படுகடன் முகாமைத்துவமொன்றினைத் துரிதப்படுத்துவதற்கு இலங்கைக்கும் அதன் சகல கொடுகடன் வழங்குநர்களுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பானது இன்றியமையானதாகும்.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2023 பெப்புருவரி

தயாரித்தல் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்,  பெப்புருவரியில் மாதத்திற்கு மாதம் அடிப்படையில் 42.3 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியான பின்னடைவினை எடுத்துக்காட்டியது. புதிய கட்டளைகள், உற்பத்தி, தொழில்நிலை  மற்றும்  கொள்வனவுகளின் இருப்பு என்பவற்றில் அவதானிக்கப்பட்ட குறைவடைந்த செயலாற்றுகையினால் இப்பின்னடைவு தூண்டப்பட்டிருந்தது

“இலங்கை மத்திய வங்கிச் சட்டமூலம்” பற்றி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க வழங்கும் பகிரங்க விரிவுரை (சிங்கள மொழிமூலம்)

சட்டமாக நிறைவேற்றப்பட்டவுடன் இலங்கை மத்திய வங்கியினை ஆளுகின்ற சட்டவாக்கமாக வரவுள்ள இலங்கை மத்திய வங்கிச் சட்டமூலம் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்,  இது பொதுமக்களின் அபிப்பிராயங்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நோக்கில், முன்மொழியப்பட்ட சட்டமூலம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க, பகிரங்க விரிவுரையொன்றினை சிங்கள மொழிமூலம் வழங்கவுள்ளதுடன் அதனைத்தொடர்ந்து வளவாளர்களைக்கொண்ட குழாமொன்றுடனான கலந்தாராய்வொன்றும் இடம்பெறும். இதில் எவையேனும் கரிசனைகள் ஏதுமிருப்பின் தெரிவுபடுத்திக்கொள்வதற்கான வாய்ப்பும் அவையோருக்கு வழங்கப்படும்.

மத்திய வங்கியின் வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வுநிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு 2023 மாச்சு 16 அன்று ராஜகிரிய, ஸ்ரீ ஜயவர்த்தனபுர, இல.58 இல் அமைந்துள்ள வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வுநிலையத்தின் கேட்போர் கூடத்தில் பி.ப.2.30 தொடக்கம் பி.ப.4.30 வரை இடம்பெறும்.

இலங்கையின் 75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் முகமாக வெளியிடப்பட்ட ஞாபகார்த்த நாணயக் குற்றியின் விற்பனை

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை குறிக்கும் முகமாக வெளியிடப்பட்ட சுற்றோட்டம் செய்யப்படாத மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஞாபகார்த்த நாணயக் குற்றிகள், 2023.03.09ஆம் திகதி தொடக்கம் முதலில் வருவோருக்கு முதலில் வழங்குதல் அடிப்படையில் தனிப்பட்ட அடையாள விபரங்களைப் பெற்று, குற்றியொன்றுக்கு ரூ.6,000 விலையில் விற்பனைக்காகக் கிடைக்கப்பெறும் என்பதுடன் பின்வரும் மத்திய வங்கி விற்பனை நிலையங்களில் ஆளொருவருக்கு ஒரு குற்றி வீதம் என விற்பனை மட்டுப்படுத்தப்படும். 

முழுவடிவம்

Pages

சந்தை அறிவிப்புகள்