2023 மாச்சு 20 அன்று, பன்னாட்டு நாணய நிதியத்திலிருந்தும் வேறு பன்னாட்டு நிதி நிறுவனங்களிலிருந்தும் ஐ.அ.டொலர் 7 பில்லியன் நிதியிடலுக்கு வழியமைத்து பன்னாட்டு நாணய நிதியச் சபை இலங்கைக்கான பன்னாட்டு நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒப்புதலளித்தது. பன்னாட்டு நாணய நிதியத்தின் நிகழ்ச்சித்திட்டமானது கொள்கை நடைமுறைப்படுத்தல் நியதிகளில் தெளிவான வழிகாட்டலொன்றை வழங்குவதுடன் இலங்கையின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தி, சாத்தியமான அதன் வளர்ச்சியினை மீட்டெடுப்பதற்கும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் தன்மைகளை நிவர்த்திசெய்வதையும் இயலச்செய்கின்றது.
இலங்கையில் தற்போதைய பேரண்டப் பொருளாதார நிலைமை பற்றி விளக்கமளிப்பதற்கும், பன்னாட்டு நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய தூண்கள் அத்துடன் குறிக்கோள்கள் பற்றியும் அதேபோன்று கடன்கொடுநர்களுடன் ஈடுபடுவது தொடர்பில் எடுக்கப்படவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்துரைப்பதற்கும் நாம் இன்று முதலீட்டாளர் எடுத்துரைப்பொன்றினை நடாத்தினோம்.