நாட்டின் பிரதான பாடசாலை என்ற ரீதியில் கொழும்பு 5இல் அமைந்துள்ள விசாகா வித்தியாலயம் நாட்டிற்கு ஆற்றிய அதன் பங்களிப்பினை அங்கீகரிக்கின்ற விதத்திலும் அதன் 100ஆவது ஆண்டு நிறைவினைக் குறிக்கும் விதத்திலும் ரூ.2,000 முகப்புப் பெறுமதியினைக் கொண்ட சுற்றோட்டப்படுத்தப்படாத வெள்ளி ஞாபகார்த்த நாணயக் குத்தியொன்றினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டிருக்கின்றது.
முதலாவது நாணயக் குத்தியானது மேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமியினால் 23.01.2017 அன்று கொழும்பு 5இலுள்ள விசாகா வித்தியாலயத்தின் ஜெறிமியாஸ் டயஸ் மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் வைத்து அலுவல்சார் ரீதியாக கையளிக்கப்பட்டது.