வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம், 2018 ஏப்பிறல் 12, வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்குவரத்தக்க விதத்தில் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு அரசியல் யாப்பின் 70ஆம் உறுப்புரைக்கமைவாக சனாதிபதி அவரது அரசியலமைப்பு உரிமையினை பிரயோகித்துள்ளார். அடுத்த பாராளுமன்ற அமர்வு 2018 மே 08 அன்று ஆரம்பிக்கும். இக்காலப்பகுதியின் போது பிரேரணைகள் அல்லது வினாக்கள் எதுவும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படமுடியாது என்பதுடன் பாராளுமன்றம் மூலமான ஏதேனும் முன்கூட்டிய நடவடிக்கைகள் செல்லுபடியானதாகவிருக்கும். பாராளுமன்றத்தினை ஒத்திவைத்தலானது அரசாங்கம் தொழிற்படுவதில் அல்லது இயங்குவதில் தாக்கம் எதனையும் கொண்டிராது.















