இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்தின் கீழ், நிதித் தொழிலைக் கொண்டு நடத்துவதற்காக சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இற்கு வழங்கிய உரிமத்தினை இரத்துச் செய்வதற்கான அறிவித்தலை விடுப்பதற்கு 2017.11.06ஆம் திகதி தீர்மானித்திருக்கின்றது.
சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, அக்கம்பனியின் முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தவறான முகாமைத்துவம் மற்றும் ஒழுங்கற்ற கொடுக்கல்வாங்கல்களின் காரணமாக 2013ஆம் ஆண்டிலிருந்து கடுமையான திரவத்தன்மை நெருக்கடிகளை எதிர்நோக்கியது. இக்கம்பனிகளின் பணிப்பாளர்களும் மூத்த முகாமைத்துவமும் சொத்துக்களின் பெறுமதியினை மோசடியான முறையில் பெருப்பித்துக் காட்டியமை அவதானிக்கப்பட்டிருப்பதுடன் அத்தகைய சொத்துக்களுடன் தொடர்பான ஆவணங்களின் பரீட்சிப்புக்கள் அவை ஒன்றில் புனையப்பட்டனவாகவோ அல்லது வில்லங்கமான முறைகளுடன் சிக்க வைக்கப்பட்டனவாகவோ இருப்பதனை எடுத்துக்காட்டின.