Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசு ஐ.அ.டொலர் 1.5 பில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளை வழங்குதல்

இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் சார்பில், இலங்கை மத்திய வங்கி புதிய ஐ.அ.டொலர் 1.5 பில்லியன் கொண்ட 10 ஆண்டிற்கான பன்னாட்டு முறிகளை (முறிகள்) 2017 மே 04ஆம் நாளன்று வெற்றிகரமாக வழங்கியிருக்கிறது. முறிகளை மூடிஸ் இன்வெஸ்ட்டர் சேர்விஸ், ஸ்டான்டட் அன்ட் புவர் மற்றும் பிட்ஜ் றேடிங் என்பன முறையே ‘B1’, ‘B+’ மற்றும் ‘B+’ இல் தரமிட்டிருக்கின்றன.

இது, இலங்கையின் பதினோராவது ஐ.அ.டொலர் அடிப்படை அளவுக் குறியீட்டினைக் குறிப்பதாகவும் 2007இற்குப் பின்னர் பன்னாட்டு முறிச் சந்தையில் முன்வைக்கப்படுமொன்றாகவும் பல ஆண்டுகளாகப் பன்னாட்டு முதலீட்டாளர் சமூகம் இலங்கைக்குத் தொடர்ச்சியாக அளித்துவரும் ஆதரவிற்கு ஒரு தெளிவான சாசனமாகவும் காணப்படுகின்றது. சிட்டிகுறூப், டியூச் பாங்க், எச்எஸ்பீசி, ஐசிபிசி இன்ரந~னல், ஜே.பி. மோர்கன் மற்றும் ஸ்டான்டட் அன்ட்ட வங்கி என்பன இவ்வெற்றிகரமாக கொடுக்கல்வாங்கலின் கூட்டு முதன்மை முகாமையாளர்களாகவும் பதிவு ஏற்பாட்டாளர்களாகவும் விளங்கினர்.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - சனவரி 2017

2017இல் இலங்கையின் வெளிநாட்டுத் துறை மிதமான செயலாற்றமொன்றினை எடுத்துக்காட்டியது. அதிகரித்த இறக்குமதிச் செலவினம், ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பனவற்றின் விளைவாக இம்மாத காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. எனினும், சுற்றுலாவிலிருந்தான வருவாய்களின் நியதிகளில் வெளிநாட்டு நாணயங்களின் பெறுகைகள் 2017 சனவரியில் ஒப்பீட்டு ரீதியில் உயர்ந்த வளர்ச்சியைப் பதிவுசெய்த வேளையில் தொழிலாளர் பணவனுப்பல்கள், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் மிதமான வீதமொன்றால் வளர்ச்சியடைந்தன. அரச பிணையங்கள் சந்தையும; கொழும்பு பங்குப் பரிவர்த்தனையும; 2017 சனவரியில் தேறிய வெளிப்பாய்ச்சலைக் காட்டின.

முழுவடிவம்

“மத்திய வங்கி உங்களிடம் வருகிறது” - இலங்கை மத்திய வங்கியினால் நடத்தப்படும் முழுநாள் நிகழ்ச்சித்திட்டம்

இலங்கை மத்திய வங்கி “மத்திய வங்கி உங்களிடம் வருகின்றது” என்ற தலைப்பிலான அதன் முதலாவது முழுநாள் நிகழ்ச்சித்திட்டத்தினை 805, திருகோணமலை வீதி, மண்தண்டாவல, மாத்தளை என்ற முகவரியிலுள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகத்தில் 2017 மே 5ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்றும் 6ஆம் நாள் சனிக்கிழமையன்றும் மு.ப. 9.00 மணியிலிருந்து பி.ப. 8.00 மணிவரை நடத்தவுள்ளது. 

இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம், பொதுமக்கள் இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் ஊ.சே. நிதியம், சேதமடைந்த நாணயத் தாள்களைப் பரிமாற்றிக் கொள்ளுதல், நாணயக் குத்திகளை வழங்குதல், நாணய அரும்பொருட்காட்சிச்சாலை இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளை விற்பனைப்படுத்தல், சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் கடன் திட்டங்கள் போன்றவற்றுடன் தொடர்பான பணிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் மூத்த முகாமைத்துவத்தினருடன் பரஸ்பரத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் இயலுமைப்படுத்துவதாகும். 

பன்னாட்டு நாணய நிதியம் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது மீளாய்வு தொடர்பில் அலுவலர் - மட்டத்திலான உடன்படிக்கையை அடைந்துள்ளது.

இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்தினைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இத்தூதுக் குழு ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில், அலுவலர்கள் அறிக்கையினைத் தயாரிப்பர். இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு, கலந்துரையாடல்களுக்கும் தீர்மானங்களுக்குமாக பன்னாட்டு நாணய நிதிய நிறைவேற்றுச் சபைக்குச் சம்ர்ப்பிக்கப்படும்.

அரச பிணையங்கள் சந்தையின் வெளிப்படைத்தன்மையில் மேலும் முன்னேற்றங்கள்

இலங்கை மத்திய வங்கி 2017.04.26இல் அரச பிணையங்களின் மீள்கொள்வனவுக் கொடுக்கல்வாங்கல் வர்த்தகத்திற்கு முதனிலை வணிகர்களும் உரிமம் பெற்ற வங்கிகளும் பு;ம்பேர்க் இலத்திரனியல் முறி வர்த்தகப்படுத்தல் தளத்தினைப் பயன்படுத்த வேண்டுமென்பதனைக் கட்டாயமாக்கியிருக்கிறது. இதன்படி, அவர்கள்:

2016ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை

1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க இலங்கை நாணய விதிச் சட்டத்தின் 35ஆம் பிரிவின் நியதிகளுக்கிணங்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினது அறுபத்தேழாவது ஆண்டறிக்கை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களால் மாண்புமிகு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கா அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

முழுவடிவம்

Pages

சந்தை அறிவிப்புகள்