இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் சார்பில், இலங்கை மத்திய வங்கி புதிய ஐ.அ.டொலர் 1.5 பில்லியன் கொண்ட 10 ஆண்டிற்கான பன்னாட்டு முறிகளை (முறிகள்) 2017 மே 04ஆம் நாளன்று வெற்றிகரமாக வழங்கியிருக்கிறது. முறிகளை மூடிஸ் இன்வெஸ்ட்டர் சேர்விஸ், ஸ்டான்டட் அன்ட் புவர் மற்றும் பிட்ஜ் றேடிங் என்பன முறையே ‘B1’, ‘B+’ மற்றும் ‘B+’ இல் தரமிட்டிருக்கின்றன.
இது, இலங்கையின் பதினோராவது ஐ.அ.டொலர் அடிப்படை அளவுக் குறியீட்டினைக் குறிப்பதாகவும் 2007இற்குப் பின்னர் பன்னாட்டு முறிச் சந்தையில் முன்வைக்கப்படுமொன்றாகவும் பல ஆண்டுகளாகப் பன்னாட்டு முதலீட்டாளர் சமூகம் இலங்கைக்குத் தொடர்ச்சியாக அளித்துவரும் ஆதரவிற்கு ஒரு தெளிவான சாசனமாகவும் காணப்படுகின்றது. சிட்டிகுறூப், டியூச் பாங்க், எச்எஸ்பீசி, ஐசிபிசி இன்ரந~னல், ஜே.பி. மோர்கன் மற்றும் ஸ்டான்டட் அன்ட்ட வங்கி என்பன இவ்வெற்றிகரமாக கொடுக்கல்வாங்கலின் கூட்டு முதன்மை முகாமையாளர்களாகவும் பதிவு ஏற்பாட்டாளர்களாகவும் விளங்கினர்.