இலங்கை மத்திய வங்கி, 2017இன் பிற்பகுதியில் ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டினால் எதிர்நோக்கப்பட்ட கடுமையான திரவத்தன்மைத் தடைகள் உட்பட, 2011 இலிருந்து கம்பனியில் இடம்பெற்ற பல்வேறுபட்ட ஒழுங்கீனங்களையும் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகளையும் மேற்கொண்டது.
ஈரிஐ பினான்ஸ்சின் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய திரவத்தன்மை நிலைமையினையும் வைப்பாளர்களுக்கான மீள்கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியாத நிலைமையினையும் பரிசீலனையில் கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கம்பனியின் தொழிற்பாடுகளை மட்டுப்படுத்தும் விதத்தில் 2018.01.02ஆம் திகதியன்று பணிப்புரைகளை விடுத்தது. மேலும், கம்பனியினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவின்படி, விற்பனைப் பெறுகைகளைப் பயன்படுத்தி வைப்பாளர்களுக்கு மீள்கொடுப்பனவுகளை மேற்கொள்ளச் செய்யும் நோக்குடன், நாணயச் சபை ஈரிஐ பினான்ஸ்சின் அடையாளம் காணப்பட்ட துணை நிறுவனங்கள், துணை – துணை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டுச் சொத்துக்களை ஐ.அ.டொலர் 75 மில்லியன் கொண்ட தொகைக்கு விற்பனை செய்வதற்கான சம்மதத்தினை 2018.02.21 அன்று வழங்கியது.
















