Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

லங்கா சி நியூஸில் வெளியிடப்பட்ட செய்திக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநரிடமிருந்தான பதிலிறுத்தல்

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் தொடர்பான கொடுக்கல்வாங்கல்கள் பற்றி மாண்புமிகு விமல் வீரவன்ச பா.உ அவர்களினால் எனக்கு முகவரியிடப்பட்ட கடிதமென குறிப்பிடப்பட்டு லங்கா சி நியூஸ் வெப்தளத்தில் வெளியிடப்பட்ட 2019.02.17ஆம் திகதியிடப்பட்ட கட்டுரை பற்றி எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. அத்தகைய கடிதமொன்றினை நான் இன்னமும் பெறாதபோதும் குறிப்பிட்ட வெப்தளம் தொடர்பில் பின்வரும் விடயங்களை பற்றி தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்(கொ.மு.சு) – 2019 சனவரி

தயாரிப்பு நடவடிக்கைகள் 2018 திசெம்பர் உடன் ஒப்பிடுகையில் சனவரி மாதத்தில் ஒரு உயர்வான வீதத்தில் அதிகரித்தது. இது, தொழில்;நிலை மற்றும் உற்பத்தியில் ஏற்பட்ட விரிவாக்கத்தினால் விசேடமாக புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அத்துடன் சார்ந்த நடவடிக்கைகளினால் பிரதானமாக உந்தப்பட்டது. வெற்றிடங்களை நிரப்புவதற்கு சேர்க்கப்பட்ட புதிய தொழிலாளர்களின் தொழில்நிலையில் ஒரு குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் உணரப்பட்டது. அதன்படி, முன்னைய மாதத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கட்டளைகள் மற்றும் அதிகரித்த தொழில்;நிலையுடன் உற்பத்தியும் அதிகரித்திருந்தது

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் துணை நிறுவனங்கள், துணை-துணை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டுச் சொத்துக்களின் விற்பனை

மேற்குறித்த விடயம் தொடர்பில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் 2019.02.13 அன்று வெளியிடப்பட்ட கட்டுரையுடன் தொடர்புடையது. 

மேற்குறித்த கட்டுரையின் உள்ளடக்கங்களில் பல பிழையான மற்றும் தவறாக வழிநடாத்துகின்ற தகவல்கள் காணப்பட்டன என்பதனை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளதுடன் இலங்கை மத்திய வங்கியின் அவதானிப்புக்களை பின்வருமாறு குறிப்பிட விரும்புகின்றது.

த பினான்ஸ் கம்பனி பிஎல்சி மீது இலங்கை மத்திய வங்கியினால் எடுக்கப்படும் ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கை

2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமமளிக்கப்பட்ட நிதிக் கம்பனியொன்றான த பினான்ஸ் கம்பனி பிஎல்சி 2008 ஆண்டின் குழுமத்தினுள்ளான பல எண்ணிக்கையான நிதியியல் நிறுவனங்களின் தோல்வியினால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அப்போதிருந்து கம்பனியின் நிதியியல் நிலைமை படிப்படியாக சீர்குலைந்து உடனடியாகத் தீர்க்கப்படவேண்டிய தேவையாகவுள்ள மோசமான திரவத்தன்மைப் பிரச்சனைகளுடன் தற்போது காணப்படுகின்றது. வாய்ப்புமிக்க முதலீட்டாளர்களை இனங்காண்பதற்கும் கம்பனியினை மீள்கட்டமைப்பதற்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அத்தகைய முயற்சிகள் இன்னும் பலனளிக்கவில்லை. எனவே, தற்போதைய நிலைமையினைத் தொடர்வது கம்பனியின் வைப்பாளர்களினதும் ஏனைய ஆர்வலர்களினதும் நலன்களுக்கு மேலும் கெடுதல் ஏற்படுத்துவதாகவிருக்கும். 

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் துணை நிறுவனங்கள், துணை-துணை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டுச் சொத்துக்களின் விற்பனை

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் துணை நிறுவனங்கள், துணை-துணை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டுச் சொத்துக்களின் விற்பனை 

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் அதன் துணை நிறுவனங்கள் துணை-துணை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டுச்  சொத்துக்களை விற்பனை செய்தமை பற்றியும் அது தொடர்பில் மத்திய வங்கியின் ஈடுபாடு பற்றியும் பரப்பப்படும் சில தவறான தகவல்களைப் பற்றியும் இலங்கை மத்திய வங்கியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

குறிப்பிட்ட கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி பின்வருவன பற்றித் தெளிவுபடுத்த விரும்புகின்றது. 

கொடுப்பனவு அட்டை கொடுக்கல்வாங்கல்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல்

தன்னியக்கக்கூற்றுப் பொறி வலையமைப்பினூடாக பணத்தினை எடுப்பனவு செய்தல் மற்றும் உலகளாவிய வணிகர்களுக்கிடையில் பரிமாற்றல்களைச் செய்தல் போன்ற வசதிகளை கொடுப்பனவு அட்டைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. எவ்வாறாயினும், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து நிதியினை களவாடல் செய்யும்பொருட்டு தன்னியக்கக்கூற்றுப் பொறிகள் மற்றும் கொடுப்பனவு அட்டைகளை வாசிக்கும் பொறிகள் என்பன குற்றங்கள் இழைப்போரினால் தவறாக உபயோகிக்கக்கூடிய சாத்தியப்பாடு காணப்படுகின்றது. அவ்வாறான சந்தர்ப்பங்களைக் குறைத்துக்கொள்வதற்காக இலத்திரனியல் சிப்பினை (ஈஎம்வி) உள்ளடக்கியதும் இலத்திரனியல் பரிமாற்றல்களுக்கான குறுஞ்செய்தித் தகவல் வழங்குவதுமான அதிக பாதுகாப்புடைய கொடுப்பனவு அட்டைகளை வழங்குதல் போன்ற பன்னாட்டுக் கொடுப்பனவு அட்டை பாதுகாப்பு நியமங்கள் மற்றும் மிகச்சிறந்த நடைமுறைகளை இலங்கையின் தன்னியக்கக்கூற்றுப் பொறிகள் மற்றும் கொடுப்பனவு அட்டை வலையமைப்பு உள்ளடக்கியுள்ளது.

Pages

சந்தை அறிவிப்புகள்