மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2019 மே 30இல் நடைபெற்ற அதனது கூட்டத்தில் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வீதம் என்பனவற்றை 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 7.50 சதவீதம் மற்றும் 8.50 சதவீதமாகக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. பொருளாதாரமானது அதனது சாத்திய மட்டத்தினை அடைவதனை இயலுமைப்படுத்தும் விதத்தில் நடுத்தர கால பணவீக்கத்தினை நடு ஒற்றை மட்டங்களில் நிலைப்படுத்தும் பரந்த இலக்குடன் உள்நாட்டுப் பொருளாதாரம், நிதியியல் சந்தை மற்றும் உலகளாவிய பொருளாதாரம் போன்றவற்றின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளின் ஒரு கவனமான பகுப்பாய்வுகளின் அடிப்படையில் சபையானது இந்தத் தீர்மானத்திற்கு வந்தது.
















