Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு – 2017 ஓகத்து

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் ஒகத்து மாதத்தில் 54.4 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 யூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 0.1 சுட்டெண் புள்ளிகளாலான  ஒரு சிறிதளவான அதிகரிப்பாகும். இவ் அதிகரிப்பானது, மாதகாலப்பகுதியில் உற்பத்தி நடவடிக்கைகளில் ஏற்பட்ட மெதுவான செயற்பாட்டாலும் மற்றும் எதிர்காலத்தில் வழங்கப்படுவதற்காக ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்ட புதிய கட்டளைகளை பூர்த்தி செய்வதற்கான பராமரிக்கப்படுகின்ற மேலதிக இருப்புகளின் காரணமாக கொள்வனவு இருப்பு துணை சுட்டெண்ணில் ஏற்பட்ட அதிகரிப்பினால்  உந்தப்பட்டது. நிரம்பலர் வழங்கல் நேரம் பிரதானமாக சில நிறுவனம் சார்ந்த விசேடமான தடைகளினால் நீட்சியடைந்தது.  அதிகளவான தொழிலாளர் சுழற்சிவீதத்தினை கணக்கில் கொள்ளும் போது திறனற்ற தொழிலாளர்களின் மாற்றீடுகளில் காணப்பட்ட சிக்கல் தன்மையின் காரணமாக, பிரதானமாக ஆடை சார் துறையில் தொழில்நிலை சுட்டெண் குறைவடைந்து காணப்பட்டது.

“இலங்கை சமூக பொருளாதார தரவுகள் - 2017” இன் வெளியீடு

இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடான தரவு ஏடு “இலங்கை சமூக பொருளாதாரத் தரவு – 2017” ஆனது பொதுமக்களின் தகவல்களுக்காக இப்போது கிடைக்கக்கூடியதாகவுள்ளது. தற்போதைய தரவு ஏடானது தொடரின் 40ஆவது வெளியீடாகும்.

புதிய உதவி ஆளுநர்களின் நியமனம்

நாணயச் சபை, 2017 ஓகத்து 31ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் திருமதி. கே. எம். ஏ. என். டவுளுகல, திருமதி எஸ். குணரத்ன, திரு. என். டபிள்யு. ஜி. ஆர். பி. நாணயக்கார, திருமதி ரி. எம். ஜெ. வை. பி. பெர்னாண்டோ, திரு. ஜெ. பி. ஆர். கருணாரத்ன மற்றும் திருமதி கே. குணதிலக ஆகிய ஆறு உயர் அலுவலர் வகுப்புத் தரம் ஐஏ அலுவலர்களை 2017 ஓகத்து 31ஆம் திகதியிலிருந்து உதவி ஆளுநர்களாகப் பதவியுயர்த்தியுள்ளது.  இப்பதவி உயர்வுகள் வங்கியினுடைய சுமூகமான தொழிற்பாட்டினை உறுதி செய்யும் வகையில் பதவி உயர்வுகளாலும் ஓய்வுபெறுகையினாலும் 2016 மேயிலிருந்து 2017 ஓகத்து வரை ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

திருமதி. கே. எம். ஏ. என் டவுளுகல

நாணயச் சபையின் துணைச் செயலாளரான இவர், நிதித் திணைக்களம் மற்றும் அலுவலகப் பணிகள் முகாமைத்துவத் திணைக்களம் என்பவற்றிற்குப் பொறுப்பான உதவி ஆளுநராகவும் அத்துடன் நாணயச் சபையின் துணை செயலாளராகவும் தொடர்ந்து செயற்படுவார்.

“இலங்கை பொருளாதார, சமூக புள்ளிவிபரங்கள் - 2017” வெளியீடு

இலங்கை மத்திய வங்கி, ஷஷஇலங்கை பொருளாதார சமூக புள்ளிவிபரங்கள் - 2017 என்ற இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடு தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது.

இவ்வெளியீடானது, தேசிய கணக்குகள், வேளாண்மை, கைத்தொழில், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் நிதி, அரச நிதி, வங்கித்தொழில் மற்றும் நிதியியல் நிறுவனங்கள், பணம் மற்றும் மூலதனச் சந்தைகள், விலைகள் மற்றும் கூலிகள், குடித்தொகை மற்றும் தொழிற்படை, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், தொலைத் தொடர்பூட்டல் பணிகள், காலநிலை ஆகிய துறைகளிலுள்ள இலங்கையின் பொருளாதார, சமூக குறிகாட்டிகளையும் மற்றைய நாடுகளிலுள்ள பொருளாதார, சமூக குறிகாட்டிகள் மீதான தெரிந்தெடுக்கப்பட்ட தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - யூன் 2017

2017 யூனில் குறிப்பிடத்தக்களவு மேம்பட்ட வர்த்தக மீதி மற்றும் அரச பிணையங்கள் சந்தைக்கான தொடர்ச்சியான உட்பாய்ச்சல் என்பவற்றின் மூலம் இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது புத்துயிர் பெற்ற அடையாளத்தினைக் காட்டியது. 2017 யூனில் கைத்தொழில் மற்றும் வேளாண்மை ஏற்றுமதிகளின் கணிசமானதொரு வளர்ச்சி மற்றும் நுகர்வு மற்றும் இடைநிலைப்பொருட்களின் இறக்குமதிகளிலானதொரு வீழ்ச்சி ஆகியன வர்த்தக மீதியில் குறிப்பிடத்தக்களவு மேம்பாட்டினைத் தோற்றுவித்தது. நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சல்களானது அரச பிணையங்கள் சந்தைக்கான உறுதிமிக்க உட்பாய்ச்சல்களாகக் கருதப்பட்ட வேளையில், இம்மாத காலப்பகுதியில் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் வெளிநாட்டு முதலீடுகளும் சாதகமாக மாறாதிருந்தது. தொழிலாளர் பணவனுப்பல்களின் வீழ்ச்சியின் மூலம், நடைமுறைக் கணக்கிற்கான ஏனைய முக்கிய பெறுவனவுகள் மாறாது மிதமடைந்த வேளையில் சுற்றுலா வருவாய்களும் மிதமானதொரு வளர்ச்சியை பதிவுசெய்தது.

புதிய துணை ஆளுநரின் நியமனம்

நாணயச் சபை, மாண்புமிகு நிதியமைச்சரின் இணக்கத்துடன் உதவி ஆளுநர்     திரு சி ஜே பி சிறிவர்த்தன அவர்களை 2017 ஓகத்து 19ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநராக பதவி உயர்த்தியிருக்கிறது. 

திரு. சி ஜே பி சிறிவர்த்தன

திரு. சி ஜே பி சிறிவர்த்தன இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு, நிதியியல் முறைமை உறுதிப்பாடு மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படுகின்ற முகவர் தொழிற்பாடுகள் ஆகிய துறைகளில் 31 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்தினைக் கொண்டிருக்கிறார். துணை ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், உதவி ஆளுநராக பதவியிலிருந்த திரு சிறிவர்த்தன அவர்கள் பொதுப்படுகடன், தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் இணங்குவிப்பு, பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்பு, மனித வளங்கள், கொள்கை மீளாய்வு மற்றும் கண்காணிப்பு, கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு மற்றும் இடர்நேர்வு முகாமைத்துவம் போன்ற திணைக்களங்களுக்குப் பொறுப்பாக இருந்தார்.

Pages

சந்தை அறிவிப்புகள்