மேலும்
Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை மாற்றமின்றிப் பேணுகின்றது

நாணயக் கொள்கைச் சபையானது நேற்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், ஓரிரவு கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகள் ஆகிய இரண்டினையும் கவனமாகப் பரிசீலனையிற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு பணவீக்கத்தை 5 சதவீதம் கொண்ட இலக்கை நோக்கி வழிநடாத்துவதில் உதவுமென சபை கருதுகின்றது.  

இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2025 ஓகத்து

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 ஓகத்தில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றன.

தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2025 ஓகத்தில் 55.2 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்தது. முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் மெதுவான வீதமாயினும் தயாரிப்பு நடவடிக்கைகளில் இது விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றது. அனைத்து துணைச் சுட்டெண்களும் மாதகாலப்பகுதியில் நடுநிலையான அடிப்படையான அளவிற்கு மேல்  காணப்பட்டன.

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டுநிறைவை நினைவுகூரும் வகையில் ரூ. 2000 சுற்றோட்டத்திற்கு விடப்படும் ஞாபகார்த்த நாணயத்தாள் பற்றிய பொதுமக்கள் விழிப்புணர்வு

இலங்கை மத்திய வங்கி அதன்  75ஆவது ஆண்டுநிறைவை முன்னிட்டு 2025 ஓகத்து 29 அன்று ரூ. 2000 சுற்றோட்டத்திற்கு விடப்படும் ஞாபகார்த்த நாணயத்தாளை வெளியிட்டுள்ளது.

புதிய நாணயத்தாளை தங்குதடையின்றி ஏற்றுக்கொள்வதையும் விநியோகிப்பதையும் வசதிப்படுத்தும் பொருட்டு,  உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் அவற்றின் பணம் கையாளும் இயந்திரங்களை அளவமைக்கும் செயன்முறையை முன்னெடுக்கின்றன. இச்செயன்முறையின் முன்னேற்றத்துக்கு ஏற்ப, புதிய நாணயத்தாள் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் ஊடாக படிப்படியாக சுற்றோட்டத்திற்கு விடப்படும். 

இலங்கை மத்திய வங்கி அதன் முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டில் முக்கியமாக கண்டறியப்பட்டவைகளை வெளியிடுகின்றது

2025ஆம் ஆண்டின் இரண்டாமரைப்பகுதியில் நடாத்தப்பட்ட முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டில் முக்கியமாக கண்டறியப்பட்டவைகளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. 

இவ்வெளியீடானது நிதியியல் சந்தைப் பங்கேற்பாளர்களின் நிதியியல் முறைமை மீதான ஒட்டுமொத்த நம்பிக்கை, கருதப்படும் இடர்நேர்வுகளுக்கான மூலாதாரங்கள் மற்றும் அவ் இடர்நேர்வுகளுக்கான சாத்தியக்கூறுகள் என்பவற்றை தொகுத்துக்கூறுகின்றது. இவ்வெளியீட்டின் முடிவுகள் பதில் அளித்தவர்களின் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதுடன் அவை இலங்கை மத்திய வங்கியின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதில்லை.  

“நிதியியல் அறிவு மாதம் 2025” செத்தெம்பர் 10 தொடக்கம் மத்திய வங்கி தொடங்கி வைக்கின்றது

மத்திய வங்கியானது 2025 செத்தெம்பர் 10 தொடக்கம் நிதியியல் அறிவு மாதத்தை அங்குரார்ப்பணம் செய்து, நிதியியல் வசதிக்குட்படுத்தலை நோக்கி தேசத்தின் முன்னேற்றகரமான பயணத்தில் இன்றியமையாத மைற்கல்லை அடையாளப்படுத்துகின்றது. இம்முன்னெடுப்பு நிதியியல் அறிவு வழிகாட்டல் கட்டமைப்பின் கீழ் கொண்டுநடாத்தப்பட்டு, ‘நிதியியல் ரீதியாக அறிவுமிக்கதோர் இலங்கை’ இனை உருவாக்கும் மத்திய வங்கியின் பரந்தளவிலான தொலைநோக்குடன் அணிசேர்கின்றது. 

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2025 ஓகத்தில் நேர்க்கணியத்திற்கு திரும்பலடைந்து, பணச்சுருக்கத்தின் இறுதிக் கட்டத்தைக் குறிக்கின்றது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்துடன் அளவிடப்பட்டவாறு முதன்மைப் பணவீக்கமானது தொடர்ச்சியாக 11 மாத பணச்சுருக்கத்தின் பின்னர் 2025 ஓகத்தில் நேர்க்கணியப் புலத்திற்கு திரும்பலடைந்து, 2025 யூலையின் 0.3 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 1.2 சதவீதத்தைப் பதிவுசெய்தது.

Pages

சந்தை அறிவிப்புகள்