Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கி, கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதத்தில் சுற்றோட்ட நியமத்திலான ஞாபகார்த்த நாணயக்குற்றியினை வெளியிடுகிறது

நாட்டின் முதலாவது மருத்துவபீடம் என்ற ரீதியில் நாட்டிற்கு அது வழங்கிய பங்களிப்பினை அங்கீகரிக்கின்ற விதத்தில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதத்தில் ரூ.20 முகப்புப் பெறுமதியுடன்கூடிய சுற்றோட்ட நியமத்திலான ஞாபகார்த்த நாணயக்குற்றியொன்றினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இந்நாணயக்குற்றியானது கொழும்பு பல்கலைக்கழக்கத்தின் மருத்துவபீடத்தின் கோரிக்கைக்கிணங்க வெளியிடப்பட்டது.

இலங்கை மத்திய வங்கி இலங்கையில் குடிசன, வீட்டு வசதிகள் தொகைமதிப்பீட்டின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதத்தில் சுற்றோட்ட நியமத்திலான ஞாபகார்த்த நாணயக்குற்றியினை வெளியிடுகிறது

இலங்கையில் குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பீட்டின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதத்தில் ரூ.20 முகப்புப் பெறுமதியுடன்கூடிய சுற்றோட்ட நியமத்திலான ஞாபகார்த்த நாணயக்குற்றியொன்றினை நாட்டின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களித்த நிகழ்வினை அங்கீகரிக்கின்ற விதத்தில் இலங்கை மத்திய வங்கி வெளியிடுகிறது. இந்நாணயக்குற்றியானது இலங்கை தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் கோரிக்கைக்கிணங்க வெளியிடப்படுகிறது. 

இலங்கையில் முதலாவது குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 1871இல் நடத்தப்பட்டதுடன் 2021ஆம் ஆண்டு 150ஆவது ஆண்டு நிறைவினைக் குறிக்கிறது. 15 ஆவது குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பீட்டினை 2021இல் அதன் ஆண்டு நிறைவுடன் சேர்த்து நடத்துவதற்கு ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமாக 15 ஆவது குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பீடு 2022 - 2023 வரை பிற்போடப்பட்டிருக்கிறது.

வெளிநாட்டு வேலையாட்களின் பணவனுப்பல்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான உத்தேச மேலதிக ஊக்குவிப்புத் திட்டம் இரத்துச் செய்யப்படும்

செலாவணி வீதத்தில் நெகிழ்ச்சித்தன்மையினை அனுமதிப்பது என்ற இலங்கை மத்திய வங்கியினது தீர்மானத்தின் விளைவாக, செலாவணி வீதமானது, வெளிநாட்டு வேலையாட்களின் பணவனுப்பல்களையும் ஏற்றுமதி வருவாய்களை மாற்றுவதனையும் தூண்டும் நோக்குடன் வழங்கப்பட்ட ஊக்குவிப்பு மட்டத்தினை விஞ்சுகின்றதொரு மட்டத்தினை தற்போது அடைந்துள்ளமையினைக் காணமுடிகிறது.

Condominium Market Survey - Fourth Quarter 2021

The Condominium Property Volume Index has increased significantly during Q4, 2021 with a notable increase of 49.0 per cent compared to Q4, 2020 and with a growth of 48.4 per cent compared to Q3, 2021. In the backdrop of inflationary pressures and the relatively low levels of return earned on traditional investment avenues, investors are moving toward non-traditional investment avenues, among which investment on apartments is becoming increasingly popular. Further, an observable shift is seen in the price categories of transactions. While 77 per cent of transactions were priced below Rs.25 million a year ago, it has reduced to 49 per cent in Q4, 2021. Moreover, the Single Condominium projects in the Colombo district remain to be the most preferred category in Q4, 2021.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2022 பெப்புருவரி

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2022 பெப்புருவரியிலும் விரிவடைந்தன.

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2022 பெப்புருவரியில் 52.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து தொடர்ந்தும் விரிவடைந்தது. புதிய கட்டளைகளில் தொடர்ச்சியான விரிவடைதல் இம்மேம்பாட்டிற்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனினும், உற்பத்தி, கொள்வனவுகளின் இருப்பு, தொழில்நிலை என்பன வீழ்ச்சியடைந்த அதேவேளை வழங்குநர் விநியோக நேரம் மாதத்திற்கு மாதம் அடிப்படையில் நீட்சியடைந்தது.   

பணிகள் கொ.மு.சுட்டெண்ணானது, 2022 பெப்புருவரியில் 51.8 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து பணிகள் துறை முழுவதும் சிறிதளவான வளர்ச்சியொன்றினை எடுத்துக்காட்டியது. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள், நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் ஆகிய துணைச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் இச்சிறியளவான அதிகரிப்புக்கு துணையளித்திருந்தன.

பாரியளவிலான பேரண்டபொருளாதார உறுதிப்பாட்டுக்கு ஆதரவளிப்பதற்கான கொள்கைசார்ந்த திட்டம் : செலாவணி வீதத்தில் நெகிழ்ச்சித்தன்மையை அனுமதித்தல்

வெளிவாரி அதிர்ச்சிகளின் தீவிரத்தன்மையையும் உள்நாட்டுப் பக்கத்தில் அண்மைக்கால  அபிவிருத்திகளினையும் பரிசீலனையிற்கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு அனைத்தையுமுள்ளடக்கிய கொள்கைசார்ந்த திட்டமொன்றினை 2022 மார்ச்சு 04 இல் அறிவித்திருந்தது. தோற்றம்பெற்றுவரும் பேரண்டப்பொருளாதார மற்றும் நிதியியல் சந்தை அபிவிருத்திகளை உலகளாவிய மற்றும் உள்நாட்டு ரீதியில் உன்னிப்பாக கண்காணிக்கும் என்பதுடன் பணவீக்கம், வெளிநாட்டுத் துறை மற்றும் நிதியியல் துறை மற்றும் உண்மைப் பொருளாதார நடவடிக்கையில் உறுதிப்பாட்டினை அடையும் இலக்குடன் பொருத்தமானவாறு மேலதிக வழிமுறைகளை மேற்கொள்வதற்குத் தயாராக இருக்குமெனவும் இலங்கை மத்திய வங்கியானது குறிப்பிட்டிருந்தது.

Pages

சந்தை அறிவிப்புகள்