கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 சனவரியில் 52.9 சதவீதமாக மேலும் அதிகரித்தது. நிலவுகின்ற வியாபார நிலைமைகள் குறிப்பாக, உறுதியான விலை மட்டங்கள் மற்றும் சாதகமான வானிலை முன்னெடுக்கப்படும் கட்டடவாக்கக் கருத்திட்டங்களின் நிறைவடைதலை துரிதப்படுத்தியிருந்தன என அநேகமான அளவீட்டு பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். புதிய கருத்திட்டங்களை நிலையாக முன்னெடுப்பது தொடர்ச்சியான முன்னேற்றத்தைப் பேணுவதற்கு நிறுவனங்களுக்கு அத்தியாவசியமானது என்பது மேலும் எடுத்துக்காட்டப்பட்டது.
















