Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

உலகளாவிய நாட்டுக்கான படுகடன் வட்டமேசைக் கலந்துரையாடலில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் திறைசேரிக்கான செயலாளரும் பங்கேற்றனர்

பன்னாட்டு நாணய நிதியத்தினதும் உலக வங்கியினதும் இளவேனிற் காலக் கூட்டங்களின் பக்க நிகழ்வாக 2025 ஏப்பிறல் 23 அன்று வோசிங்டன் டி.சி யில் இடம்பெற்ற உலகளாவிய நாட்டுக்கான படுகடன் வட்டமேசைக் கலந்துரையாடலில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரிக்கான செயலாளர் திரு கே. எம். எம் சிறிவர்த்தன ஆகியோர் பங்கேற்றனர்.

இலங்கையுடனான விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழான நான்காவது மீளாய்வு குறித்த அலுவலர் மட்ட உடன்படிக்கையினை பன்னாட்டு நாணய நிதியம் எட்டுகின்றது

பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியினால் ஆதரவளிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காவது மீளாய்வினை நிறைவுசெய்வதற்கான பொருளாதாரக் கொள்கைகள் குறித்த அலுவலர் மட்ட உடன்படிக்கையினை பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களும் இலங்கை அதிகாரிகளும் எட்டியுள்ளனர். மீளாய்வானது பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையினால் ஒப்புதலளிக்கப்பட்டவுடன் நிதியிடலில் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 344 மில்லியன் தொகைக்கான அணுகலினை இலங்கை கொண்டிருக்கும்.

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டுக்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 மாச்சில் குறிப்பிடத்தக்க விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன

தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2025 மாச்சில் 63.9 பெறுமதியினை அடைந்து, நான்கு ஆண்டுகளில் அதன் அதி கூடிய பெறுமதியினைப் பதிவுசெய்தது. தயாரிப்பு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்களவு மேம்பாட்டினைப் பிரதிபலித்து மாதத்திற்கு மாத விரிவடைதலைப் பதிவிட்ட அனைத்துத் துணைச் சுட்டெண்களும் வலுவான பருவகாலக் கேள்வியினால் தூண்டப்பட்டிருந்தன.

பன்னாட்டு நாணய நிதியத்தின் அலுவலர் குழு இலங்கைக்கான விஜயத்தினை நிறைவுசெய்கின்றது

பன்னாட்டு நாணய நிதியத்தின் அலுவலர் குழுவானது பொருளாதாரச் செயலாற்றம் மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் கீழான நான்காவது மீளாய்விற்குத் துணைபுரிகின்ற கொள்கைகள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் மிகவும் பயனுள்ள கலந்துரையாடல்களை மேற்கொண்டது.

உலகளாவிய நிச்சயமற்றதன்மையானது தொடர்ந்தும் உயர்வடைந்து காணப்படுவதுடன் நிதியியல் சந்தைத் தளம்பலிற்குப் பங்களிக்கின்றது. அரசாங்கமானது நிகழ்ச்சித்திட்டத்தின் குறிக்கோள்கள் குறித்து தொடர்ந்தும் அர்ப்பணிப்புடனுள்ளதுடன் நடைமுறைப்படுத்தலானது வலுவானதாகவும் பாராட்டத்தக்கதாகவும் காணப்படுகின்ற போதிலும், வெளிநாட்டு அதிர்வின் இலங்கைக்கான தாக்கங்களை மதிப்பிடுவதற்கு அதிகளவிலான காலம் தேவைப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கியால் நடாத்தப்பட்ட முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டில் கண்டறியப்பட்டவைகள்

2025ஆம் ஆண்டின் முதலரைப்பகுதியில் நடாத்தப்பட்ட முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டில் முக்கியமாக கண்டறியப்பட்டவைகளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது

முறைமைசார் இடர்நேர்வு அளவீடானது இலங்கையின் நிதியியல் முறைமையின் உறுதித்தன்மை மீதான சந்தைப் பங்கேற்பாளர்களின் நம்பிக்கையையும் அதில் ஏற்படக்கூடிய இடர்நேர்வுகள் பற்றிய அவர்களின் கருத்துக்களையும் அளவிட்டுக் கொள்வதுடன் அதன் தடங்களைக் கண்காணிக்கிறது. அளவீட்டின் மாதிரிக் கட்டமைப்பானது உரிமம் பெற்ற வங்கிகள், உரிமம் பெற்ற நிதிக்கம்பனிகள், ஒரு சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனி, காப்புறுதி கம்பனிகள், கூறு நம்பிக்கை முகாமைத்துவக் கம்பனிகள், எல்லைக் கடன்வசதி அளிப்பவர்கள் மற்றும் ஒப்புறுதி அளிப்பவர்கள், பங்குத் தரகு கம்பனிகள், உரிமம்பெற்ற நுண்பாக நிதிக்கம்பனிகள் மற்றும் தரமிடல் முகவராண்மைகள் என்பனவற்றை உள்ளடக்குகின்றது.

இலங்கை மத்திய வங்கி 2024ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வினை வெளியிடுகின்றது

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 80இன் கீழான வெளியீடான 2024ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வினை சனாதிபதியும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான மாண்புமிகு அநுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் பி நந்தலால் வீரசிங்க அவர்களினால் இன்று (2025 ஏப்பிறல் 7) கையளிக்கப்பட்டது.

Pages

சந்தை அறிவிப்புகள்