இலங்கை மத்திய வங்கி நிதி அமைச்சு மற்றும் பன்னாட்டு நாணய நிதியம் என்பவற்றுடன் இணைந்து ‘இலங்கையின் மீட்சிக்கான பாதை: படுகடன் மற்றும் ஆளுகை’ குறித்து 2025 யூன் 16 அன்று கொழும்பு சங்ரி லா ஹோட்டலில் நடைபெற்ற உயர் மட்டத்திலான மாநாட்டிற்கு இணை அனுசரணை வழங்கியது. பன்னாட்டு நாணய நிதியத்தினால் ஆதரவளிக்கப்பட்ட மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான இலங்கையின் மீட்சி குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கும் பொருட்டு முக்கிய கொள்கை வகுப்பாளர்கள், உலகளாவிய ஆர்வலர்கள், தனியார் துறை மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரினை நிகழ்வு ஒன்றிணைத்தது.