Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கையின் மீட்சிக்கான பாதை: படுகடன் மற்றும் ஆளுகை குறித்த மாநாட்டிற்கு இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு மற்றும் பன்னாட்டு நாணய நிதியம் என்பன இணை அனுசரணை வழங்குகின்றன

இலங்கை மத்திய வங்கி நிதி அமைச்சு மற்றும் பன்னாட்டு நாணய நிதியம் என்பவற்றுடன் இணைந்து ‘இலங்கையின் மீட்சிக்கான பாதை: படுகடன் மற்றும் ஆளுகை’ குறித்து 2025 யூன் 16 அன்று கொழும்பு சங்ரி லா ஹோட்டலில் நடைபெற்ற உயர் மட்டத்திலான மாநாட்டிற்கு இணை அனுசரணை வழங்கியது. பன்னாட்டு நாணய நிதியத்தினால் ஆதரவளிக்கப்பட்ட மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான இலங்கையின் மீட்சி குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கும் பொருட்டு முக்கிய கொள்கை வகுப்பாளர்கள், உலகளாவிய ஆர்வலர்கள், தனியார் துறை மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரினை நிகழ்வு ஒன்றிணைத்தது.

இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2025 மே

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 மேயில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகளில் மேம்பாடுகளை எடுத்துக்காட்டுகின்றன

பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு உதவுவதற்கான நிவாரண வழிமுறைகள்

கடந்தகாலத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட வியாபாரங்களின் நிலைபெறத்தக்க புத்துயிரளித்தலை வசதிப்படுத்தும் நோக்குடன், 2025.03.31 அன்று வரை தொடர்புடைய வங்கிகளுடனான வியாபார புத்துயிரளித்தலுக்கான கலந்துரையாடல்களை தொடங்கியுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் கடன்பாட்டாளர்களுக்கு மேலதிக சலுகைகளை வழங்குமாறு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளுக்கும் (இதனகத்துப்பின்னர் உரிமம்பெற்ற வங்கிகள் எனக் குறிப்பீடு செய்யப்படும்)  இலங்கை  மத்திய வங்கி ஆலோசனை வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு உதவுவதற்கான, நிவாரண வழிமுறைகள் மீதான 2024.12.19ஆம் திகதியிடப்பட்ட 2024ஆம் ஆண்டின் 04ஆம் இலக்க சுற்றறிக்கை மற்றும் 2025.01.01ஆம் திகதியிடப்பட்ட 2025ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க பிற்சேர்க்கைச் சுற்றறிக்கை ஆகியவற்றுக்கமைவாக இந்நிவாரண வழிமுறைகள் அமைந்துள்ளன.  

பன்னாட்டு நாணய நிதியத்தின் முதல் துணை முகாமைத்துவப் பணிப்பாளர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்

பன்னாட்டு நாணய நிதியத்தின் முதல் துணை முகாமைத்துவப் பணிப்பாளர் முனைவர் கீதா கோபிநாத் 2025 யூன் 15-16 வரை இலங்கைக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

2025 மேயில் பணச்சுருக்க நிலைமைகள் தொடர்ந்தும் தளர்வடைவதை கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் சுட்டிக்காட்டுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் அண்மைய கால எறிவுகளுக்கமைய பணச்சுருக்க நிலைமைகளின் தளர்வு 2025 மேயிலும் தொடர்ந்தது. இதன்படி, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2025 ஏப்பிறலில் பதிவாகிய 2.0 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில், 2025 மேயில் 0.7 சதவீதம் கொண்ட மெதுவான வேகத்திலான பணச்சுருக்கத்தை எடுத்துக்காட்டியது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2025 ஏப்பிறல்

வெளிநாட்டுத் துறையின் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையை பிரதிபலிக்கும் வகையில், மாதாந்த நடைமுறைக் கணக்கானது 2025 சனவரியிலிருந்து மிகையாகக் காணப்பட்டது.

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2024 ஏப்பிறலுடனும் 2025 மாச்சுடனும் ஒப்பிடுகையில் 2025 ஏப்பிறலில் விரிவடைந்தது. இது, வணிகப்பொருள் ஏற்றுமதிகளில் ஏற்பட்ட வளர்ச்சியை (10.4மூஇ ஆண்டிற்காண்டு) விட, முக்கியமாக மோட்டார் வாகனங்களின் இறக்குமதிகளினால் (ஐ.அ.டொலர் 134 மில்லியன்) தூண்டப்பட்ட வணிகப்பொருள் இறக்குமதிகளில் ஏற்பட்ட உயர்ந்த வேகத்திலான (17.5மூஇ ஆண்டிற்காண்டு) வளர்ச்சியின் விளைவாகும்.  

Pages

சந்தை அறிவிப்புகள்