Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2024 திசெம்பர்

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 திசெம்பரில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன.
 
தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2024 திசெம்பரில் 57.2 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் மேலும் விரிவடைதலினை எடுத்துக்காட்டுகின்றது. தொழில்நிலை தவிர அனைத்து துணைச் சுட்டெண்களும் இம்மேம்பாட்டிற்கு சாதகமாகப் பங்களித்தன

இலங்கை மத்திய வங்கிக்கும் சீன மக்கள் வங்கிக்குமிடையில் கைச்சாதிடப்பட்ட இருதரப்பு நாணயப் பரஸ்பரப் பரிமாற்றல் உடன்படிக்கையைப் புதுப்பித்தல்

2021ஆம் ஆண்டில் கைச்சாதிடப்பட்ட இருதரப்பு நாணயப் பரஸ்பரப் பரிமாற்றல் உடன்படிக்கையை மூல உடன்படிக்கையில் குறித்துரைக்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கிணங்க, இலங்கை மத்திய வங்கியும் சீன மக்கள் வங்கியும் 2024 திசெம்பரில் மேலும் மூன்று (03) ஆண்டு காலப்பகுதிக்கு வெற்றிகரமாகப் புதுப்பித்துக்கொண்டன. சீன யுவான் 10 பில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.4 பில்லியன்) கொண்ட நாணயப் பரஸ்பரப் பரிமாற்றல் வசதியானது சீனா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையிலான நிதியியல் ஒத்துழைப்பினை எடுத்துக்காட்டுகின்றது.

இலங்கை மத்திய வங்கியின் சார்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் பி. நந்தலால் வீரசிங்க, உடன்படிக்கையை கைச்சாத்திட்ட அதேவேளை சீன மக்கள் வங்கியின் சார்பில் சீன மக்கள் வங்கியின் ஆளுநர் திரு. பென் கொங்செங் கைச்சாத்திட்டார்.

டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஊக்குவிப்புப் பிரசார நிகழ்வு 2025 இலங்கை மத்திய வங்கியினால் தொடங்கப்பட்டது

“டிஜிட்டல் கொடுக்கல்வாங்கல்கள் ஊடாக எதிர்காலத்தை வடிவமைத்தல்” என்ற தொனிப்பொருளின் கீழ் டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஊக்குவிப்புப் பிரசாரம் 2025 நிகழ்வு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க அவர்களினால் 2025 சனவரி 09 அன்று அம்பாந்தோட்டை மாக்கம் ருகுணுபுர நிருவாகக் கட்டடத்தொகுதியில் தொடங்கிவைக்கப்பட்டது. இப்பிரசாரம் அம்பாந்தோட்டை மாவட்டச் செயலாளர் திரு. பிமல் இந்திரஜித் த சில்வா, நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பூட்டல் பணி வழங்குநர்கள் ஆகியோரின் ஆதரவுடன் இலங்கை மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பாரிய எண்ணிக்கையிலான அரசாங்க அலுவலர்கள், நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

பெர்பட்சுவல் ட்ரெக்ஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்

இலங்கை மத்திய வங்கியானது, பதிவுசெய்யப்பட்ட பங்குத்தொகுதி மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின் பிரகாரம் செயற்பட்டு, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில், 2025 சனவரி 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்க்ஷெரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டுநடாத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறு மாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2024 திசெம்பரில் தொடர்ந்தும் எதிர்மறையான புலத்திலேயே காணப்பட்டது

மத்திய வங்கியின் அண்மைக்கால எறிவுகளுக்கமைவாக, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது தொடர்ச்சியாக நான்காவது மாதமாகவும் எதிர்மறையான புலத்தில் காணப்பட்டு, 2024 நவெம்பரின் 2.1 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 2024 திசெம்பரில் 1.7 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்தினைப் பதிவுசெய்தது.

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் நவெம்பர் 2024

இலங்கைப் பொருளாதாரத்தின் வெளிநாட்டுத் துறையானது சுற்றுலாத்துறை மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பவற்றிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட உயர்ந்தளவிலான உட்பாய்ச்சல்களினால் ஆதரவளிக்கப்பட்டு 2024 நவெம்பரில் மேலும் வலுவடைந்தது.

Pages