Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 2025 மாச்சில் பணச் சுருக்க நிலைமைகள் தளர்வதை சமிக்ஞைப்படுத்துகின்றது

மத்திய வங்கியின் அண்மைக்கால எறிவுகளுக்கமைய 2025 மாச்சில் பணவீக்க நிலைமைகள் தளர்வடையத் தொடங்கியுள்ளன. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது தொடர்ச்சியாக ஏழாவது மாதமாகவும் எதிர்க்கணிய புலத்தில் காணப்பட்டது, இருந்தும் 2025 பெப்புருவரியில் பதிவாகிய 4.2 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில், 2025 மாச்சில் 2.6 சதவீதம் கொண்ட மெதுவான பணச்சுருக்கமொன்றைப் பதிவுசெய்தது.  

கட்டடவாக்கத் தொழிற்துறைக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2025 பெப்புருவரியில் மேலும் அதிகரித்தது

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 பெப்புருவரியில் 55.6 சதவீதமாக மேலும் அதிகரித்தது. மாதகாலப்பகுதியில் கட்டடவாக்கப் பணியில் தொடர்ச்சியான அதிகரிப்பை அநேகமான பதிலிறுப்பாளர்கள் அறிக்கையிட்டனர், இருந்தும் வளர்ச்சியினை நிலைநிறுத்துவதற்கு மிகவும் பாரியளவிலான கருத்திட்டங்களுக்கான தேவையை வலியுறுத்தினர்.

நிதியியல் உளவறிதல் பிரிவினால் 2024 நவெம்பர் தொடக்கம் 2024 திசெம்பர் வரை நிதியியல் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட நிருவாக ரீதியான தண்டப்பணங்கள்

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் பயனைக்கொண்டு, நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிறுவனங்களின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் பாரதூரம் என்பனவற்றை பரிசீலனையிற்கொண்டு தண்டப்பணங்கள் விதித்துரைக்கப்படலாம்.

பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சிகளுக்கு உதவுவதற்கான நிவாரண வழிமுறைகள்

வரையறுக்கப்பட்ட இலங்கை வங்கிகள் சங்கம் (உத்தரவாதம்) உடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களுக்கமைய, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக, 2024.12.19ஆம் திகதியிடப்பட்ட 2024ஆம் ஆண்டின் 04ஆம் இலக்க சுற்றறிக்கை மற்றும் அதன் பிற்சேர்க்கையான 2025.01.01ஆம் திகதியிடப்பட்ட 2025ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க சுற்றறிக்கை ஆகியன அவற்றில் குறித்துரைக்கப்பட்டுள்தைப் போன்று திறன்மிக்க நிவாரண வழிமுறைகளை எல்லா உரிமம்பெற்ற வங்கிகளும் ஓர் சீர்முறையில் நடைமுறைப்படுத்துவதனை உறுதிப்படுத்தும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்டன.  

இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை மாற்றமின்றிப் பேணுகின்றது

நாணயக் கொள்கைச் சபையானது நேற்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வீதத்தினை 8.00 சதவீதத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகளைக் கவனமாகக் கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. நிலவுகின்ற நாணயக் கொள்கை நிலைமையானது, பணவீக்கம் 5 சதவீத இலக்கினை நோக்கி நகருவதனை நிச்சயப்படுத்தும் வேளையில் உள்நாட்டுப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் ஆதரவளிக்குமெனச் சபை நம்பிக்கை கொண்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பில் பொது மக்களுக்கான அறிவித்தல்

Pro Care (Pvt) Ltd., Shade of Procare (Pvt) Ltd, திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83(இ) பிரிவின் கீழ் தடைசெய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

Pages