இரண்டாவது கட்டமாக, 2016.09.15 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் அரச பிணையங்கள் இரண்டாந்தரச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்களுக்காக, புளும்பேர்க் இலத்திரனியல் முறிகள் வர்த்தகப்படுத்தல் தளத்தில் வர்த்தக வங்கிகள் இணைந்து கொண்டன. இதற்கு முன்னதாக, அனைத்து முதனிலை வணிகர்களும் வர்த்தகத் தளத்தில் 2016.08.01இல் இணைந்து கொண்டனர். ஆகவே, தற்பொழுது அனைத்து முதனிலை வணிகர்களும் வங்கிகளும் இத்தளத்தில் தமக்கிடையே வர்த்தகப்படுத்தல்களை மேற்கொண்டதுடன், ரூ.50 மில்லியனுக்கும் அதற்கு மேற்பட்டதுமான தொகையைக் கொண்ட வணிகங்களைக் கொண்ட முதலீட்டாளர்கள் தொடர்பான அனைத்து வணிகங்களும் 30 நிமிடங்களுக்குள் கருமபீடங்களிலேயே மேற்கொள்ளப்பட்டன. மத்திய வங்கி, மறுநாள், வர்த்தகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு பிணையத்தினதும் அடிப்படை விளைவுகள் மற்றும் அளவுகள் மீதான அடிப்படை வர்த்தகத் தகவல்களை அதன் வெப்தளத்தில் வெளியிடுகிறது. 2016.08.01 இலிருந்து 2016.09.15 வரையான 32 சந்தை நாட்களில் வெளியிடப்பட்ட பிணையங்களின் பெரும்பாலானவற்றின் வர்த்தகத்தில் ரூ.218.7 மில்லியன் கொண்ட 1,816 எண்ணிக்கை கொண்ட உடனடி கொடுக்கல்வாங்கல்கள் இடம்பெற்றன.















'இலங்கையில் வியாபாரத்தினை மேற்கொள்வதற்கான படிப்படியானதொரு வழிகாட்டல்" நூலின் ஆறாவது பதிப்பு இலங்கை மத்திய வங்கியினால் தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கிறது. இவ்வெளியீடானது, இலங்கையில் வியாபாரத் தொழில்முயற்சிகளைத் தொடங்குதல், தொழிற்படுத்தல் மற்றும் மூடிவிடுதல் தொடர்பில் பயன்மிக்க ஒழுங்குமுறைப்படுத்தல் தகவல்களைக் கொண்டிருக்கின்றது. தொடர்பான நிறுவனங்களினால் முன்மொழியப்பட்டவாறு, 2016இன் முதற்காலாண்டு வரை மேற்கொள்ளப்பட்ட அவசியமான திருத்தங்கள் இவ்வெளியீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 