Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

Monetary Policy Review - No. 5 of 2017

The Monetary Board, at its meeting held on 02 August 2017, was of the view that the current monetary policy stance is appropriate and decided to maintain the policy interest rates of the Central Bank of Sri Lanka at their present levels.

In arriving at the above decision, the Monetary Board took into consideration current and expected developments in the domestic and international macroeconomic environment and the need to maintain inflation at mid-single digit levels over the medium term.

The outlook for global growth appears to be firming according to the latest update of the World Economic Outlook of the International Monetary Fund (IMF) in July 2017. The Sri Lankan economy is expected to record a modest recovery in the forthcoming quarters following the low growth witnessed in the first quarter of 2017. The recovery of the agriculture related activities and the positive performance of the industry and services related activities together with the reinstatement of GSP+ facility are expected to contribute to economic growth.

பணம் தூயதாகக்ல் தொடர்பான ஆசிய/ பசுபிக் குழுமத்தின் 20 ஆவது ஆண்டுக் கூட்டம் 2017 யூலை 15 - 21 வரை இலங்கையின் கொழும்பில் நடைபெற்றது.

இலங்கை, பணம் தூயதாக்கல் மீதான ஆசிய/ பசுபிக் குழுமத்தின் 20 ஆவது ஆண்டுக் கூட்டத்தினை ஆசிய பசுபிக் குழுமத்தின் 41 உறுப்பு நாடுகளிலிருந்தான 408 பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு பன்னாட்டு அவதானிப்பாளர் நிறுவனங்களிலிருந்தான 24 அவதானிப்பாளர்கள் ஆகியோரின் பங்குபறற் லுடன் 2017 யூலை 15 - 21 வரை கொழும்பில் நடாத்தியிருந்தது. இந்த நிகழ்விற்கு அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர். 

பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடல் மற்றும் ஊழல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றவியல் குற்றங்கள் போன்றவற்றை ஒழித்தல் தொடர்பில் இலங்கையின் தேசியக் கடப்பாடுகள் பற்றி அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர ஆகியோர் வலியுறுத்தினர். உள்நாட்டு மற்றும் பன்னாட்டு ஆர்வலர்களுக்கிடையான பலமானதும் வினைத்திறனுடன் கூடியதுமான ஒத்துழைப்புக்கான இன்றியமையாத தேவைப்பாடு பற்றியும் அதிமேதகு சனாதிபதி அவர்களால் மேலும் குறித்துக்காட்டப்பட்டது. 

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - மே 2017

நாட்டிற்கான 11ஆவது பன்னாட்டு முறி வழங்கல்களிலிருந்தான வருவாய்கள் மற்றும் 2017 மேயில் கிடைக்கப்பெற்ற குழுநிலைக் கடன் வசதி போன்றவற்றின் மூலம் சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கிற்கான குறிப்பிடத்தக்க உட்பாய்ச்சல்களால் இலங்கையின் வெளிநாட்டுத் துறை வலுவடைந்தது. இவ் உட்பாய்ச்சல்கள், 2017 ஏப்பிறல் இறுதியில் ஐ.அ.டொலர் 5.0 பில்லியனாகக் காணப்பட்ட மொத்த அலுவல்சார் ஒதுக்குகளினை 2017 ஏப்பிறல் இறுதியில் ஐ.அ.டொலர் 6.8 பில்லியனானதொரு அதிகரிப்பினை தோற்றுவித்தது. இலங்கை பொருளாதாரத்தின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையானது அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை போன்றவற்றின் தொடர்ச்சியான உட்பாய்ச்சல்கள் மூலம் தொடர்ந்தும் மிதப்பாகக் காணப்பட்டது. எனினும், வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைதல் மற்றும் சுற்றுலா மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்களிலிருந்தான வருவாய்கள் மெதுவடைதல் போன்றவற்றின் மூலம் சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்கு மேமாத காலப்பகுதியில் ஒரு கலப்பு செயலாற்றத்தினைக் காட்டியது.

திறைசேரி முறிகளுக்கான புதிய முதனிலை வழங்கல் முறைமை

இலங்கை மத்திய வங்கியானது திறைசேரி முறிகளுக்கான புதிய முதனிலை வழங்கல் முறையொன்றினை அறிமுகப்படுத்தவுள்ளது. 2017 யூலை 27 இலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில், 2015 பெப்புருவரியிலிருந்து நடைமுறையில் காணப்படும் திறைசேரி முறிகளுக்கான முழுமையான ஏல அடிப்படையிலான வழங்கல் முறைமைக்கு பதிலாக இந்த புதிய முறைமை மாற்றியமைக்கப்படுகின்றது. புதிய முறைமையினை அறிமுகப்படுத்துவதற்கான பிரதான காரணமானது அரசாங்கத்தின் உள்நாட்டு கடன்பாடுகளின் போது வினைத்திறனையும் வெளிப்படைத் தன்மையினையும ;மேலும் அதிகரிப்பதாகும். 

இந்த புதிய முறைமையானது மிகவும் கடட் மைப்பானதாக காணப்படுவதுடன் ஒழுங்கான மாதாந்த திறைசேரி முறிகளின் வழங்கல்களை உள்ளடக்குகின்றது. ஒவ்வொரு மாதாந்த வழங்கலானது இரண்டு வேறுபட்ட முதிர்ச்சிகளை கொண்ட முறித் தொடர்களினை வழங்குவதுடன், தொடர்களின் முதிர்ச்சிக் காலப்பகுதியானது சந்தையில் கிடைக்கத்தக்க வளங்களுடன் ஒத்துப்போவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. 

வாடிக்கையாளர் தகவல்களை ஹற்றன் நஷனல் வங்கி கசியச் செய்தமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் அறிக்கை

இலங்கை மத்திய வங்கியினால் ஆரம்ப விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும், தற்போது கிடைக்கத்தக்கதாகவுள்ள தகவல்களின்படி, 4,630 வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட சில வங்கித்தொழில் தகவல்களுடன் தொடர்புடைய இச்சம்பவமானது கவனக் குறைவினால் ஏற்பட்டதாகவே தோன்றுகின்றது என்றும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறியத்தர விரும்புகின்றது. மேலும், இச்சம்பவத்திற்கு ஹற்றன் நஷனல் வங்கிக்குள் வாடிக்கையாளர் தகவல்களை முகாமை செய்வதிலும் பயன்படுத்துவதிலும் காணப்படும் உள்ளகக் குறைபாடுகளே காரணமென அவதானிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, இவ்விடயமானது, ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி இரண்டினாலும் மேலதிக விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. 

இதன்படி, சட்ட ஏற்பாடுகள் அத்துடன் தொடர்பான மேற்பார்வை நியமங்களின் நியதிகளில் இச்சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்காக இடைக்கால மேற்பார்வை வழிமுறைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

2017 யூனில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2017 மேயின் 7.1 சதவீதத்திலிருந்து 2017 யூனில் 6.3 சதவீதத்திற்கு குறைவடைந்தது. 2017 யூனில் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கம் அதிகரித்தமைக்கு உணவு மற்றும் உணவல்லா வகை இரண்டும் முக்கியமாகப் பங்களித்தன.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2017 யூனிலும் முன்னைய மாதத்தில் காணப்பட்ட அதே மட்டமான 6.1 சதவீதத்தில் மாறாது காணப்பட்டது. 

Pages

சந்தை அறிவிப்புகள்