அச்சு, இலத்திரனியல் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் உட்பட பல்வேறுபட்ட வழிமுறைகளினூடாக கடன் வழங்கல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற விளம்பரங்கள் மற்றும் தொடர்பூட்டல் வடிவங்கள் பற்றி இலங்கை மத்திய வங்கி அவதானித்திருக்கிறது. இது தொடர்பாக, குறிப்பிட்ட ஒழுங்கீனங்கள் தொடர்பில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. சில குற்றச்சாட்டுக்கள் கடன் வழங்குநர் தொடர்பான மோசடிகள் தொடர்பானவையாகக் காணப்படுகின்ற வேளையில், சில உயர் வட்டி வீதங்கள் தொடர்பான முறைப்பாடுகளாகவும், வாடிக்கையாளர்களுக்கான தொந்தரவு தொடர்பானவையாகவும் மற்றும் வாடிக்கையாளர் தகவல் தொடர்பான இரகசியத்தன்மைகளை தவறாகப் பயன்படுத்துகின்றமை தொடர்பாகவும் காணப்படுகின்றன. பணம் கடன் வழங்குமொருவர் என்பது, பிணையுடனோ அல்லது பிணையின்றியோ வட்டியின் பொருட்டு ஏதேனுமொரு வழியில் கடனை வழங்குமொருவராக அல்லது அவராகவே கடனினை வழங்குகின்ற விதத்தில் விளம்பரங்களை மேற்கொள்ளுகின்ற அல்லது அறிவித்தல்களை மேற்கொள்ளுகின்ற அல்லது தன்னைத்தானே அவ்வாறு நிலைநிறுத்திக் கொள்கின்ற ஒருவர் என விபரிக்க முடியும்.