Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

பிட்ஜ் ரேட்டிங்கினால் இலங்கையின் தரமிடல் தோற்றப்பாட்டிற்குச் செய்யப்பட்ட திருத்தத்திற்கான பதிலிறுப்பு

2019 திசெம்பர் 19ஆம் நாளன்று இலங்கையின் நீண்ட கால வெளிநாட்டு நாணய வழங்குநர் செலுத்தத் தவறும் வீதம் மீதான தோற்றப்பாட்டிற்கான திருத்தம் தொடர்பான பிட்ஜ் றேட்டிங்கின் அறிவித்தலைத் தொடர்ந்து நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு பதிலிறுப்பொன்றினை விடுத்திருக்கிறது. கீழே காணப்படும் இணைப்பில் இதனைக் காணமுடியும்.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு - 2019 நவெம்பா்

2019 நவெம்பரில் தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் விரிவடைந்து 56.0 சுட்டெண் பெறுமதியொன்றினை பதிவுசெய்தமைக்கு புதிய கட்டளைகள்இ உற்பத்தி மற்றும் தொழில்நிலையில் ஏற்பட்ட விரிவாக்கமே முக்கிய காரணமாக அமைந்தது. 

அனைத்து துணைச் சுட்டெண்களும் விரிவாக்கமொன்றினை எடுத்துக்காட்டிய போதும்இ 2019 ஒத்தோபருடன் ஒப்பிடுகையில் அவை மெதுவான வேகத்திலேயே காணப்பட்டன. புதிய கட்டளைகளும் உற்பத்தியும் மெதுவான வேகத்தில் விரிவடைந்தமைக்கு புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள் தயாரிப்பில் காணப்பட்ட மெதுவான தன்மை முக்கிய காரணமாக அமைந்தது. இவ்வபிவிருத்திகளுடன் இசைந்துசெல்லும் விதத்தில் தொழில்நிலையும் சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது. 

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2019 ஒத்தோபர்

இறக்குமதிகள் மீதான செலவினத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட சிறிதளவு வீழ்ச்சி என்பனவற்றின் காரணமாக 2019 ஒத்தோபரில் வர்த்தகப் பற்றாக்குறை (ஆண்டிற்கு ஆண்டு) சுருக்கமடைந்தது. இறக்குமதிகள் மீதான ஒன்றுசேர்ந்த செலவினத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சி மற்றும் ஏற்றுமதிகளிலிருந்தான ஒன்றுசேர்ந்த வருவாய்களில் ஏற்பட்ட அதிகரிப்பு என்பனவற்றின் விளைவாக 2019இன் முதல் பத்து மாத காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறை 2018இன் தொடர்பான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சுருக்கமடைந்தது. அதேவேளை, சுற்றுலாப் பயணிகளின் வருகைகளில் காணப்பட்ட வீழ்ச்சி 2019 ஒத்தோபரில் மேலும் கட்டுப்படுத்தப்பட்டது. தொழிலாளர் பணவனுப்பல்களில் ஒன்றுசேர்ந்த வீழ்ச்சி பதிவுசெய்யப்பட்ட போதும் 2019 ஒத்தோபரில் (ஆண்டிற்கு ஆண்டு) மேம்பட்டது. நிதியியல் கணக்கில், கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் வெளிநாட்டு முதலீடுகள் தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த வேளையில் அரச பிணையங்கள் சந்தை 2019 ஒத்தோபரில் சிறிதளவு தேறிய உட்பாய்ச்சலைத் தோற்றுவித்தது. ஒத்தோபர் மாத காலப்பகுதியில் செலாவணி வீதம் கலப்பு அசைவொன்றினைப் பதிவுசெய்ததுடன் இவ்வாண்டுப்பகுதியில் ஐ.அ.டொலருக்கெதிராகத் தொடர்ந்தும் உயர்வடைந்தது.

இலங்கை மத்திய வங்கி அதன் 12ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாட்டினை நடாத்தியது

இலங்கை மத்திய வங்கி அதன் மாபெரும் வருடாந்த நிகழ்வான 12ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாட்டினை ஜோன் எக்ஸ்ரர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் 2019 திசெம்பர் 09ஆம் திகதி நடத்தியது. மாநாடானது சமகால பேரண்டப் பொருளாதாரக் கொள்கை தொடர்பான கோட்பாட்டு ரீதியான மற்றும் அனுபவ ரீதியான ஆராய்ச்சியினை ஊக்குவிப்பதனையும் பல்லினத் தன்மை கொண்ட பின்புலத்திலிருந்து வருகை தருகின்ற ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்களது பார்வை, கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் அனுபவங்களைப் பல்வேறுபட்ட கோணங்களிலிருந்து ஆராய்வதற்கான தளமொன்றினை வழங்குவதனையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. 

பணம் கடன் வழங்கல் நடவடிக்கைகளின் மீதான பொதுமக்களின் விழிப்புணர்வு

அச்சு, இலத்திரனியல் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் உட்பட பல்வேறுபட்ட வழிமுறைகளினூடாக கடன் வழங்கல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற விளம்பரங்கள் மற்றும் தொடர்பூட்டல் வடிவங்கள் பற்றி இலங்கை மத்திய வங்கி அவதானித்திருக்கிறது. இது தொடர்பாக, குறிப்பிட்ட ஒழுங்கீனங்கள் தொடர்பில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. சில குற்றச்சாட்டுக்கள் கடன் வழங்குநர் தொடர்பான மோசடிகள் தொடர்பானவையாகக் காணப்படுகின்ற வேளையில், சில உயர் வட்டி வீதங்கள் தொடர்பான முறைப்பாடுகளாகவும், வாடிக்கையாளர்களுக்கான தொந்தரவு தொடர்பானவையாகவும் மற்றும் வாடிக்கையாளர் தகவல் தொடர்பான இரகசியத்தன்மைகளை தவறாகப் பயன்படுத்துகின்றமை தொடர்பாகவும் காணப்படுகின்றன. பணம் கடன் வழங்குமொருவர் என்பது, பிணையுடனோ அல்லது பிணையின்றியோ வட்டியின் பொருட்டு ஏதேனுமொரு வழியில் கடனை வழங்குமொருவராக அல்லது அவராகவே கடனினை வழங்குகின்ற விதத்தில் விளம்பரங்களை மேற்கொள்ளுகின்ற அல்லது அறிவித்தல்களை மேற்கொள்ளுகின்ற அல்லது தன்னைத்தானே அவ்வாறு நிலைநிறுத்திக் கொள்கின்ற ஒருவர் என விபரிக்க முடியும்.  

பல்வேறுபட்ட நிதியியல் சாதனங்களை வழங்குவதன் மூலம் பொதுமக்களிடமிருந்து நிதிகளைத் திரட்டுதல்

குறிப்பிட்ட தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் பல்வேறுபட்ட சாதனங்களை வழங்குவதன் மூலம் பொதுமக்களிடமிருந்து நிதிகளைத் திரட்டி வருவது பற்றி அவதானிக்கப்பட்டிருக்கிறது. வாக்குறுதிச் சான்றிதழ்கள், வர்த்தகப் பத்திரங்கள் மற்றும் தொகுதிக்கடன்கள் என்பன அவற்றுள் சிலவாகும். குறிப்பிட்ட வகையான நிறுவனங்கள் அவற்றின் நிதியியல் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் பொருட்டு மேலே குறிப்பிடப்பட்ட சாதனங்களை வழங்குவதன் மூலம் நிதிகளைத் திரட்டி வருவதனைக் குறிப்பிடுதல் வேண்டும். இச்சாதனங்கள் வருவாயை ஈட்டும் நியதிகளில் கவர்ச்சிகரமானவையாக இருக்கின்ற போதிலும், தனிப்பட்டவர்கள் அவர்களின் நோக்கங்களுக்காக அத்தகைய நிதிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய தன்மைகள் பற்றி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

Pages

சந்தை அறிவிப்புகள்