Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி - நிபந்தனையின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட நோக்கமொன்றுக்காக வியாபாரத்தினை மீள ஆரம்பித்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 31(5)(அ)ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம் கம்பனியின் எஞ்சியுள்ள வைப்புக்களின்; ஐம்பது சதவீத (50%) மீள்கொடுப்பனவு (மீள்கொடுப்பனவுத் திட்டம்) நோக்கத்திற்காக மாத்திரம் 2021 சனவரி 13ஆம் திகதியிலிருந்து தொடங்கி 2021 ஏப்பிறல் 12ஆம் திகதி வரையான மட்டுப்படுத்தப்பட்ட மூன்று (03) மாதங்களைக் கொண்ட காலப்பகுதியொன்றுக்காக பொது நலனுக்காகவும் கம்பனியின் வைப்பாளர்களின் நலன்களுக்காகவும் பல கட்டாய நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாணயச் சபையினால் நியமிக்கப்பட்ட முகாமைத்துவக் குழாத்தின் (முகாமைத்துவக் குழாம்) மேற்பார்வையின் கீழ் வரையறுக்கப்பட்ட நோக்கத்திற்காக  மற்றும் வரையறுக்கப்பட்ட காலமொன்றுக்காக வியாபாரத்தினை பெயரளவில் மீள ஆரம்பிப்பதற்கு சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியினை அனுமதிக்கின்ற கட்டளையொன்றினைப் பிறப்பித்துள்ளது.

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் - முடிவுறுத்துவதற்காக தகைமைவாய்ந்த நீதிமன்றத்திற்கு விண்ணப்பமொன்றினை மேற்கொள்ளல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 31(5)(ஆ)ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம் ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டை முடிவுறுத்துவதற்காக தகைமைவாய்ந்த நீதிமன்றமொன்றுக்கு விண்ணப்பத்தை மேற்கொள்ளுமாறு வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைப் பணிப்பாளரை பணிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

2011ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்ற பல்வேறு முறைகேடுகள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் பணிப்பாளர் சபையினதும் சிரேஸ்ட முகாமைத்துவத்தினதும் இயலாமை என்பன காரணமாக நாணயச் சபையானது 2018 சனவரி 02 அன்று கம்பனியின் பணிப்பாளர்களுக்கு பணிப்புரைகளை விடுத்து கம்பனியின் விவகாரங்களைத் மேற்பார்வை செய்வதற்கு முகாமைத்துவக் குழாமொன்றினை நியமித்தது.

முழு வடிவம்

நிதியியல் உளவறிதல் பிரிவின் மூலம் 2020 காலப்பகுதியில் நிதியியல் நிறுவனங்கள் மீது இணங்குவித்தலினை அமுல்படுத்துவதற்கான தண்டங்களை விதித்தல்

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2) ஆம் பிரிவுடன் சேர்த்து  வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டு நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்காமைக்காக நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டங்கள் விதிக்கப்படுகின்றன. தண்டமானது நிதியியல் நிறுவனத்தின் அல்லது பெயர் குறிக்கப்பட்ட நிதியல்லாத் தொழிலின் இணங்காமையின் தன்மை மற்றும் கடுமை என்பவற்றைப் பரிசீலனையில் கொண்டு குறித்துரைக்கப்படக்கூடியதாகும்.

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்

பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2021 சனவரி 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது.

இலங்கையின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலைமையினைப் பேணுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்தல்

நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலைமையினைப் பேணும் நோக்குடனும் கொவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய சாத்தியமான எதிர்மறையான தாக்கங்களைப் பரிசீலனையில் கொண்டும், இலங்கை மத்திய வங்கியினது நாணயச் சபையின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் கௌரவ நிதி அமைச்சர், 2020 யூலை 02ஆம் திகதியிடப்பட்ட 2182/37ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளையின் செல்லுபடியாகும் காலத்தினை 2021 சனவரி 02 இலிருந்து மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்து 18.12.2020ஆம் திகதியிடப்பட்ட 2206/25ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் கட்டளையொன்றினை வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய, மூலதனக் கொடுக்கல்வாங்கல்கள் மீதான வெளிமுகப் பணவனுப்பல்கள் மீதான பின்வரும் கட்டுப்பாடுகள் 2021 யூலை 01ஆம் திகதி வரை செயற்பாட்டிலிருக்கும்.

முழுவடிவம்

வழிகாட்டல் 2021: 2021 இற்கும் அதற்கு அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள்

2020ஆம் ஆண்டு எம்மில் அநேகமானோர் மிக விரைவில் மறந்துவிட வேண்டி விரும்புகின்றதொரு காலமாகும். ஏனெனில் இது பிரதானமாக கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதிலுமுள்ள மனித இனத்தின் மீது பயங்கர விளைவுகளை ஏற்படுத்தியிருந்ததாலாகும். தற்பொழுது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று, உலகப்போர்-II இன் பின்னரான மிகக் கடுமையான உலகளாவிய நெருக்கடியொன்றாகும். 2020இன் இறுதி பத்து மாத காலப்பகுதி முழுவதும் நாம் கேட்ட செய்திகளெல்லாம் துன்பம், மரணம், பயம் பற்றியவேயாகும். எமது வாழ்க்கை பெரும் அதிர்வுகளுக்குள்ளாகியிருக்கிறது. நாம் இதிலிருந்து மீண்டு எப்பொழுது வழமையான வாழ்விற்கு திரும்ப இயலுமென தெரியவில்லை. எனினும், புத்தாண்டு எமக்காகக் காத்திருக்கிறது. அத்துடன், மிக விரைவில் சிறந்ததொரு காலம் ஆரம்பமாவதற்கான உண்மையான சில சான்றுகள் காணப்படுகின்றன. 2020இன் துன்பம் நிறைந்த நினைவுகளையெல்லாம் புறம்தள்ளிவிட்டு, விதியைப் பற்றி எவர் எதனைச் சொன்னாலும் எதிர்காலத்தில் நல்லதே நடக்குமென நாம் சாதகமாக உணர்ந்து கொண்டு எம்மைச் சுற்றி நல்ல செய்திகளைப் பரவ விடுவோம்.

Pages

சந்தை அறிவிப்புகள்