Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி - 2019

நாட்டின் வர்த்தக மற்றும் நிர்வாக தலைநகரத்தை தன்னகத்தே கொண்ட மேல் மாகாணம், பொருளாதாரத்தின் முன்னோடியாக தொடர்ந்தும் விளங்கியது. எனினும் பிராந்திய ஏற்றத்தாழ்வு சுருக்கமடைவதற்கு பங்களித்து அதன் பங்கு வீழ்ச்சியடைந்தது

நாட்டின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பாரிய பங்கினை (39.1 சதவீதம்) மேல் மாகாணம் தனதாக்கிக் கொண்டது. எனினும், ஏனைய மாகாணங்களில் கிடைத்த அதிகரித்த பங்களிப்பின் காரணமாக அதன் பங்கு 2018 இலிருந்து 0.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. மத்திய (11.5 சதவீதம்) மற்றும் வடமேல் (10.7 சதவீதம்) மாகாணங்கள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளுக்கு தரப்படுத்தப்பட்டன.

புதிய துணை ஆளுநர்களை நியமித்தல்

நாணயச் சபையானது கௌரவ நிதி அமைச்சரின் ஒப்புதலுடன் திருமதி. ரி. எம். ஜே. வை. பி. பர்னாந்து மற்றும் திரு. என். டபிள்யு. ஜி. ஆர். டி. நாணயக்கார ஆகிய உதவி ஆளுநர்களை 2020 திசெம்பர் 14ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர் பதவிக்கு பதவி உயர்த்தியுள்ளது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2020 நவெம்பர்

தயாரிப்புத் துறைக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2020 நவெம்பரில் விரிவடைந்த வேளையில், பணிகள் துறைக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் மேல்நோக்கி திருப்பமடைந்த போதிலும் இன்னும் குறிப்பிடத்தக்களவு மட்டத்திற்கு கீழாகவே காணப்படுகிறது.

தயாரிப்பு கொ.மு.சுட்டெண்ணானது 2020 ஒத்தோபருடன் ஒப்பிடுகையில் 17.3 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட அதிகரிப்புடன் 2020 நவெம்பரில் 57.6 இற்கு உயர்வடைந்தது. புதிய கட்டளைகளில் குறிப்பாக புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள் அத்துடன் உணவு மற்றும் குடிபானத் துறைகளின் தயாரிப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு கணிசமான மேம்படுதலுக்கு பிரதானமாக பங்களித்துள்ளது. உற்பத்தித் துணைச் சுட்டெண்ணில், பிரதானமாக புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள் அத்துடன் உலோகமல்லாத கனிம உற்பத்திகள் துறைகளின் தயாரித்தலின் விளைவான  அதிகரிப்பானது அனைத்துத் துறைகள் முழுவதும் நிரம்பலர்களின் விநியோக நேரத்தின் வீழ்ச்சியடைதலுடன் ஒன்றிணைந்து தயாரிப்பு கொ.மு.சுட்டெண்னின் ஒட்டுமொத்த அதிகரிப்பிற்குப் பங்களித்தது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2020 ஒத்தோபர்

2020 ஒத்தோபரில் இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது ஐ.அ.டொலர் 1.0 பில்லியன் கொண்ட முதிர்வடைந்த நாட்டிற்கான பன்னாட்டு முறியினை வெற்றிகரமாக மீளச்செலுத்தியதன் மூலம் அதன் தாக்குப்பிடிக்கும் தன்மையினை எடுத்துக்காட்டியது. வர்த்தகப் பற்றாக்குறையில் தொடர்ச்சியான மேம்படுத்தல், தொழிலாளர் பணவனுப்பல்களில் அதிகரிப்பு, உள்நாட்டு  வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் ஏற்பட்ட உறுதிப்பாடு என்பன மாத காலப்பகுதியில் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றத்திற்கு துணையளித்தன. குறைவான உலகளாவிய எரிபொருள் விலைகள் மற்றும் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட இறக்குமதிக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் கீழ் இறக்குமதிகள் தொடர்ந்தும் கட்டுப்பட்டிருந்த அதேவேளை, ஒத்தோபரின் ஆரம்பம் தொடக்கம் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து உள்நாட்டு உற்பத்தி மற்றும் துணைப் பணிகளுக்கான இடையூறுகளின் காரணமாகவும் வெளிநாட்டுக் கொள்வனவாளர்களிடமிருந்து கேள்வி குறைவடைந்தமை மூலமும் 2020 ஒத்தோபரில் ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்தன. மாதகாலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்கள், தொடர்ந்தும் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது.

எஸ் அன்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ் (S&P Global Ratings) மூலம் இலங்கையின் தரப்படுத்தல் தரங்குறைக்கப்பட்டமைக்கான பதிலிறுத்தல்

இலங்கையின் நாட்டிற்கான தரப்படுத்தலினை தரங்குறைத்து எஸ் அன்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ் (S&P Global Ratings) மூலம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிதியமைச்சு பதிலிறுத்தலொன்றினை வெளியிட்டுள்ளது. இதனை கீழேயுள்ள இணைய இணைப்பில் காணலாம்.

சிறப்பு வைப்புக் கணக்குகளைத் திறப்பதற்கு செல்லுபடியான காலத்தினை நீடித்தலும் அத்தகைய கணக்குகளில் வைக்கப்பட்ட நிதிகளை இலங்கையில் வைத்திருப்பதற்கான அனுமதியும்

நாட்டில் கொவிட்-19 நோய்த்தொற்றின் தாக்கங்களை வெற்றிகொள்வதற்கான தேசிய முயற்சிக்கு ஆதரவினை நாடும் பொருட்டு இலங்கை அரசாங்கமானது 2020 ஏப்பிறல் 08ஆம் திகதியன்று சிறப்பு வைப்புக் கணக்கினை அறிமுகப்படுத்தியது. அதற்கமைய, 2020 ஒத்தோபர் 07 அன்றுள்ளவாறு சிறப்பு வைப்புக் கணக்குகளிலுள்ள மொத்த வைப்புகள் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 272 மில்லியன் தொகையாகவிருந்தது.

நாட்டினுள் கணிசமான வெளிநாட்டுச் செலாவணித் தொகையினை ஈர்ப்பதற்கு சிறப்பு வைப்புக் கணக்குகளின் சாத்தியத்தன்மையினையும் அதன் பயனாக நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலைமை மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் மீதான சாதகமான தாக்கத்தினையும் கருத்திற்கொண்டு, இலங்கை அரசாங்கமானது இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் பரிந்துரையின் மீது சிறப்பு வைப்புக் கணக்குகளைத் திறப்பதற்கு செல்லுபடியான காலப்பகுதியினை 2021 ஏப்பிறல் 07ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

Pages

சந்தை அறிவிப்புகள்