Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

மத்திய வங்கியானது 4% தொழிற்படு மூலதனக் கடன் திட்டத்தின் சலுகைக் காலப்பகுதியினை 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக நீடிக்கின்றது

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்ட தொழில்களை சீரமைக்கும் தேசிய முக்கியத்துவத்தினை இனங்கண்டு, 6 மாத காலப்பகுதியினைக் கொண்ட சலுகைக் காலம் உள்ளடங்கலாக  24 மாதங்களைக் கொண்ட மீள்கொடுப்பனவு காலப்பகுதியொன்றுடன் கூடிய ஆண்டுக்கு 4 சதவீத வட்டிவீதத்தில் தொழிற்படு மூலதனக் கடன்களை வழங்குவதற்காக சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் கடன் திட்ட வசதியினை இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையுடன் இலங்கை மத்திய வங்கி 3 கட்டங்களில் நடைமுறைப்படுத்தியது.

எவ்வாறாயினும், கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக எதிர்பார்க்கப்பட்டவாறு தமது தொழில்களை சீரமைத்துக்கொள்வதில் அநேகமான கடன்பெறுநர்கள் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே, தவறுதல் எதுவுமின்றி கடன்களை மீளச்செலுத்துவதற்கு கடன்பெறுநர்களுக்கு வசதியேற்படுத்தி ஊக்குவிக்கவேண்டிய முக்கியத்துவத்தினை பரிசீலனையில் கொண்டு இலங்கை மத்திய வங்கியானது சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் கடன்வசதியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கடன்களுக்கு ஏற்புடைய சலுகைக் காலத்தினை, கடன்பெறுநர்களால் முன்வைக்கப்படுகின்ற எழுத்திலான கோரிக்கையின் மீது மேலும் மூன்று (03) மாதங்களால் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

மத்திய வங்கி “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2020இன் முக்கிய பண்புகளும் 2021 இற்கான வாய்ப்புக்களும்” என்பதனை வெளியிடுகின்றது

இலங்கை மத்திய வங்கி,“அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2020இன் முக்கிய பண்புகளும் 2021 இற்கான வாய்ப்புக்களும்”என்பதனை இன்றைய தினம் வெளியிட்டுள்ளது. இந்தப் பிரசுரம் மத்திய வங்கியின் இணையத்தளத்தில் மூன்று மொழிகளிலும் தரவிறக்கப்படலாம்.*

பொருளாதார அபிவிருத்திகளின் கிரமமான இற்றைப்படுத்ததலுக்கு மேலதிகமாக, “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகளானது” 2020 ஒத்தோபர் நடுப்பகுதி வரையில் கிடைக்கத்தக்கதாகவுள்ள தகவல்களை கருத்திற்கொண்டு 2020 ஏப்பிறலில் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நடுத்தர கால பேரண்டப்பொருளாதார எறிவுகளுக்கான இற்றைப்படுத்தலினையும் வெளிப்படுத்துகின்றது. கொவிட்-19 உலகளாவிய நோய்ப்பரவலினால் ஏற்பட்ட பன்மடங்கு சமூகப் பொருளாதார சவால்கள் மற்றும் நிச்சயமற்றதன்மைக்கிடையில் பொருளாதாரமானது பயணிக்கின்ற முக்கியமானதொரு சந்தர்ப்பத்தில் இவ்வருடத்தின் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

அக்சிஸ் பாங்க் லிமிடெட்டிற்கு (அக்சிஸ் கொழும்புக் கிளை) வழங்கப்பட்ட உரிமத்தினை அக்சிஸ் பாங்க லிமிடெட், இந்தியாவின் கோரிக்கைக்கிணைங்க இரத்துச்செய்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை அக்சிஸ் பாங்க் லிமிடெட், இந்தியா, அதன் உலகளாவிய செயற்பாடுகள் குறித்து 2019இல் எடுக்கப்பட்ட கொள்கைத் தீர்மானத்தினைத் தொடர்ந்து மேற்கொண்ட கோரிக்கையைப் பரிசீலித்து பல நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு இலங்கையிலுள்ள அக்சிஸ் பாங்க் லிமிடெட்டின் வணிக நடவடிக்கைகளை முடிவுறுத்துவதற்கும் 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்ட விதிகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட உரிமத்தினையும் இரத்துச் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கியது.

நாணயச் சபையினால் விதிக்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கமைவாக அக்சிஸ் பாங்க் லிமிடெட்டின் செயற்பாட்டின் மீது வங்கி மேற்பார்வைத் திணைக்களப் பணிப்பாளர் திருப்தியடைவதனால் அக்சிஸ் பாங்க் லிமிடெட்டிற்கு வங்கித்தொழில் வியாபாரத்தினைக் கொண்டு நடாத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த உரிமம் 2020 ஒத்தோபர் 30 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இரத்துச் செய்யப்படுகின்றது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2020 ஒத்தோபரில் 4 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)   ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2019 ஒத்தோபரில் நிலவிய உயர் தளத்தின் புள்ளிவிபரத் தாக்கத்தின் காரணமாக 2020 ஒத்தோபரில் 4.0 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது. அதேவேளை, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 செத்தெம்பரின் 11.5 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 10.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 செத்தெம்பரின் 0.9 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 1.3 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 செத்தெம்பரின் 4.7 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 4.6 சதவீதத்திற்கு சிறிதளவு வீழ்ச்சியடைந்தது.

ஊழியர் சேமலாப நிதியத்தின் ஆர்வலர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம் தொடர்புடைய பணிகளை தடங்கலின்றி வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட ஒழுங்குகள்

இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாபத் திணைக்களமானது, கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமாக நாட்டில் நிலவிவருகின்ற கஷ்டமான நிலைமைக்கு மத்தியிலும் அதன் பணிகளை இடைத்தடங்கலின்றி வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பில் அதன் அனைத்து ஆர்வலர்களுக்கும் அறிவிக்கின்றது. மீளளிப்பு நிதியங்களைத் தீர்ப்பனவு செய்தல், பங்களிப்புச் சேகரித்தல், நிலுவை உறுதிப்படுத்தல்களை மற்றும் பங்களிப்பு வரலாற்று அறிக்கைகளை வழங்குதல் அத்துடன் பெயர் மற்றும் கணக்குத் திருத்தங்கள் போன்றன தொடர்புபட்ட பணிகள் பின்வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி லிமிடெட்டிற்கு (ஐ.சி.ஐ.சி.ஐ கொழும்புக் கிளை) வழங்கப்பட்ட உரிமத்தினை இரத்துச் செய்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி லிமிடெட் இந்தியாவின், கோரிக்கையைப் பரிசீலித்து பல நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு இலங்கையிலுள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி லிமிடெட்டின் வணிக நடவடிக்கைகளை முடிவுறுத்துவதற்கும் 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்ட விதிகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட உரிமத்தினை இரத்துச் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கியது.

Pages

சந்தை அறிவிப்புகள்