Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் தொடர்பான இரண்டாவது தேசிய இடர்நேர்வு மதிப்பீட்டின் மட்டுப்படுத்தப்பட்ட விடய அறிக்கையை இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு வெளியிடுகிறது

அரச மற்றும் தனியார் துறை பங்குதாரர்களுடன் இணைந்து இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவினால் நடாத்தப்பட்ட மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதி நிதியளித்தல் தொடர்பான 2021/2022ஆம் ஆண்டுகளுக்கான தேசிய இடர்நேர்வு மதிப்பீட்டின் மட்டுப்படுத்தப்பட்ட விடய அறிக்கையை இலங்கை வெளியிட்டது. இம்மதிப்பீடானது நாட்டிலுள்ள பணம் தூயதாக்கல்ஃபயங்கரவாதிக்கு நிதியளித்தல் இடர்நேர்வுகளை இனங்காண்பதை இலக்காகக் கொண்டது. இலங்கை எதிர்கொண்ட மிகவும் குறிப்பிடத்தக்க பணம் தூயதாக்கல்/பயங்கரவாதிக்கு நிதியளித்தல் அச்சுறுத்தல்கள், பாதிக்கப்படும் தன்மைகள் மற்றும் இடர்நேர்வுகளை இம்மதிப்பீடு எடுத்துக்காட்டுகின்றது. 

பிம்புத் பினான்ஸ் பிஎல்சி 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உரிமத்தினை இரத்துச் செய்தல்

2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட்ட நிதிக் கம்பனியான பிம்புத் பினான்ஸ் பிஎல்சி நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளையும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டின் ஒட்டுமொத்த குறிக்கோளையும் அடையும் நோக்குடன் விடுக்கப்பட்டுள்ள பல்வேறு பணிப்புரைகளையும் விதிகளையும் அத்துடன் கம்பனியின் நெருக்கடியான  நிதியியல் நிலைமையைத் தீர்க்கும் பொருட்டு பிம்புத் பினான்ஸ் பிஎல்சிக்கு விடுக்கப்பட்ட குறிப்பான பணிப்புரைகளையும் தொடர்ச்சியாக மீறி வருகின்றதுஃ முரணாக இயங்கியுள்ளது. இதன்விளைவாக, பற்றாக்குறையான மூலதன மட்டம், மோசமான சொத்துத் தரம், மற்றும் தொடர்ச்சியான இழப்புக்கள் என்பவற்றின் காரணமாக பிம்புத் பினான்ஸ் பிஎல்சியின் நிதியியல் நிலைமையும் சீர்குலைந்துள்ளன.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2023 ஓகத்தில் மேலும் மெதுவடைவொன்றை எதிர்கொண்டது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 யூலையின் 6.3 சதவீதத்திலிருந்து 2023 ஓகத்தில் 4.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இவ்வீழ்ச்சியானது, பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியினால் 2023 யூலையில் எதிர்பார்க்கப்பட்ட எறிவுகளிற்கு இசைவாக காணப்படுகின்றது.

உணவு வகையானது (ஆண்டிற்கு ஆண்டு) 2023 யூலையின் 1.4 சதவீதத்திலிருந்து 2023 ஓகத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது மாதத்திற்கும் 4.8 சதவீதத்தைப்  பதிவுசெய்தது. அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2023 யூலையின் 10.5 சதவீதத்திலிருந்து 2023 ஓகத்தில் 8.7 சதவீதத்திற்கு மேலும் வீழ்ச்சியடைந்தது. கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2023 ஓகத்தில் -0.02 சதவீதத்தைப் பதிவுசெய்தமைக்கு, உணவு வகைகளில் அவதானிக்கப்பட்ட  -0.41 சதவீதம் கொண்ட விலை வீழ்ச்சிகளின் ஒன்றிணைந்த விளைவும் உணவல்லா வகையில் பதிவுசெய்யப்பட்ட 0.39 சதவீதம் கொண்ட விலை அதிகரிப்புக்களும் காரணமாக அமைந்தன. பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2023 யூலையின் 5.9* சதவீதத்திலிருந்து 2023 ஓகத்தில் 4.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொள்கை வழிமுறைகளினதும் நன்கு நிலைநிறுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்க்கைகளினதும் விளைவொன்றாக, பணவீக்கமானது நடுத்தர காலத்தில் நடு ஒற்றை இலக்க மட்டங்களை அண்மித்து உறுதிநிலைப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2023 யூலை

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2022 யூலையுடன் ஒப்பிடுகையில் 2023 யூலையில் ஒப்பீட்டளவில் தாழ்ந்தளவிலான ஏற்றுமதி வருவாய்கள் மற்றும் உயர்ந்தளவிலான இறக்குமதிச் செலவினம் என்பவற்றின் இணைந்த தாக்கத்தின் காரணமாக விரிவடைந்தது. இருப்பினும், 2023 சனவரி தொடக்கம் யூலை வரையான காலப்பகுதியில் ஒன்றுசேர்ந்த வர்த்தகப் பற்றாக்குறையானது 2022இன் தொடர்புடைய காலப்பகுதியிலும் பார்க்க மிகவும் தாழ்ந்தளவில் தொடர்ந்தும் காணப்படுகின்றது.

தொழிலாளர் பணவனுப்பல்கள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்து காணப்பட்டதுடன் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் 2023 யூலையில் முன்னைய ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடுகையில் தொடர்ந்தும் மேம்பட்டுக் காணப்பட்டன.

2023 யூலை மாத காலப்பகுதியில் அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் குறிப்பிடத்தக்களவிலான தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தபோதிலும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை தேறிய உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தது.

மொத்த அலுவல்சார் ஒதுக்கு மட்டமானது 2023 யூலை இறுதியளவில் ஐ.அ.டொலர் 3.8 பில்லியனாகப் பதிவுசெய்யப்பட்டது.

2023 யூலையில் இலங்கை ரூபாவானது ஐ.அ.டொலரிற்கெதிராக ஓரளவு தளம்பல்தன்மையினைக் கொண்டிருந்தது.

கட்டடவாக்கத் தொழிற்துறைக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் - யூலை 2023

கட்டடவாக்கத் தொழிற்துறை 2023 யூலையில் குறைவடைந்த மட்டத்தில் தொடர்ந்தும் செயலாற்றி 43.2 கொண்ட மொத்த நடவடிக்கைச் சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. பதிலிறுப்பாளர்கள் குறிப்பிடுவதற்கமைய,  சவால்மிக்க தொழிற்துறை சூழலுக்கு மத்தியில் அநேகமான நிறுவனங்கள் உறங்குநிலையிலேயே காணப்பட்டன.  எனினும், பொருட்கள் செலவில் படிப்படியான வீழ்ச்சியானது மட்டுப்படுத்தப்பட்ட முன்னெடுக்கப்படும் கருத்திட்டங்களுக்கான ஆக்கபூர்வமான சூழலொன்றினை வழங்கியது. மேலும், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சில அரசாங்க நிதியளிக்கப்பட்ட கருத்திட்டங்கள் மாதகாலப்பகுதியில் ஓரளவு மீளத்தொடங்கப்பட்டன.

யூலையில் குறைவான வேகமாயினும் புதிய கட்டளைகள் சுருக்கமடைந்தன. வெளிநாட்டு நிதியிடப்பட்ட கருத்திட்டங்களுக்கான விலைக்கோரல் சமர்ப்பிக்கின்ற வாய்ப்புக்கள் அநேகமாக மட்டுப்படுத்தப்பட்டு காணப்படுகின்ற அதேவேளை, தனியார் சேவைநாடிகள் மேலும் செலவு குறைப்புகளுக்காக இன்னும் காத்திருக்கின்றனர் என பல பதிலிறுப்பாளர்கள் எடுத்துக்காட்டினர். மேலும், கருத்திட்டங்களை கொண்டிருக்கின்ற நிறுவனங்கள் மேலதிக இயலளவுகளை கொண்டிருப்பதனால் துணை ஒப்பந்த வாய்ப்புகளும் பற்றாக்குறையாக உள்ளன. அதேவேளை, முக்கிய அலுவலர்களை மாத்திரம் தக்கவைப்பதற்காக நிறுவனங்கள் முனைந்தமையினால் மாதகாலப்பகுதியில் தொழில் நிலையானது மேலும் வீழ்ச்சியடைந்தது. மேலும், அநேகமான நிறுவனங்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்ற நிலையில் காணப்படுகின்றமையினாலும் குறுகிய காலத் தேவைப்பாடுகளை மாத்திரம் பூர்த்திசெய்வதனாலும் கொள்வனவுகளின் அளவு மாதகாலப்பகுதியில் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, நிரம்பலர் விநியோக நேரமானது மாதகாலப்பகுதியில் உறுதியாகக் காணப்பட்டதுடன் வழங்குநர் கொடுகடன் வசதிகளும் கிடைக்கப்பெறத்தக்கனவாகவுள்ளன என சில பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்படும் மீட்சி, வட்டி வீதங்கள் மற்றும் பொருட்கள் செலவுகளில் குறைவு அத்துடன் இடைநிறுத்தப்பட்ட அரசாங்க நிதியளித்தல் கருத்திட்டங்களை மீளத்தொடங்குவது பற்றிய தற்போதைய பேச்சுவார்த்தைகள் என்பனவற்றின் பிரதான காரணமாக அடுத்துவரும் மூன்று மாதங்களை நோக்கி நிறுவனங்கள் மத்தியிலான எண்ணப்பாங்கு பரந்தளவில் சாதகமாக காணப்பட்டது.

உள்நாட்டு படுகடன் மேம்படுத்துகை நிகழ்ச்சித்திட்டம் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தல்

உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகை நிகழ்ச்சித்திட்ட நடைமுறைப்படுத்தலின் காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கத்திற்கு எதிராக இன்று, அதாவது 2023 ஓகத்து 28 அன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர்களின் பிரதிநிதிகள் என தாங்களாக கோருகின்ற ஆட்கள் குழுவொன்றினால் நடாத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போது,  எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகை மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் தொடர்புபட்ட விடயங்கள் பற்றிக்  கலந்துரையாடுவதற்காக இலங்கை மத்திய வங்கியின் அலுவலர்களுடனான சந்திப்பொன்றுக்காக கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தினூடாக கோரிக்கைவிடுத்தனர். சொல்லப்பட்ட கோரிக்கையினை பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் சொல்லப்பட்ட எதிர்ப்பில் ஈடுபட்டவர்களைப் பிரநிதித்துவப்படுத்துகின்ற ஐந்து பேருடன் இலங்கை மத்திய வங்கியின் வளாகத்தில் பி.ப. 2.30 மணிக்கு இன்றே கூட்டமொன்று கூட்டப்படவுள்ளதென கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தினூடாக எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு அறிவித்திருந்தார்.

Pages

சந்தை அறிவிப்புகள்