Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2022 ஒத்தோபர் 05ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. இத்தீர்மானத்தினை மேற்கொள்கையில் சபையானது அண்மைய பேரண்டப்பொருளாதார நிலைமைகள், எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள் மற்றும் பேரண்டப்பொருளாதார எறிவுகள் என்பவற்றினைக் பரிசீலனையில் கொண்டது. தற்போது நிலவுகின்ற இறுக்கமான நாணய நிலைமைகள், குறைவடைந்து செல்கின்ற பணவீக்கத்தின் வேகம் மற்றும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய காரணிகள் இரண்டினாலும் ஆதரவளிக்கப்பட்டு குறுகிய காலத்தில் எதிர்பார்க்கப்படும் பணவீக்க வீழ்ச்சிப் பாதை என்பவற்றினை சபை குறித்துக்காட்டியது. எதிர்வரும் காலப்பகுதியில் எதிர்பார்க்கப்டும் பணவீக்க வீழ்ச்சிப் பாதையினையடைவதற்கு நாணய நிலைமைகள் போதியளவில் இறுக்கமாகக் காணப்படுவதாக சபை அபிப்பிராயப்பட்டுள்ளது. இறுக்கமான இறை வழிமுறைகள் ஏற்கனவே நடைமுறையிலுள்ள இறுக்கமான நாணயக்கொள்கை வழிமுறைகளின் தாக்கங்களை முழுமையடையச்செய்து கூட்டுக்கேள்வி அழுத்தங்களின் ஏதேனும் கட்டியெழுப்புதலினை தணித்து அதன்மூலம் பணவீக்க எதிர்பார்க்கைகளை நிலைநிறுத்தி முதன்மைப் பணவீக்கத்தினை நடுத்தர காலத்தில் இலக்கிடப்பட்ட 4-6 சதவீத மட்டத்திற்குக் கொண்டுவருவதில் துணைபுரியும். 

ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்னை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2022 செத்தெம்பரில் 69.8 சதவீதத்தைப் பதிவுசெய்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 ஓகத்தின் 64.3 சதவீதத்திலிருந்து 2022 செத்தெம்பரில் 69.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்;கு ஆண்டு பணவீக்கத்தில் இவ்வதிகரிப்பானது உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த அதிகரிப்புக்களால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 ஓகத்தின் 93.7 சதவீதத்திலிருந்து 2022 செத்தெம்பரில் 94.9 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஓகத்தின் 50.2 சதவீதத்திலிருந்து 2022 செத்தெம்பரில் 57.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.

இலங்கை மத்திய வங்கி-ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம்-ஆசிய பசிபிக் பிரயோக பொருளியல் அமைப்பு என்பவற்றிற்கிடையிலான மூன்றாவது இணையவழிப் பேரண்டப்பொருளாதார மாநாட்டிற்கு இலங்கை மத்திய வங்கி இணை அனுசரணை வழங்கியது

இலங்கை மத்திய வங்கி-ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம்-ஆசிய பசிபிக் பிரயோக பொருளியல் அமைப்பு என்பனவற்றிற்கிடையிலான இணையவழிப் பேரண்டப்பொருளாதார மாநாட்டிற்கு தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக 2022 செத்தெம்பர் 23ஆம் திகதியன்று ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம் மற்றும் ஆசிய பசுபிக் பிரயோக பொருளியல் அமைப்புடன் கூட்டிணைந்து இலங்கை மத்திய வங்கி அனுசரணை வழங்கியது. இவ்வாண்டிற்கான கருப்பொருளானது கடந்த ஆண்டினைப் போன்று ‘பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டின் தோற்றம் பெற்றுவரும் பிரச்சனைகள்’ தொடர்பில் அமைந்திருந்தது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2022 ஓகத்தில் 70.2 சதவீதத்தைப் பதிவுசெய்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 யூலையின் 66.7 சதவீதத்திலிருந்து 2022 ஓகத்தில் 70.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு  பணவீக்கத்தின் இத்தகைய அதிகரிப்பு உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலும் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பினால் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 யூலையின் 82.5 சதவீதத்திலிருந்து 2022 ஓகத்தில் 84.6 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 யூலையின் 52.4 சதவீதத்திலிருந்து 2022 ஓகத்தில் 57.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2022 ஓகத்தில் 2.45 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. இதற்கு, முறையே 0.91 சதவீதத்தினையும் 1.53 சதவீதத்தினையும் கொண்ட உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன. அதற்கமைய, உணவு வகையினுள் உடன் மீன், முட்டை, பிஸ்கட்டுகள் மற்றும் பழங்கள் என்பவற்றின் விலைகளில் அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன. எவ்வாறாயினும், மாதகாலப்பகுதியில் பருப்பு, அரிசி மற்றும் சீனி என்பவற்றின் விலைகள் குறைவடைந்தன. மேலும், உணவல்லா வகையினுள் மாதகாலப்பகுதியில் வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள் (மின்சாரம், பராமரித்தலுக்கான பொருட்கள் மற்றும் மண்ணெண்ணை), தளபாடங்கள், வீட்டுச் சாதனங்கள் மற்றும் வழமையான வீட்டுப் பராமரிப்பு (சலவைச் சவர்க்காரம்) மற்றும் நானாவிதப் பொருட்கள் மற்றும் பணிகள் போன்ற துணை வகைகளின் விலைகளில்  அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன. போக்குவரத்து (பெற்றோல், டீசல் மற்றும் பேருந்துக் கட்டணம்) துணை வகையில் மாதகாலப்பகுதியில் வீழ்ச்சி பதிவாகியது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2022 ஓகத்து

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2022 ஓகத்தில் அதிகரித்தன

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், யூலையிலிருந்து உயர்வடைந்து 2022 ஓகத்தில் 49.6 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்தது, இருந்தும் நடுநிலையான ஆரம்ப அளவு மட்டத்திற்கு சற்றுக் கீழேயே காணப்பட்டது. முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பு என்பவற்றில் அறிக்கையிடப்பட்ட மேம்பாடுகளுடன் தயாரித்தல் நடவடிக்கைகளின் வீழ்ச்சி வீதம் குறைவடைந்த அதேவேளை, உற்பத்தியும் புதிய கட்டளைகளும் மெதுவான வேகத்தில் வீழ்ச்சியடைந்தன. மேலும், மேம்பட்ட நடமாட்டங்களுடன் வழங்குநர் விநியோக நேரம் சுருக்கமடைந்தது.

பணிகள் கொ.மு.சுட்டெண், தொடர்ச்சியாக நான்கு மாதங்களாக வீழ்ச்சியடைந்த பின்னர் 51.7 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, 2022 ஓகத்தில் வளர்ச்சிப் புலத்திற்கு திரும்பலடைந்து. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள், தொழில்நிலை மற்றும் நடவடிக்கைகளுக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புகளால் இவ்விரிவடைதல் தூண்டப்பட்டிருந்தது.

நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவிப்பை அமுல்படுத்துவதற்கு நிதியியல் உளவறிதல் பிரிவினால் நிருவாகத் தண்டப்பணங்களை விதித்தல்/ சேகரித்தல்

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட  தத்துவங்களின் பயனைக்கொண்டு,  நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்களின் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. தண்டப்பணங்கள் நிதியியல் நிறுவனங்களின் தொடர்புடைய இணங்கியொழுகாமையின் தன்மை மற்றும் கடுமை என்பனவற்றினை பரிசீலனையிற்; கொண்டு விதித்துரைக்கப்படலாம்.

அதற்கமைய, பணம் தூயதாக்குதலுகெதிரான  மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துனர் என்ற வகையில் நிதியியல் உளவறிதல் பிரிவு,  நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவிப்புக்களை அமுல்படுத்துவதற்கு கீழே குறிப்பிடப்பட்டவாறு  ரூ.1.0 மில்லியன் கொண்ட தொகையினைத் தண்டப்பணமாக விதித்துள்ளது. தண்டப்பணமாக சேகரிக்கப்பட்ட நிதி,  திரட்டு நிதியத்திற்கு வரவுவைக்கப்பட்டிருக்கிறது.

Pages

சந்தை அறிவிப்புகள்