இலங்கை மத்திய வங்கி தூய நாணயத்தாள் கொள்ளை மற்றும் இலங்கை நாணயத்தாள்களை வேண்டுமென்று சேதப்படுத்தல், மாற்றம் செய்தல் மற்றும் உருச்சிதைத்தல் மீதான ஒழுங்குவிதிகளை நடைமுறைக்கிடுவதற்காக பொதுமக்களின் அவதானத்தை ஈர்த்துள்ளது. நாணயத்தாள்களின் தரநிர்ணயத்தினைப் பேணுவதனையும் இதனூடக உண்மையான மற்றும் போலி நாணயத்தாள்களுக்கிடையிலான வேறுபடுத்தலுக்கு உதவுவதனையும் இலக்காகக் கொண்டு தூய நாணயத்தாள் கொள்கை இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கொள்கையினூடாக நாட்டின் நடத்தைப்பாங்கினை அதிகரிப்பதற்கும் நாணயத்தாள்கள் செயன்முறைப்படுத்தல் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.