Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

நட்வெல்த் செக்குறிட்டீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தினை இடைநிறுத்திவைத்தலை இரத்துச்செய்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2009ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் (முதனிலை வணிகர்கள்) ஒழுங்குவிதிகள் மற்றும் 2009ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் (முதனிலை வணிகர்கள்) ஒழுங்குவிதிகள் என்பனவற்றின் நியதிகளுக்கமைய செயற்பட்டு, 2019.11.30ஆம் திகதி பி.ப 4.30 மணியிலிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் நட்வெல்த் செக்குறிட்டீஸ் லிமிடெட் அதன் வியாபாரத்தினை மற்றும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து இடைநிறுத்தி வைத்தலை இரத்துச்செய்ய தீர்மானித்துள்ளது.

நாணயக் கொள்கை மீளாய்வு - இல. 07 - 2019

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2019 நவெம்பர் 28ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் அவற்றின் தற்போதைய மட்டமான முறையே 7.00 சதவீதத்திலும் 8.00 சதவீதத்திலும் தொடர்ந்தும் பேணுவதன் மூலம் அதன் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கையினைப் பேணுவதற்குத் தீர்மானித்திருக்கிறது. சபையானது, உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் சந்தைகள் அதேபோன்று உலகளாவிய பொருளாதாரம் என்பனவற்றின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள் என்பனவற்றை மிகக் கவனமாக ஆராய்ந்ததனைத் தொடர்ந்து இத்தீர்மானத்திற்கு வந்திருக்கிறது. நாணயச் சபையின் தீர்மானமானது, பணவீக்கத்தினை விரும்பத்தக்க மட்டமான 4-6 சதவீத வீச்சில் பேணுகின்ற வேளையில் பொருளாதாரம் நடுத்தர காலத்தில் அதன் உள்ளார்ந்த வளர்ச்சியை அடைவதற்கு உதவும் நோக்குடன் இசைந்து செல்வதாகக் காணப்படுகிறது.

த பினான்ஸ் கம்பனி பிஎல்சி மீது இலங்கை மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள்

த பினான்ஸ் கம்பனி பிஎல்சி மீது இலங்கை மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் சம்பந்தமாக 2019 நவெம்பர் 26ஆம் திகதி அன்று செய்தித்தாள் மற்றும் செய்தி வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட சில தகவல்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் கவனம் ஈர்க்கப்பட்டதுடன் இலங்கை மத்திய வங்கி பின்வருவனவற்றை தெளிவுபடுத்த விரும்புகிறது. 

2019 ஒத்தோபரில் பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013ஸ்ரீ100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 செத்தெம்பரின் 5.0 சதவீதத்திலிருந்து 2019 ஒத்தோபரில் 5.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு வகையிலுள்ள விடயங்களின் விலைகளில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்புக்கள் இவ்வதிகரிப்பிற்குப் பங்களித்தன. இதன்படி, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2019 செத்தெம்பரின் 4.9 சதவீதத்திலிருந்து 2019 ஒத்தோபரில் 7.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. எனினும், உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 4.3 சதவீதத்தினைப் பதிவுசெய்து 2019 மேயிலிருந்து அவதானிக்கப்பட்ட வீழ்ச்சியடைந்து செல்லும் அதன் போக்கினைத் தொடர்ந்தது.

முழுவடிவம்

அதேநேர கணனிவழி ஏமாற்று நடவடிக்கைகள் பற்றி கவனமாயிருங்கள் - உங்கள் வங்கிக் கடவுச்சொற்களையும் தனிப்பட்ட அடையாள இலக்கங்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

இலங்கை மத்திய வங்கி, சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளத்தினை அடிப்படையாகக் கொண்ட பிரயோகங்க;டாக பல்வேறு வகையான நிதியியல் மோசடிகளும் ஏமாற்று வேலைகளும் தொழிற்படுத்தப்பட்டு வருகின்றமை தொடர்பான தகவல்களைப் பெற்றிருக்கிறது. அண்மைக் காலமாக இவ்வகையிலான ஏமாற்று நடவடிக்கைகள் அதிகரித்து வருவது அவதானிக்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய ஏமாற்று நடவடிக்கைகளில் பெரும்பாலானவை பொதுமக்களைக் கவரதத்தக்க இலகுவான கடன் திட்டங்க;டாக மேற்கொள்ளப்படுகின்றன. அத்தகைய மோசடியான கடன் ஒப்புதல் செய்முறைகளின் போது மோசடியாளர்கள் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு இலக்கம் மற்றும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட அடையாள இலக்கம் போன்ற வாடிக்கையாளர்களின் இரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் பொதுமக்களை வசீகரித்துக் கொள்வர். அதன் பின்னர் மோசடியாளர்கள் அத்தகைய இரகசியத் தகவல்களை வாடிக்கையாளர்களின் கணக்குகளை அணுகுவதற்கும் பயன்படுத்திக் கொண்டு வாடிக்கையாளரின் பணத்தினை திருடிக் கொள்வர்.

பிட்ஜ் ரேட்டிங்கினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கத்திற்கு மத்திய வங்கி அதன் வலுவான ஆட்சேபனையினைத் தெரிவித்துக் கொள்கிறது

சனாதிபதி தேர்தலின் பெறுபேறுகள், அதனைத் தொடர்ந்து மேதகு சனாதிபதி கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டமை மற்றும் தற்பொழுது இடம்பெற்று வருகின்ற முக்கிய நியமனங்கள் என்பனவற்றிற்கான சாதகமான சந்தைப் பதிலிறுப்புக்களுக்கு முற்றுமுழுதாக மாறான தன்மையினை எடுத்துக்காட்டும் விதத்தில் “இலங்கையின் தேர்தல் பெறுபேறு கொள்கையின் நிச்சயமற்ற தன்மையினை அதிகரிக்கிறது” என்ற மகுடத்தின் கீழ் 2019 நவெம்பர் 21ஆம் திகதி பிட்ஜ் ரேட்டிங்கினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு மத்திய வங்கி அதன் வலுவான ஆட்சேபனையினைத் தெரிவித்துக்கொள்கிறது.

Pages

சந்தை அறிவிப்புகள்