இலங்கை மத்திய வங்கி, அதன் 2025 ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் கொடுப்பனவு ஊக்குவிப்புப் பிரச்சாரத்தின் தொடராக 2025 ஓகத்து 1 ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 7.00 மணி வரை தம்புள்ளை பிராந்தியத்தில் தம்புள்ளை விஷேட பொருளாதார மையத்தில் டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஊக்குவிப்பினை முன்னெடுக்கவுள்ளது. இந்நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர். முனைவர். பி நந்தலால் வீரசிங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஏனைய அலுவலர்கள் கலந்துகொள்கிறார்கள்.
















