Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

2020 பெப்புருவரியில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் அதிகரித்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 சனவரியின் 7.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2020 பெப்புருவரியில் 8.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, 2019 பெப்புருவரியில் காணப்பட்ட தாழ்ந்த தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கத்தினால் உந்தப்பட்டது. மேலும், 2020 பெப்புருவரியில் உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 16.3 சதவீதமாகக் காணப்பட்ட வேளையில் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2.1 சதவீதத்தினைப் பதிவுசெய்தது.

2020 மாச்சு 23ஆம் நாளன்று வங்கிகளின் தொழிற்பாடுகள்

பொதுமக்களுக்கு வங்கித்தொழில் பணிகளை வழங்கும்பொருட்டு பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் 2020 மாச்சு 23ஆம் நாளன்று குறைந்த இரண்டு (2) மணி நேரம் தமது கிளைகளைத் திறந்துவைக்குமாறு அனைத்து உரிமம்பெற்ற வங்கிகளையும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளையும் இலங்கை மத்திய வங்கி கோரியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியானது கொரோனா வைரஸ் (கொவிட் - 19) நோய்த்தொற்றுப் பரவுதலினால் ஏற்படக்கூடிய வெளிநாட்டுச் செலாவணி வீதம் மீதான அழுத்தத்தினை இலகுபடுத்தவும் மற்றும் நிதியியல் சந்தைக் குழப்பத்தைத் தடுப்பதற்கும் அவசரமான வழிமுறைகளை அறிமுகப்படுத்துகின்றது

1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டம், 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டம் மற்றும் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டம் என்பனவற்றின் ஒதுக்கங்களின் அடிப்படையில், இலங்கை மத்திய வங்கியானது கொரோனா வைரஸ் (கொவிட் - 19) நோய்த்தொற்றுப் பரவுதலினால் ஏற்படக்கூடிய வெளிநாட்டுச் செலாவணி வீதம் மீதான அழுத்தத்தினை இலகுபடுத்தவும் மற்றும் நிதியியல் சந்தைக் குழப்பத்தைத் தடுப்பதற்கும் பல்வேறு வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
 

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2020 பெப்புருவரி

2020 பெப்புருவரியில் தயாரிப்புக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மெதுவான வேகத்தில் அதிகரித்து 53.6 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தமைக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸின் நோய்ப் பரவலின் காரணமாக புதிய கட்டளைகளிலும் தொழில்நிலையில் விரிவாக்கத்தில் வேகம் குறைந்த அதேவேளை, அடுத்த மூன்று மாதங்களுக்கான எதிர்பார்க்கைகள் கணிசமாகக் குறைவடைந்தமை முக்கிய காரணமாக அமைந்தது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்ப் பரம்பலின் காரணமாக புதிய வியாபார நடவடிக்கை மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட மெதுவான விரிவடைதல் மூலம் துணையளிக்கப்பட்டு 2020 பெப்புருவரியில் பணிகள் துறை விரிவாக்கமானது 2020 சனவரியுடன் ஒப்பிடுகையில் மெதுவடைந்தது.

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பொது விடுமுறை காலத்தில் இலங்கை மத்திய வங்கியினால் பின்பற்றப்படும் வழிமுறைகள்

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பொது விடுமுறைக் காலத்தின் போது இலங்கை மத்திய வங்கியினால் பின்வரும் வழிமுறைகள் பின்பற்றப்படுமென இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறியத்தருகின்றது.

இலங்கை மத்திய வங்கியானது, கொரோனா வைரஸ் (கொவிட் - 19) தொற்றுநோய்ப் பரவலுக்கு மத்தியில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் நாணயக் கொள்கையினை மேலும் இலகுபடுத்துகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2020 மாச்சு 16ஆம் திகதி அதன் நாணயக் கொள்கை நிலைப்பாடு தொடர்பாக நடைபெற்ற அவசரக்கூட்டத்தில், 2020 மாச்சு 17ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையூம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையூம் 25 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 6.25 சதவீதத்திற்கும் 7.25 சதவீதத்திற்கும் குறைப்பதற்கும் தற்பொழுதுள்ள ஒதுக்கு பேணப்படுகின்ற காலப்பகுதியில் நடைமுறைக்குவரும் வகையில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் சார்ந்த வைப்புப் பொறுப்புக்களுக்குமான நியதி ஒதுக்கு விகிதத்தினை 1.00 சதவீதப் புள்ளியினால் 4.00 சதவீதத்திற்கும் குறைப்பதற்கும் தீர்மானித்துள்ளது. உலகளாவிய ரீதியில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட் - 19) தொற்றுநோய் பரவல் மற்றும் அதன் இலங்கை மீதான சாத்தியமான பரவலுடனும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அவசரமாக ஆதரவளிக்கும்; தேவைப்பாட்டினைக் கருத்திற்கொண்டு நாணயச் சபையானது இத்தீர்மானத்திற்கு வந்துள்ளது.

முழு வடிவம்

Pages

சந்தை அறிவிப்புகள்