Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

உரிமம் பெற்ற வங்கிகளின் பணிப்பாளர் சபைக்கான “தாக்குப்பிடிக்கும் விதத்தில் முன்னேறுதல்” என்ற தலைப்பிலான தொழில்நுட்ப அமர்வு

டிஜிட்டல் யுகத்தில் சவால்களை முனைப்புடன் எதிர்கொள்ளக்கூடிய வலுவானதும் இயலாற்றல் மிக்கதுமான வங்கித்தொழில் துறையை உறுதிப்படுத்தும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியானது இலங்கையில் தொழிற்படும் அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளினதும் பணிப்பாளர் சபை, முதன்மை நிறைவேற்று அலுவலர்கள் மற்றும் முக்கிய முகாமைத்துவ ஆளணியினர்களின் அறிவு மட்டங்களை மேலும் மேம்படுத்த தொழில்நுட்ப அமர்வொன்றை “தாக்குபிடிக்கும் விதத்தில் முன்னேறுதல்” என்ற தலைப்பில் 2018 நவெம்பர் 14ஆம் திகதியன்று ராஜகிரியவிலுள்ள வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வுநிலையத்தில் ஒழுங்குசெய்தது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு - ஒத்தோபா் 2018

தயாரிப்பு துறை கொ.மு.சுவின் அனைத்து துணைச்சுட்டெண்களும்  செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் ஒத்தோபரில் நடுநிலையான 50.0இற்கு மேலான பெறுமதியை பதிவு செய்து ஒட்டுமொத்த விரிவாக்கத்தினை காண்பித்தது. ஒத்தோபரில் தயாரிப்பு நடவடிக்கைகளில் அவதானிக்கப்பட்ட மேம்பாடானது பிரதானமாக புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்திகளிலான மேம்பாடொன்றினால்உந்தப்பட்டது. இதற்கு, விசேடமாக உணவு மற்றும் குடிபான தயாரிப்பு நடவடிக்கைகளில் பருவகால கேள்வி மீதான சாதகமான தோற்றப்பாடு செல்வாக்கு செலுத்தியிருந்தது. பருவகால போக்குடன் உணவு மற்றும் குடிபான தயாரிப்பு நடவடிக்கைகளில் தொழில்நிலையானது அதிகரித்திருந்த போதிலும், ஒட்டுமொத்த தொழில்நிலையானது மெதுவடைந்திருந்தது. இதற்கு,புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அதனுடன் சார்ந்த தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு சந்தையிலிருந்து தொழிலாளர்களை தேர்வு செய்வதில் உள்ள சிக்கல்கள் பிரதானமாக சான்று கூறின.

நிதியியல் ரீதியான ஏமாற்று/ மோசடியாக தகவல்களைப் வழங்கும் மின்னஞ்சல்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாகவிருக்குமாறு இலங்கை மத்திய வங்கி கோருகின்றது

மோசடியான தகவல்களைப் வழங்குகின்ற மின்னஞ்சல்கள்/ சமூக வலைத்தள செய்திகளூடாக பரப்பப்படுகின்ற நிதியியல் ஏமாற்றுகள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் அண்மைக்கால வருத்தத்திற்குரிய முறைப்பாடுகள் மீது இலங்கை மத்திய வங்கியின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. நம்பகமான நிறுவனமொன்றிலிருந்து அத்தகைய மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதாக ஏமாற்றி பொதுமக்களிடமிருந்து பணம் வசூலிப்பதற்காக இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகக் கட்டடத்தின் புகைப்படம், இலச்சினை, இலங்கை மத்திய வங்கியின் மூத்த அலுவலர்களின் பெயர்கள் என்பன மோசடிக்காரர்கள் மற்றும் ஏமாற்றுபவர்களால் பயன்படுத்தப்பட்டு வருவதனை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளது. 

நாணயக் கொள்கை மீளாய்வு: இல.7 - 2018

மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2018 நவெம்பர் 13இல் நடைபெற்ற அதனது கூட்டத்தில் வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்புப் பொறுப்புக்களின் மீது பிரயோகிக்கப்படுகின்ற நியதி ஒதுக்கு விகிதத்தை 1.50 சதவீதப் புள்ளிகளால் 6.00 சதவீதமாகக் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது. இந்தக் குறைப்பின் தாக்கத்தை நடுநிலைப்படுத்தும் நோக்கிலும் அதன் நடுநிலையான நாணயக் கொள்கை நிலைப்பாட்டைப் பேணுவதற்காகவும் நாணயச் சபையானது மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தை 75 அடிப்படைப் புள்ளிகளால் 8.00 சதவீதத்திற்கும் மத்திய வங்கியின் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தை 50 அடிப்படைப் புள்ளிகளால் 9.00 சதவீதத்திற்கும் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

பொருளாதாரமானது அதன் உள்ளார்ந்த நிலையை அடைந்து கொள்வதனை இயலுமைப்படுத்தும் வகையில் நடுத்தர காலத்தில் பணவீக்கத்தை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் உறுதிப்படுத்துகின்ற பரந்த நோக்குடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பொருளாதாரங்கள் மற்றும் உள்நாட்டு நிதியியல் சந்தையின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளின் கவனமான பகுப்பாய்வினைத் தொடர்ந்து நாணயச் சபையானது இத்தகைய தீர்மானத்திற்கு வந்துள்ளது.

இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்திருக்கிறது

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு, பணம் தூயதாகக்ல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடல் மற்றும் ஏனைய குற்றங்களுடன் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குத்தொடுத்தலுடன் தொடர்பான புலனாய்வு தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக, 2018 நவெம்பர் 01ஆம் நாளன்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை இலங்கை மத்திய வங்கியில் செய்து கொண்டது.  

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திரு. ஏ. எச். கே. ஜெகத் சந்திரசிறி அவர்களும் நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளா ;திரு. டி. எம். ரூபசிங்க அவர்களும் தொடர்பான நிறுவனங்களின் சார்பில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் பணம் தூயதாகக்லுக்குகெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் என்பனவற்றிற்கான தேசிய இணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர் இந்திரஜித் குமாரசுவாமியின் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். 

 

புதிய துணை ஆளுநர்களின் நியமனம்

நாணயச் சபையானது கௌரவ நிதி அமைச்சின் உடன்பாட்டுடன் உதவி ஆளுநர்களான  திரு. எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் எச்.ஏ. கருணாரத்ன ஆகியோரை 2018 ஒத்தோபர் 31ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர்களாக பதவியுயர்த்தியுள்ளது. 

Pages

சந்தை அறிவிப்புகள்