டிஜிட்டல் யுகத்தில் சவால்களை முனைப்புடன் எதிர்கொள்ளக்கூடிய வலுவானதும் இயலாற்றல் மிக்கதுமான வங்கித்தொழில் துறையை உறுதிப்படுத்தும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியானது இலங்கையில் தொழிற்படும் அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளினதும் பணிப்பாளர் சபை, முதன்மை நிறைவேற்று அலுவலர்கள் மற்றும் முக்கிய முகாமைத்துவ ஆளணியினர்களின் அறிவு மட்டங்களை மேலும் மேம்படுத்த தொழில்நுட்ப அமர்வொன்றை “தாக்குபிடிக்கும் விதத்தில் முன்னேறுதல்” என்ற தலைப்பில் 2018 நவெம்பர் 14ஆம் திகதியன்று ராஜகிரியவிலுள்ள வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வுநிலையத்தில் ஒழுங்குசெய்தது.