சார்க் பரஸ்பரபரிமாற்றல் வசதியின் கீழ் இலங்கை மத்திய வங்கிக்கு ஐ.அ.டொலர் 400 மில்லியனை வழங்குவதற்கு இந்திய றிசேர்வ் வங்கி உடன்பட்டிருக்கிறது.
இலங்கை மத்திய வங்கிக்கும் இந்திய றிசேர்வ் வங்கிக்குமிடையிலான ஐ.அ.டொலர் 1 பில்லியன் கொண்ட இருபுடை பரஸ்பரபரிமாற்றல் ஒழுங்குசெய்வதற்கான கோரிக்கையொன்றினை இலங்கை மத்திய வங்கி விடுத்திருக்கிறது. இது பரிசீலனையின் கீழ் இருந்து வருகிறது.
இலங்கைக்குப் போதுமான வெளிநாட்டு ஒதுக்குகளைப் பேணுவதற்கு ஆதரவளிப்பதன் மூலம் முதலீட்டாளர் நம்பிக்கையினை உத்வேகப்படுத்துவதற்கு இந்திய றிசேர்வ் வங்கி விரைந்து உரிய நேரத்தில் உதவுகின்ற அதேவேளையில் இறக்குமதிகள், படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் போன்ற வெளிப்பாய்ச்சல்கள் மற்றும் அவசியமானவிடத்து ஒழுங்குமுறையற்ற சீராக்கங்களைத் தவிர்ப்பதற்கு நாணயத்திற்கான ஆதரவு போன்ற வசதிகளையும் வழங்குகிறது.