2019இல் நடைபெறவிருக்கும் ஈகோன் ஐகோன் தொடர் IV தொலைக்காட்சி வினாடி வினாப் போட்டி நிகழ்ச்சிக்காக சிறந்த 16 பாடசாலைக் குழுக்களை (சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலம் ஒவ்வொன்றுக்கும்) தெரிவு செய்வதற்கு மத்திய வங்கியின் தொடர்பூட்டல் திணைக்களமானது மத்திய வங்கியின் பிரதேச அலுவலகங்களுடன் இணைந்து எழுத்துமூலப் பரீட்சையொன்றினை நடாத்தியது. இப்பரீட்சையானது நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட நிலையங்களில் 2019 சனவரி 22 அன்று சமகாலத்தில் நடாத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டப் பாடசாலைகளிலிருந்தும் க.பொ.த உயர்தர மாணவர் குழுக்கள் பங்கேற்றன. மாவட்ட ரீதியில் புள்ளிகளின் அடிப்டையில் முதலாவது இடத்தைப் பெற்ற குழுக்களின் பாடசாலைகளுடைய பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.