Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2019 யூலை

2019 யூலையில் தயாரிப்பு நடவடிக்கைகள் மேலும் உயர்ந்த வீதத்தில் விரிவடைந்து 55.7 கொண்ட பெறுமதிச் சுட்டெண் ஒன்றினைப் பதிவுசெய்தன. இதுஇ 2019 யூனுடன் ஒப்பிடுகையில் 1.8 சுட்டெண் புள்ளிகளைக் கொண்டதொரு அதிகரிப்பாகும். தயாரிப்புஇ கொள்வனவு முகாமைத்துவச் சுட்டெண்ணில் ஏற்பட்ட விரிவிற்கு புதிய கட்டளைகளிலும் அதனைத் தொடர்ந்து உற்பத்தியிலும்இ குறிப்பாகஇ உணவு மற்றும் குடிபானத் துறையின் தயாரிப்பில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். புதிய கட்டளைகளில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்பான இடையூறுகளிலிருந்து பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்தமையே காரணமாகும். அதேவேளைஇ யூலை மாதகாலப்பகுதியில் தொழில்நிலை மெதுவான வீதத்தில் அதிகரித்த போதும் புடவை மற்றும் ஆடை தொழில்துறையிலுள்ள பல பதிலிறுப்பாளர்கள் இம்மாத காலப்பகுதியில் தாம் உயர்ந்த வீத தொழிலாளர் புரள்வினை எதிர்நோக்கியமையினை முக்கியமாகக் குறிப்பிடுகின்றனர்.

முதனிலை வணிகர் தொடர்பான ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கை - பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி

பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல்கள் அடிப்படையான செயற்பாட்டிற்கிணங்க, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில் 2019 ஓகத்து 15ஆம் திகதி மு.ப. 10 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சியின் முதனிலை வணிகர் அலகினை அதன் முதனிலை வணிகர் வியாபாரம் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இடைநிறுத்தலை மேலும் ஆறு மாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்குத் தீர்மானித்திருக்கிறது.

இவ்வொழுங்குப்படுத்தல் நடவடிக்கையானது அரச பிணையங்களுக்கான முதனிலை ஏலங்களை  பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி அணுகுவதனை இடைநிறுத்துகின்றது என்பதனை இலங்கை மத்திய வங்கி வலியுறுத்த விரும்புகின்றது. இது பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சியின் ஏனைய நடவடிக்கைகள்ஃ பணிகளில் எந்தவித தாக்கத்தினையும் ஏற்படுத்தாது.

முனைவர் (திருமதி) துஷ்னி வீரகோன் நாணயச் சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்

முனைவர் (திருமதி) துஷ்னி வீரகோன், 2019 யூலை 29ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும்வகையில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முனைவர் (திருமதி) துஷ்னி வீரகோன், இலங்கை கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் அதன் பேரண்டப் பொருளாதாரக் கொள்கை ஆராய்ச்சித் தலைவருமாவார்.   அவர், தனது முனைவர் பட்டத்தினை நிறைவு செய்து 1994இல் இலங்கை கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனத்தில் இணைந்ததுடன் பேரண்ட பொருளாதாரக் கொள்கை, பிராந்திய வர்த்தக ஒருங்கிணைப்பு மற்றும் பன்னாட்டுப் பொருளாதாரங்கள் தொடர்பில் பரந்தளவில் எழுதி வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்பான மற்றும் பத்திரமான இலத்திரனியல் கொடுப்பனவு நடைமுறைகளைப் பின்பற்றுதல்

வாடிக்கையாளரின் நடைமுறை மற்றும் சேமிப்பு கணக்குகளிலிருந்தும் அதேபோன்று அட்டைக் கொடுப்பனவு வசதிகளிலிருந்தும் அதேநேர வங்கிகளுக்கிடையிலான நிதியியல் மாற்றல்கள் போன்ற இலத்திரனியல் கொடுப்பனவு (இ-கொடுப்பனவு) முறைகள் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த சௌகரியத்தினை வழங்குகின்றன. வாடிக்கையாளர் நிதியங்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு இலங்கையின் கொடுப்பனவு முறைமைகளும் உட்கட்டமைப்பும் பன்னாட்டு பாதுகாப்புத் தரநியமங்களுக்கு ஏற்றவிதத்தில் காணப்படுகின்றன. இவ்வசதிகளைத் தொடர்ச்சியாக அனுபவிக்கும் பொருட்டு இ-கொடுப்பனவுகளை மேற்கொள்ளுகின்றபோது போதியளவு பாதுகாப்பான வழிமுறைகளை வாடிக்கையாளர் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கமைய, தமது நடைமுறை அல்லது சேமிப்பு கணக்குகளை, கொடுப்பனவு அட்டைகளை அல்லது இலத்திரனியல் பணப்பைகளை (இ-பணப்பை) அணுகுவதற்கு மற்றும் பயன்படுத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய எவையேனும் தகவல்களைப் பகிருகின்றபோது வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

2019 யூனில் பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 மேயின் 3.5 சதவீதத்திலிருந்து 2019 யூனில் 2.1 சதவீதத்திற்கு குறைவடைந்தமைக்கு முன்னைய ஆண்டின் தொடர்பான மாதத்தில் காணப்பட்ட உயர்ந்த தளமே காரணமாகும். இதேவேளையில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் உணவு மற்றும் உணவல்லாப் பணவீக்கம் இரண்டும் 2019 யூனில் முறையே -0.4 சதவீதத்திலிருந்தும் 6.7 சதவீதத்திலிருந்து  -2.9 சதவீதமாகவும் 6.2 சதவீதமாகவும் குறைவடைந்தன.  

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2019 யூனில் 2.0 சதவீதமாக மாற்றமின்றி காணப்பட்டது. 

சிறிய மற்றும் நடுத்தர நிறுவனத்துறைக்கான கடன் விகிதங்களை குறைத்து கடன் பாய்ச்சலை அதிகரிப்பதற்கான வழிவகைகள்

நிதித் துறை மூலம் நாணயக் கொள்கையை துரிதப்படுத்தவும், பொதுவாக கடன் சாதனங்களின் மற்றும் குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வட்டி வீதத்தை உரிமம்பெற்ற வங்கிகள் குறைப்பதற்கும் அதனூடாக உண்மைப் பொருளாதாரத்திற்கான கடன் பாய்ச்சலை அதிகரிக்கவும் இலங்கை மத்திய வங்கி உரிமம்பெற்ற வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களை வைப்புக்களுக்கான வட்டி வீதங்களை 29.04.2019 இலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் குறைப்பதற்கு கோரியுள்ளது. அதன்படி உரிமம்பெற்ற வங்கிகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 3 மாதத்திற்கும் குறைவான காலப்பகுதியைக் கொண்ட சேமிப்பு வைப்புக்கள் மற்றும் ஏனைய வைப்புக்களுக்கான வட்டி வீதம் துணைநில் வைப்பு வசதி வீதத்துடனும் நீண்ட காலப்பகுதிக்குரியவை 364 நாள் திறைசேரி உண்டியல் வீதத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. 

Pages

சந்தை அறிவிப்புகள்