நிதியியல் உளவறிதல் பிரிவின் மூலம் 2021ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் நிதியியல் நிறுவனங்கள் மீது இணங்குவித்தலினை அமுல்படுத்துவதற்கான தண்டங்களை விதித்தல்

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டு நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்காமைக்காக நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டங்கள் விதிக்கப்படுகின்றன. தண்டமானது நிதியியல் நிறுவனத்தின் அல்லது பெயர்குறிக்கப்பட்ட நிதியல்லாத் தொழிலின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் கடுமை என்பவற்றைப் பரிசீலனையில்கொண்டு குறித்துரைக்கப்படக்கூடியதாகும்.

அதற்கமைய, நாட்டில் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாத நிதியளித்தலை ஒழித்தலுக்கான ஒழுங்குமுறைப்படுத்துநராக நிதியியல் உளவறிதல் பிரிவானது இணங்குவித்தலினை அமுல்படுத்துவதற்கு நிதியியல் நிறுவனங்கள் மீது 2021 சனவரி 01 தொடக்கம் மாச்சு 31 வரையான காலப்பகுதிக்காக மொத்தமாக ரூ.4.0 மில்லியன் தொகையுடைய தண்டங்களை விதித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அனுமதிப் பரிசோதனைகள், வாடிக்கையாளரை இனங்காணுதல் மற்றும் உறுதிப்படுத்தல், சந்தேகத்திற்கிடமான கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடுதல் அத்துடன் முறையான இடர்நேர்வுக் கட்டுப்பாடுகள் மற்றும் தணிப்பு வழிமுறைகளை நடைமுறைப்படுத்தல் என்பன தொடர்பில் 2016ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நிதியியல் நிறுவனங்கள் (வாடிக்கையாளர் உரிய விழிப்புக்கவனம்) விதிகளின் மீறுகைகள் மீது தண்டங்கள் முக்கியமாக விதிக்கப்பட்டிருந்தன.

2021 சனவரி 01 தொடக்கம் 2021 மாச்சு 31 வரை நிதியியல் உளவறிதல் பிரிவினால் விதிக்கப்பட்ட தண்டங்களின் விபரங்கள் பின்வருமாறு:

விதிக்கப்பட்ட திகதி நிறுவனம் தொகை (ரூபா)
2021 சனவரி 20 கன்றிச் பினான்ஸ் லிமிடெட் 1,000,000.00
2021 பெப்புருவரி 18 கொமர்ஷல் பாங்க் ஒவ் சிலோன் பிஎல்சி 3,000,000.00

 

 

 

 

 

 

Published Date: 

Wednesday, May 19, 2021