Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2020 பெப்புருவரி

2020 பெப்புருவரியில் தயாரிப்புக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மெதுவான வேகத்தில் அதிகரித்து 53.6 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தமைக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸின் நோய்ப் பரவலின் காரணமாக புதிய கட்டளைகளிலும் தொழில்நிலையில் விரிவாக்கத்தில் வேகம் குறைந்த அதேவேளை, அடுத்த மூன்று மாதங்களுக்கான எதிர்பார்க்கைகள் கணிசமாகக் குறைவடைந்தமை முக்கிய காரணமாக அமைந்தது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்ப் பரம்பலின் காரணமாக புதிய வியாபார நடவடிக்கை மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட மெதுவான விரிவடைதல் மூலம் துணையளிக்கப்பட்டு 2020 பெப்புருவரியில் பணிகள் துறை விரிவாக்கமானது 2020 சனவரியுடன் ஒப்பிடுகையில் மெதுவடைந்தது.

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பொது விடுமுறை காலத்தில் இலங்கை மத்திய வங்கியினால் பின்பற்றப்படும் வழிமுறைகள்

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பொது விடுமுறைக் காலத்தின் போது இலங்கை மத்திய வங்கியினால் பின்வரும் வழிமுறைகள் பின்பற்றப்படுமென இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறியத்தருகின்றது.

இலங்கை மத்திய வங்கியானது, கொரோனா வைரஸ் (கொவிட் - 19) தொற்றுநோய்ப் பரவலுக்கு மத்தியில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் நாணயக் கொள்கையினை மேலும் இலகுபடுத்துகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2020 மாச்சு 16ஆம் திகதி அதன் நாணயக் கொள்கை நிலைப்பாடு தொடர்பாக நடைபெற்ற அவசரக்கூட்டத்தில், 2020 மாச்சு 17ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையூம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையூம் 25 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 6.25 சதவீதத்திற்கும் 7.25 சதவீதத்திற்கும் குறைப்பதற்கும் தற்பொழுதுள்ள ஒதுக்கு பேணப்படுகின்ற காலப்பகுதியில் நடைமுறைக்குவரும் வகையில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் சார்ந்த வைப்புப் பொறுப்புக்களுக்குமான நியதி ஒதுக்கு விகிதத்தினை 1.00 சதவீதப் புள்ளியினால் 4.00 சதவீதத்திற்கும் குறைப்பதற்கும் தீர்மானித்துள்ளது. உலகளாவிய ரீதியில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட் - 19) தொற்றுநோய் பரவல் மற்றும் அதன் இலங்கை மீதான சாத்தியமான பரவலுடனும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அவசரமாக ஆதரவளிக்கும்; தேவைப்பாட்டினைக் கருத்திற்கொண்டு நாணயச் சபையானது இத்தீர்மானத்திற்கு வந்துள்ளது.

முழு வடிவம்

“2020 - டிஜிட்டல் கொடுக்கல்வாங்கல்கள் ஆண்டு” ஊக்குவிப்புப் பிரசாரத்தினை தொடங்கி வைத்தல்

“2020 - டிஜிட்டல் கொடுக்கல்வாங்கல்கள் ஆண்டு” ஊக்குவிப்புப் பிரசாரம், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் அவர்களினால் 2020 மாச்சு 11ஆம் திகதியன்று சிரேஷ்ட வங்கியாளர்கள், வங்கியல்லா நிதி நிறுவனங்களின் அலுவலர்கள், மத்திய வங்கி அலுவலர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்களின் பங்கேற்புடன் இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் தொடங்கிவைக்கப்பட்டது. ஆரம்ப வைபவத்தைத் தொடர்ந்து இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. டி. குமாரதுங்க, “Cash වදේ” என்ற காசுத் தொல்லை பற்றிய விளம்பரப் பிரசாரத்தினை அறிமுகம் செய்தார். பணத்தைப் பயன்படுத்துவதன் காரணமாக திருட்டுப் போகும் இடர்நேர்வு அல்லது வரிசைகளில் காத்திருந்து நேரத்தை விரையமாக்குதல் போன்றன காரணமாக நுகர்வோரும் வர்த்தகர்களும் எதிர்கொள்கின்ற இன்னல்களை இவ்விளம்பரப் பிரசாரம் எடுத்துக்காட்டுகின்றது.

பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான கொடுகடன் ஆதரவு

நாட்டில் பொருளாதார வளர்ச்சியினை துரிதப்படுத்தும் நோக்குடன் வங்கித்தொழில் துறையின் தகைமையுடைய சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சிக் கடன் பெறுநர்களுன்கென விசேட கொடுகடன் ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, வங்கியல்லா நிதி நிறுவனங்கள் துறை கடன் பெறுநர்களுக்கும் நன்மைகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தினைக் கருத்திற்கொண்டு வங்கியல்லா நிதி நிறுவனங்களுக்கும் இதனையொத்த திட்டமொன்றினை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. 

அதற்கமைய, இலங்கை மத்திய வங்கியானது பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான கொடுகடன் ஆதரவு என்ற 2020ஆம் ஆண்டின் 01ஆம் இலக்கச் சுற்றறிக்கையில் குறித்துரைக்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் 2019.12.31 அன்று உள்ளவாறு செயலாற்றமற்றவையாக ஏற்கனவே வகைப்படுத்தப்பட்ட வருமானம் ஈட்டுகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற தனிப்பட்டவர்களுக்கும் நிறுவனங்களுக்குமென விசேட கொடுகடன் ஆதரவுத் திட்டமொன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. 

நாணயக் கொள்கை மீளாய்வு: இல.2 - 2020

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2020 மாச்சு 04ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 6.50 சதவீதம் மற்றும் 7.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்கும் இதன்மூலம் அதன் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்வதற்கும் தீர்மானித்தது. சபையானது, உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் சந்தை அதேபோன்று உலகளாவிய பொருளாதாரம் என்பனவற்றின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகள் என்பனவற்றை மிகக் கவனமாக ஆய்வு செய்தமையினைத் தொடர்ந்து இத்தீர்மானத்திற்கு வந்துள்ளது. பணவீக்கத்தினை 4–6 சதவீத வீச்சிற்குள் பேணும் நோக்குடன் நாணயச் சபையின் தீர்மானம் இசைவானதாகக் காணப்படும் அதேவேளையில் இது நடுத்தர காலத்தில் பொருளாதார வளர்ச்சி தனது உள்ளாற்றலை எய்துவதற்கு ஆதரவளிக்கும்.  

Pages

சந்தை அறிவிப்புகள்